207 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கீடு
கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்
ராமநாதபுரம்,செப்.10-
ராமநாதபுரம் மாவட்டத் தில் ரம்ஜான் பண்டிகை யையொட்டி 207 பள்ளி வாசல்களுக்கு 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித்தார்.
ரம்ஜான் பண்டிகை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தினத்தந்தி நிருபரிடம் கூறிய தாவது:- ராமநாதபுரம் மாவட் டத்தில் ரம்ஜான் பண்டி கையையொட்டி பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக சலுகை விலையில் பச்சரிசி ஒதுக்கீது செய்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் 7 தாலுகாக்களுக்கு உட்பட்ட 207 பள்ளிவாசல்களுக்கு 6 லட்சத்து 46 ஆயிரத்து 950 கிலோ பச்சரிசி வழங்கப்பட் டுள்ளது.
ராமநாதபுரம் தாலுகாவில் 85 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 650 கிலோவும், கடலாடி தாலுகா வில் 3 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 850 கிலோவும், திருவாடானை தாலுகாவில் உள்ள 34 பள்ளி வாசல்களுக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட் டுள்ளது.
பரமக்குடி
இதேபோல பரமக்குடி தாலுகாவில் 22 பள்ளிவாசல் களுக்கு 61 ஆயிரத்து 350 கிலோவும், முதுகுளத்தூர் தாலுகாவில் 18 பள்ளி வாசல் களுக்கு 1 லட்சத்து 42 ஆயி ரத்து 800 கிலோவும், கமுதி தாலுகாவில் 13 பள்ளி வாசல் களுக்கு 24 ஆயிரத்து 150 கிலோவும், ராமேசுவரம் தாலுகாவில் 5 பள்ளி வாசல் களுக்கு 8 ஆயிரத்து 550 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
Wednesday, September 10, 2008
Tuesday, September 9, 2008
10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா
10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா
கமுதி, செப். 8: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு, கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவிற்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ். சாகுல்ஹமீது தலைமை வகித்தார். சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர். சிவலிங்கம் வரவேற்றார்.
2007-2008-ம் ஆண்டில், கமுதி வட்டார அளவில் பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் சாதனை புரிந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான எம். ஜெரினா பேகம் (கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி), சுந்தரவடிவேல் (நீராவி தேவாங்கர் மேனிலைப் பள்ளி), அனிதா (கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், வட்டார நிர்வாகிகள் எஸ். நாகேந்திரன், ஏ.கே. சாகுல்ஹமீது, ரவிச்சந்திரன், ஞானசங்கர், பொன்ராஜ், வள்ளியம்மாள், இளமுருகன், மாரிப்பாண்டி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வட்டாரச் செயலர் எஸ். முத்து நன்றி கூறினார்.
கமுதி, செப். 8: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு, கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவிற்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ். சாகுல்ஹமீது தலைமை வகித்தார். சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர். சிவலிங்கம் வரவேற்றார்.
2007-2008-ம் ஆண்டில், கமுதி வட்டார அளவில் பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் சாதனை புரிந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான எம். ஜெரினா பேகம் (கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி), சுந்தரவடிவேல் (நீராவி தேவாங்கர் மேனிலைப் பள்ளி), அனிதா (கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், வட்டார நிர்வாகிகள் எஸ். நாகேந்திரன், ஏ.கே. சாகுல்ஹமீது, ரவிச்சந்திரன், ஞானசங்கர், பொன்ராஜ், வள்ளியம்மாள், இளமுருகன், மாரிப்பாண்டி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வட்டாரச் செயலர் எஸ். முத்து நன்றி கூறினார்.
Sunday, September 7, 2008
இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவல்
சென்னை, செப்.7-
சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிரான அமைப்பு
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் `பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்ïஸ்' (எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சுவாமி பூமானந்தாவை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு உள்ள இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னை கிளை தொடக்கம்
மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது, தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரம் இமேஜ் கலையரங்கில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக நாடுகள் பயப்படும் அளவுக்கு இந்திய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்கநெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்கநெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
டெல்லியில் மாநாடு
இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
ரூ.64 லட்சம் கோடி
சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் ஆகும். அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வங்கியில் போட்டாலே வட்டியே பல கோடி வரும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் செலுத்த தேவையில்லை. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும்.
இவ்வாறு சுவாமி பூமானந்தா கூறினார்.
ஊழலை ஒழிக்க முடியும்
மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறியதாவது:-
ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்றால் முடியும். முடியாது என்று நினைத்தால் முடியாது. ஊழலை ஒழிப்பதற்கு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியல் ஊழல்தான்.
தேர்தல் நடைமுறையை திருத்தி அமைக்காவிட்டால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இந்தியாவில் 900-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. வருமான வரிவிலக்கு பெறுவதற்காக லெட்டர்பேட் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள்.
இந்தியர்கள் பட்டியல்
சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான்.
இவ்வாறு விட்டல் கூறினார்.
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் கூறும்போது, "டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை தினசரி சுமார் 81/2 லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரெயில் நிலையங்களையும், ரெயில் வளாகத்தையும் தூய்மையாக வைத்திருப்பது பற்றி இந்த அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவல்
சென்னை, செப்.7-
சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிரான அமைப்பு
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் `பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்ïஸ்' (எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சுவாமி பூமானந்தாவை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு உள்ள இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னை கிளை தொடக்கம்
மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது, தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரம் இமேஜ் கலையரங்கில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக நாடுகள் பயப்படும் அளவுக்கு இந்திய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்கநெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்கநெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
டெல்லியில் மாநாடு
இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
ரூ.64 லட்சம் கோடி
சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் ஆகும். அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வங்கியில் போட்டாலே வட்டியே பல கோடி வரும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் செலுத்த தேவையில்லை. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும்.
இவ்வாறு சுவாமி பூமானந்தா கூறினார்.
ஊழலை ஒழிக்க முடியும்
மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறியதாவது:-
ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்றால் முடியும். முடியாது என்று நினைத்தால் முடியாது. ஊழலை ஒழிப்பதற்கு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியல் ஊழல்தான்.
தேர்தல் நடைமுறையை திருத்தி அமைக்காவிட்டால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இந்தியாவில் 900-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. வருமான வரிவிலக்கு பெறுவதற்காக லெட்டர்பேட் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள்.
இந்தியர்கள் பட்டியல்
சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான்.
இவ்வாறு விட்டல் கூறினார்.
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் கூறும்போது, "டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை தினசரி சுமார் 81/2 லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரெயில் நிலையங்களையும், ரெயில் வளாகத்தையும் தூய்மையாக வைத்திருப்பது பற்றி இந்த அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
Monday, September 1, 2008
கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்
கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்
கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா இணைந்து சுதந்திர தின விழா,தேசிய விழிப்புணர்வு விழா, மத நல்லிணக்க விழா, இளைஞர் எழுச்சி விழாஆகியவற்றை கொண்டாடும் நோக்கமாக ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.
இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.நகர் பிரமுகர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர் தேவர் உறவின்முறை தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர் சி.பி.நாகராஜன் வரவேற்புரையாற்றினார்.தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் சுவாமிநாதன்,கடலாடி ஒன்றிய குழு தலைவர் த.ராஜசேகர்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் என்.கே.முனியசாமிபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்க செயலாளர் கவிஞர் செ.செந்தில்,தேசிய வலிமை மாத இதழ் ஆலோசகர் கோச்சடை முத்துராமலிங்கம்,நேதாஜி தேசிய இயக்க செயலாளர் பொறியாளர் சு.க.கமல் ஆனந்த்,சுதந்திர போராட்ட தியாகி முனியசாமி,முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்,காங்கிரஸ் பிரமுகர் ரு.முத்துராமலிங்கம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யம் பெருமாள்,கடலாடி வர்த்தக சங்க தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ராமலிங்கம்,த.சக்திவேல்,சி.பி.எம்.தாலுகா செயலாளர் வி.மயில்வாகணன்,முன்னால் இளாஞர் நற்பணி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மன்ற செயலாளர் முகாரா என்ற ராமர் தொடக்கம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2007_2008ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அரியநாச்சி,10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சசிரேகா மற்றும் பேச்சுப்போட்டி,கவிதை,கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,காமராஜர் நர்சரி பள்ளி,சரஸ்வதி வித்யாலயா மாணவ_மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏழை எளிய மாணவ_மாணவிகளுக்கு மன்றத்தின் சார்பாக ஈலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.
இவ்விழாவின்போது சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் ஆண்களா? பெண்களா என்ற தலைப்பில் சிந்தறை பட்டிமன்றம் நடைபெற்றது.ஆண்களே என்ற தலைப்பில் ஜாஹிர்உசேன்,கார்த்திகேயனும், பெண்களே என்ற தலைப்பில் துரைப்பாண்டியன்,காஜாமுகைதீன் ஆகியோர் வாதாடியதில் நடுவர் லட்சுமணன் ஆண்களே சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.
பல மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திராளாக கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் மன்ற நிராவாக குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றியுரை நிகழ்த்தினார்.
கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா இணைந்து சுதந்திர தின விழா,தேசிய விழிப்புணர்வு விழா, மத நல்லிணக்க விழா, இளைஞர் எழுச்சி விழாஆகியவற்றை கொண்டாடும் நோக்கமாக ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.
இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.நகர் பிரமுகர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர் தேவர் உறவின்முறை தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர் சி.பி.நாகராஜன் வரவேற்புரையாற்றினார்.தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் சுவாமிநாதன்,கடலாடி ஒன்றிய குழு தலைவர் த.ராஜசேகர்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் என்.கே.முனியசாமிபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்க செயலாளர் கவிஞர் செ.செந்தில்,தேசிய வலிமை மாத இதழ் ஆலோசகர் கோச்சடை முத்துராமலிங்கம்,நேதாஜி தேசிய இயக்க செயலாளர் பொறியாளர் சு.க.கமல் ஆனந்த்,சுதந்திர போராட்ட தியாகி முனியசாமி,முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்,காங்கிரஸ் பிரமுகர் ரு.முத்துராமலிங்கம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யம் பெருமாள்,கடலாடி வர்த்தக சங்க தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ராமலிங்கம்,த.சக்திவேல்,சி.பி.எம்.தாலுகா செயலாளர் வி.மயில்வாகணன்,முன்னால் இளாஞர் நற்பணி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மன்ற செயலாளர் முகாரா என்ற ராமர் தொடக்கம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2007_2008ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அரியநாச்சி,10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சசிரேகா மற்றும் பேச்சுப்போட்டி,கவிதை,கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,காமராஜர் நர்சரி பள்ளி,சரஸ்வதி வித்யாலயா மாணவ_மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏழை எளிய மாணவ_மாணவிகளுக்கு மன்றத்தின் சார்பாக ஈலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.
இவ்விழாவின்போது சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் ஆண்களா? பெண்களா என்ற தலைப்பில் சிந்தறை பட்டிமன்றம் நடைபெற்றது.ஆண்களே என்ற தலைப்பில் ஜாஹிர்உசேன்,கார்த்திகேயனும், பெண்களே என்ற தலைப்பில் துரைப்பாண்டியன்,காஜாமுகைதீன் ஆகியோர் வாதாடியதில் நடுவர் லட்சுமணன் ஆண்களே சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.
பல மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திராளாக கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் மன்ற நிராவாக குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றியுரை நிகழ்த்தினார்.
முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது
முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது
முதுகுளத்தூர் அருகே பொதுமக்கள் கூடக்கூடிய இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசிய ஒருவரை போலூலீசார் கைது செய்தனர்.
முதுகளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்நதவர் கருப்பையாமகன் கருப்புச்சாமி ஆவார்.இவர் புளியங்குடி கிராமத்தில் பொதுமக்கள் நிற்கக்கூடிய இடத்தில் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதனால் அதே கிராமத்தை சேர்ந்த பழனி மகன் வேல்ச்சாமி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புச்சாமியை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே பொதுமக்கள் கூடக்கூடிய இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசிய ஒருவரை போலூலீசார் கைது செய்தனர்.
முதுகளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்நதவர் கருப்பையாமகன் கருப்புச்சாமி ஆவார்.இவர் புளியங்குடி கிராமத்தில் பொதுமக்கள் நிற்கக்கூடிய இடத்தில் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதனால் அதே கிராமத்தை சேர்ந்த பழனி மகன் வேல்ச்சாமி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புச்சாமியை கைது செய்தனர்.
Sunday, August 31, 2008
அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்
அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்
கமுதி அருகே அச்சங் குளத்தில் மூடிக்கிடக்கும் நூற்பாலையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக முருக வேல் எம்.எல்.ஏ., தெரி வித்தார்.
நூற்பாலை
கமுதி அருகே உள்ள அச் சங்குளத்தில் அரசு சார்பில் கூட்டுறவு நூற்பு மில் எம்.ஜி. ஆர். முதல் அமைச்சராக இருந்த போது மத்திய மந்திரி யாக இருந்த மரகதம் சந்திர சேகர் திறந்து வைத்தார்.
இந்த நூற்பாலை மூலம் 500 பேருக்கு நேரடியாவும், 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. நல்ல லாபத்துடன் இயங்கி வந்த இந்த மில் நாள டைவில் நிர்வாகத்தில் ஏற் பட்ட குளறுபடி காரண மாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மூடப்பட்டது.
நடவடிக்கை
இந்நிலையில் மூடப்பட்ட அச்சங்குளம் கூட்டுறவு நூற் பாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அங்கு பணியாற் றிய ஊழியர்கள் முதல் அமைச் சர் கருணாநிதி மற்றும் சட்ட மன்ற உறுதிமொழி குழுவினரி டம் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து சட்டமன்ற உறுதிமொழி குழுவில் இடம் பெற்றிருந்த முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல் தமி ழக கைத்தறி துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
உடனே இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நூற்பாலையை விரைவில் திறக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள் ளதாக முருகவேல் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
கமுதி அருகே அச்சங் குளத்தில் மூடிக்கிடக்கும் நூற்பாலையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக முருக வேல் எம்.எல்.ஏ., தெரி வித்தார்.
நூற்பாலை
கமுதி அருகே உள்ள அச் சங்குளத்தில் அரசு சார்பில் கூட்டுறவு நூற்பு மில் எம்.ஜி. ஆர். முதல் அமைச்சராக இருந்த போது மத்திய மந்திரி யாக இருந்த மரகதம் சந்திர சேகர் திறந்து வைத்தார்.
இந்த நூற்பாலை மூலம் 500 பேருக்கு நேரடியாவும், 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. நல்ல லாபத்துடன் இயங்கி வந்த இந்த மில் நாள டைவில் நிர்வாகத்தில் ஏற் பட்ட குளறுபடி காரண மாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மூடப்பட்டது.
நடவடிக்கை
இந்நிலையில் மூடப்பட்ட அச்சங்குளம் கூட்டுறவு நூற் பாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அங்கு பணியாற் றிய ஊழியர்கள் முதல் அமைச் சர் கருணாநிதி மற்றும் சட்ட மன்ற உறுதிமொழி குழுவினரி டம் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து சட்டமன்ற உறுதிமொழி குழுவில் இடம் பெற்றிருந்த முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல் தமி ழக கைத்தறி துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
உடனே இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நூற்பாலையை விரைவில் திறக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள் ளதாக முருகவேல் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
Labels:
அச்சங்குளம்,
தகவல்,
நடவடிக்கை,
நூற்பாலை,
முருகவேல் எம்.எல்.ஏ.
Saturday, August 30, 2008
Subscribe to:
Posts (Atom)

