Thursday, December 20, 2007

முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் முதல் முறையாக ஒட்டக குர்பானி


முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் முதல் முறையாக ஒட்டக குர்பானி

முதுகுளத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியின் காரணமாக 21.12.2007 வெள்ளிக்கிழமையன்று தியாகத் திருநாளையட்டி கூட்டுக்குர்பானி திட்டத்தின் கீழ் முதல் முறையாக ஒட்டக குர்பானி கொடுக்கப்பட இருக்கிறது.

இது நமதூரில் முதல் முயற்சி என்பதால் பொதுமக்களும், சிறுவர்களும் ஆர்வமுடன் வந்து ஒட்டகத்தை பார்த்துச் செல்கின்றனர்.


ஆதாரம் :

நாங்கள் நபி ( ஸல் ) அவர்களுடன் பயணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. அப்போது நாங்கள் ஒரு மாட்டில் ஏழு நபர்களும், ஒரு ஒட்டகத்தில் பத்து நபர்களும் கூட்டாகிக் கொண்டோம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ( ரலி )
நூல் : திர்மிதி

தகவல் : யாசின், சாலிஹா ஸ்டோர், பலசரக்கு வியாபாரம், முதுகுளத்தூர்.