தமிழக கிரிக்கெட் அணி தேர்வுக்கு முதுகுளத்தூர் மாணவர் பரிந்துரை
ராமநாதபுரம் மாவட்ட 17 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் ஒன் மாணவர் கவாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழக அணிக்காக திருச்சியில் நடைபெறும் தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர் கவாஸ்கரை தலையாசிரியர் ஏ. முஹம்மது சுலைமான், உதவித்தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குறைசி, ஆசிரியர்கள் ஹெச். ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்டோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
மேலும் இம்மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
Thursday, July 17, 2008
முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க கூட்டம்
முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க கூட்டம்
முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துரை ஊழியர் சங்க அமைப்புக்கூட்டம் செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. கிராமபபுரத்தில் வேலை செய்யும் துப்புறவுத் தொழிலாளர்க்கு குறைந்த பட்ச கூலி ரூ. 3 ஆயிரம் வழங்கவேண்டும், அனைத்து துப்புரவு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சீருடை வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளராக அய்யாத்துரை, தாலுகா செயலாளராக சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவராக கோவிந்தசாமி, விவசாய சங்க தாலுகா செயலாளராக பி.கே. முருகேசன், தலைவராக செபஸ்தியான், செயலாளராக செந்தில், பொருளாளராக பாண்டி, துணைத்தலைவராக பாண்டியன், துணைச் செயலாளராக சி.சிறுவன் தேர்வு செய்யப்பட்டனர்.
Labels:
உள்ளாட்சித்துறை,
ஊழியர்,
கூட்டம்,
சங்கம்,
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார் முருகவேல் எம்.எல்.ஏ.
முதுகுளத்தூரில் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார் முருகவேல் எம்.எல்.ஏ.
முதுகுளத்தூரில் உள்ள பெரியார் நகர், கந்தசாமிபுரம் இப்பகுதிகளில் உள்ள பாலங்கள், ரோடுகள் சேதம் அடைந்திருந்தன. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனையடுத்து முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பாலம் கட்ட நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டினர்.
அதேபோல் முதுகுளத்தூரில் உள்ள கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூரில் உள்ள பெரியார் நகர், கந்தசாமிபுரம் இப்பகுதிகளில் உள்ள பாலங்கள், ரோடுகள் சேதம் அடைந்திருந்தன. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனையடுத்து முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பாலம் கட்ட நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டினர்.
அதேபோல் முதுகுளத்தூரில் உள்ள கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Labels:
எம்.எல்.ஏ.,
ஒதுக்கீடு,
நிதி,
பாலம்,
முதுகுளத்தூர்,
முருகவேல்
Subscribe to:
Posts (Atom)