Sunday, August 31, 2008

அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்

அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்

கமுதி அருகே அச்சங் குளத்தில் மூடிக்கிடக்கும் நூற்பாலையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக முருக வேல் எம்.எல்.ஏ., தெரி வித்தார்.

நூற்பாலை

கமுதி அருகே உள்ள அச் சங்குளத்தில் அரசு சார்பில் கூட்டுறவு நூற்பு மில் எம்.ஜி. ஆர். முதல் அமைச்சராக இருந்த போது மத்திய மந்திரி யாக இருந்த மரகதம் சந்திர சேகர் திறந்து வைத்தார்.

இந்த நூற்பாலை மூலம் 500 பேருக்கு நேரடியாவும், 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. நல்ல லாபத்துடன் இயங்கி வந்த இந்த மில் நாள டைவில் நிர்வாகத்தில் ஏற் பட்ட குளறுபடி காரண மாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மூடப்பட்டது.

நடவடிக்கை

இந்நிலையில் மூடப்பட்ட அச்சங்குளம் கூட்டுறவு நூற் பாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அங்கு பணியாற் றிய ஊழியர்கள் முதல் அமைச் சர் கருணாநிதி மற்றும் சட்ட மன்ற உறுதிமொழி குழுவினரி டம் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து சட்டமன்ற உறுதிமொழி குழுவில் இடம் பெற்றிருந்த முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல் தமி ழக கைத்தறி துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

உடனே இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நூற்பாலையை விரைவில் திறக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள் ளதாக முருகவேல் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.