Sunday, November 14, 2010

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி

பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரவு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது 234 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டது அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரியை உருவாக்குது பெரிய விசயமல்ல.. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ க்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சரியான பதில் வருமா? உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மின்னஞ்சல் முகவரி

1Acharapakkam
mlaacharapakkam@tn.gov.in
2Alandur
mlaalandur@tn.gov.in
3Alangudi
mlaalangudi@tn.gov.in
4Alangulam
mlaalangulam@tn.gov.in
5Ambasamudram
mlaambasamudram@tn.gov.in
6Anaicut
mlaanaicut@tn.gov.in
7Andhiyur
mlaandhiyur@tn.gov.in
8Andimadam
mlaandimadam@tn.gov.in
9Andipatti
mlaandipatti@tn.gov.in
10AnnaNagar
mlaannanagar@tn.gov.in
11Arakkonam
mlaarakkonam@tn.gov.in
12Arantangi
mlaarantangi@tn.gov.in
13Aravakurichi
mlaaravakurichi@tn.gov.in
14Arcot
mlaarcot@tn.gov.in
15Ariyalur
mlaariyalur@tn.gov.in
16Arni
mlaarni@tn.gov.in
17Aruppukottai
mlaaruppukottai@tn.gov.in
18Athoor
mlaathoor@tn.gov.in
19Attur
mlaattur@tn.gov.in
20Avanashi
mlaavanashi@tn.gov.in
21Bargur
mlabargur@tn.gov.in
22Bhavani
mlabhavani@tn.gov.in
23Bhavanisagar
mlabhavanisagar@tn.gov.in
24Bhuvanagiri
mlabhuvanagiri@tn.gov.in
25Bodinayakkanur
mlabodinayakkanur@tn.gov.in
26Chengalpattu
mlachengalpattu@tn.gov.in
27Chengam
mlachengam@tn.gov.in
28Chepauk
mlachepauk@tn.gov.in
29Cheranmahadevi
mlacheranmahadevi@tn.gov.in
30Cheyyar
mlacheyyar@tn.gov.in
31Chidambaram
mlachidambaram@tn.gov.in
32Chinnasalem
mlachinnasalem@tn.gov.in
33CoimbatoreEast
mlacoimbatoreeast@tn.gov.in
34CoimbatoreWest
mlacoimbatorewest@tn.gov.in
35Colachel
mlacolachel@tn.gov.in
36Coonoor
mlacoonoor@tn.gov.in
37Cuddalore
mlacuddalore@tn.gov.in
38Cumbum
mlacumbum@tn.gov.in
39Dharapuram
mladharapuram@tn.gov.in
40Dharmapuri
mladharmapuri@tn.gov.in
41Dindigul
mladindigul@tn.gov.in
42Edapadi
mlaedapadi@tn.gov.in
43Egmore
mlaegmore@tn.gov.in
44Erode
mlaerode@tn.gov.in
45Gingee
mlagingee@tn.gov.in
46Gobichettipalayam
mlagobichettipalayam@tn.gov.in
47Gudalur
mlagudalur@tn.gov.in
48Gudiyatham
mlagudiyatham@tn.gov.in
49Gummidipundi
mlagummidipundi@tn.gov.in
50Harbour
mlaharbour@tn.gov.in
51Harur
mlaharur@tn.gov.in
52Hosur
mlahosur@tn.gov.in
53Ilayangudi
mlailayangudi@tn.gov.in
54Jayankondam
mlajayankondam@tn.gov.in
55Kadaladi
mlakadaladi@tn.gov.in
56Kadayanallur
mlakadayanallur@tn.gov.in
57Kalasapakkam
mlakalasapakkam@tn.gov.in
58Kancheepuram
mlakancheepuram@tn.gov.in
59Kandamangalam
mlakandamangalam@tn.gov.in
60Kangayam
mlakangayam@tn.gov.in
61Kanniyakumari
mlakanniyakumari@tn.gov.in
62Kapilamalai
mlakapilamalai@tn.gov.in
63Karaikudi
mlakaraikudi@tn.gov.in
64Karur
mlakarur@tn.gov.in
65Katpadi
mlakatpadi@tn.gov.in
66Kattumannarkoil
mlakattumannarkoil@tn.gov.in
67Kaveripattinam
mlakaveripattinam@tn.gov.in
68Killiyoor
mlakilliyoor@tn.gov.in
69Kinathukadavu
mlakinathukadavu@tn.gov.in
70Kolathur
mlakolathur@tn.gov.in
71Kovilpatti
mlakovilpatti@tn.gov.in
72Krishnagiri
mlakrishnagiri@tn.gov.in
73Krishnarayapuram
mlakrishnarayapuram@tn.gov.in
74Kulithalai
mlakulithalai@tn.gov.in
75Kumbakonam
mlakumbakonam@tn.gov.in
76Kurinjipadi
mlakurinjipadi@tn.gov.in
77Kuttalam
mlakuttalam@tn.gov.in
78Lalgudi
mlalalgudi@tn.gov.in
79MaduraiCentral
mlamaduraicentral@tn.gov.in
80MaduraiEast
mlamaduraieast@tn.gov.in
81MaduraiWest
mlamaduraiwest@tn.gov.in
82Maduranthakam
mlamaduranthakam@tn.gov.in
83Manamadurai
mlamanamadurai@tn.gov.in
84Mangalore
mlamangalore@tn.gov.in
85Mannargudi
mlamannargudi@tn.gov.in
86Marungapuri
mlamarungapuri@tn.gov.in
87Mayiladuturai
mlamayiladuturai@tn.gov.in
88Melmalaiyanur
mlamelmalaiyanur@tn.gov.in
89Melur
mlamelur@tn.gov.in
90Mettupalayam
mlamettupalayam@tn.gov.in
91Mettur
mlamettur@tn.gov.in
92Modakkurichi
mlamodakkurichi@tn.gov.in
93Morappur
mlamorappur@tn.gov.in
94Mudukulathur
mlamudukulathur@tn.gov.in
95Mugaiyur
mlamugaiyur@tn.gov.in
96Musiri
mlamusiri@tn.gov.in
97Mylapore
mlamylapore@tn.gov.in
98Nagapattinam
mlanagapattinam@tn.gov.in
99Nagercoil
mlanagercoil@tn.gov.in
100Namakkal
mlanamakkal@tn.gov.in
101Nanguneri
mlananguneri@tn.gov.in
102Nannilam
mlanannilam@tn.gov.in
103Natham
mlanatham@tn.gov.in
104Natrampalli
mlanatrampalli@tn.gov.in
105Nellikkuppam
mlanellikkuppam@tn.gov.in
106Nilakottai
mlanilakottai@tn.gov.in
107Oddanchatram
mlaoddanchatram@tn.gov.in
108Omalur
mlaomalur@tn.gov.in
109Orathanad
mlaorathanad@tn.gov.in
110Ottapidaram
mlaottapidaram@tn.gov.in
111Padmanabhapuram
mlapadmanabhapuram@tn.gov.in
112Palacode
mlapalacode@tn.gov.in
113Palani
mlapalani@tn.gov.in
114Palayamkottai
mlapalayamkottai@tn.gov.in
115Palladam
mlapalladam@tn.gov.in
116Pallipattu
mlapallipattu@tn.gov.in
117Panamarathupatti
mlapanamarathupatti@tn.gov.in
118Panruti
mlapanruti@tn.gov.in
119Papanasam
mlapapanasam@tn.gov.in
120Paramakudi
mlaparamakudi@tn.gov.in
121ParkTown
mlaparktown@tn.gov.in
122Pattukkottai
mlapattukkottai@tn.gov.in
123Pennagaram
mlapennagaram@tn.gov.in
124Perambalur
mlaperambalur@tn.gov.in
125Perambur
mlaperambur@tn.gov.in
126Peranamallur
mlaperanamallur@tn.gov.in
127Peravurani
mlaperavurani@tn.gov.in
128Periyakulam
mlaperiyakulam@tn.gov.in
129Pernambut
mlapernambut@tn.gov.in
130Perundurai
mlaperundurai@tn.gov.in
131Perur
mlaperur@tn.gov.in
132Pollachi
mlapollachi@tn.gov.in
133Polur
mlapolur@tn.gov.in
134Pongalur
mlapongalur@tn.gov.in
135Ponneri
mlaponneri@tn.gov.in
136Poompuhar
mlapoompuhar@tn.gov.in
137Poonamallee
mlapoonamallee@tn.gov.in
138Pudukkottai
mlapudukkottai@tn.gov.in
139Purasawalkam
mlapurasawalkam@tn.gov.in
140Radhapuram
mlaradhapuram@tn.gov.in
141Rajapalayam
mlarajapalayam@tn.gov.in
142Ramanathapuram
mlaramanathapuram@tn.gov.in
143Ranipet
mlaranipet@tn.gov.in
144Rasipuram
mlarasipuram@tn.gov.in
145Rishivandiyam
mlarishivandiyam@tn.gov.in
146Dr.RadhakrishnanNagar
mlarknagar@tn.gov.in
147Royapuram
mlaroyapuram@tn.gov.in
148Saidapet
mlasaidapet@tn.gov.in
149Salem -I
mlasalem1@tn.gov.in
150Salem-II
mlasalem2@tn.gov.in
151Samayanallur
mlasamayanallur@tn.gov.in
152Sankaranayanarkoil
mlasankaranayanarkoil@tn.gov.in
153Sankarapuram
mlasankarapuram@tn.gov.in
154Sankari
mlasankari@tn.gov.in
155Sathyamangalam
mlasathyamangalam@tn.gov.in
156Sattangulam
mlasattangulam@tn.gov.in
157Sattur
mlasattur@tn.gov.in
158Sedapatti
mlasedapatti@tn.gov.in
159Sendamangalam
mlasendamangalam@tn.gov.in
160Sholavandan
mlasholavandan@tn.gov.in
161Sholinghur
mlasholinghur@tn.gov.in
162Singanallur
mlasinganallur@tn.gov.in
163Sirkazhi
mlasirkazhi@tn.gov.in
164Sivaganga
mlasivaganga@tn.gov.in
165Sivakasi
mlasivakasi@tn.gov.in
166Sriperumbudur
mlasriperumbudur@tn.gov.in
167Srirangam
mlasrirangam@tn.gov.in
168Srivaikuntam
mlasrivaikuntam@tn.gov.in
169Srivilliputhur
mlasrivilliputhur@tn.gov.in
170Talavasal
mlatalavasal@tn.gov.in
171Tambaram
mlatambaram@tn.gov.in
172Taramangalam
mlataramangalam@tn.gov.in
173Tenkasi
mlatenkasi@tn.gov.in
174Thalli
mlathalli@tn.gov.in
175Thandarambattu
mlathandarambattu@tn.gov.in
176Thanjavur
mlathanjavur@tn.gov.in
177Theni
mlatheni@tn.gov.in
178Thirumangalam
mlathirumangalam@tn.gov.in
179Thirumayam
mlathirumayam@tn.gov.in
180Thirupparankundram
mlathirupparankundram@tn.gov.in
181Thiruvattar
mlathiruvattar@tn.gov.in
182Thiruverambur
mlathiruverambur@tn.gov.in
183Thiruvidamarudur
mlathiruvidamarudur@tn.gov.in
184Thiruvonam
mlathiruvonam@tn.gov.in
185Thiruvottiyur
mlathiruvottiyur@tn.gov.in
186Thondamuthur
mlathondamuthur@tn.gov.in
187Thottiam
mlathottiam@tn.gov.in
188Tindivanam
mlatindivanam@tn.gov.in
189Tiruchendur
mlatiruchendur@tn.gov.in
190Tiruchengode
mlatiruchengode@tn.gov.in
191Tirunavalur
mlatirunavalur@tn.gov.in
192Tirunelveli
mlatirunelveli@tn.gov.in
193Tiruppattur-194
mlatiruppattur194@tn.gov.in
194Tiruppattur-41
mlatiruppattur41@tn.gov.in
195Tirupporur
mlatirupporur@tn.gov.in
196Tiruppur
mlatiruppur@tn.gov.in
197Tiruthuraipundi
mlatiruthuraipundi@tn.gov.in
198Tiruttani
mlatiruttani@tn.gov.in
199Tiruvadanai
mlatiruvadanai@tn.gov.in
200Tiruvaiyaru
mlatiruvaiyaru@tn.gov.in
201Tiruvallur
mlatiruvallur@tn.gov.in
202Tiruvannamalai
mlatiruvannamalai@tn.gov.in
203Tiruvarur
mlatiruvarur@tn.gov.in
204TheagarayaNagar
mlatnagar@tn.gov.in
205Tiruchirapalli-I
mlatrichy1@tn.gov.in
206Tiruchirapalli-II
mlatrichy2@tn.gov.in
207Triplicane
mlatriplicane@tn.gov.in
208Tuticorin
mlatuticorin@tn.gov.in
209Udagamandalam
mlaudagamandalam@tn.gov.in
210Udumalpet
mlaudumalpet@tn.gov.in
211Ulundurpet
mlaulundurpet@tn.gov.in
212Uppiliyapuram
mlauppiliyapuram@tn.gov.in
213Usilampatti
mlausilampatti@tn.gov.in
214Uthiramerur
mlauthiramerur@tn.gov.in
215Valangiman
mlavalangiman@tn.gov.in
216Valparai
mlavalparai@tn.gov.in
217Vandavasi
mlavandavasi@tn.gov.in
218Vaniyambadi
mlavaniyambadi@tn.gov.in
219Vanur
mlavanur@tn.gov.in
220Varahur
mlavarahur@tn.gov.in
221Vasudevanallur
mlavasudevanallur@tn.gov.in
222Vedaranyam
mlavedaranyam@tn.gov.in
223Vedasandur
mlavedasandur@tn.gov.in
224Veerapandi
mlaveerapandi@tn.gov.in
225Vellakoil
mlavellakoil@tn.gov.in
226Vellore
mlavellore@tn.gov.in
227Vilathikulam
mlavilathikulam@tn.gov.in
228Vilavancode
mlavilavancode@tn.gov.in
229Villivakkam
mlavillivakkam@tn.gov.in
230Villupuram
mlavillupuram@tn.gov.in
231Virudhunagar
mlavirudhunagar@tn.gov.in
232Vridhachalam
mlavridhachalam@tn.gov.in
233Yercaud
mlayercaud@tn.gov.in
234ThousandLights
mlathousandlights@tn.gov.in

Monday, August 9, 2010

வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்?

வெற்றிமேல் வெற்றி உன்னைத் தொடர என்ன செய்ய வேண்டும்?

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=269

என் சமீபத்திய(ஜூலை, 2010) அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான்டியாகோ நகரில் தமிழ் முஸ்லிம் தொண்டு நிறுவன நண்பர் சாதிக் அவர்களைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘நமது சமுதாய இளைஞர்களிடையே நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதுங்கள’ என்று கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோள் உண்மைதான் என்று சமீபத்திய பிளஸ் 2 பரிட்சையில் முஸ்லிம் மாணவிகள் அபார வெற்றி யடைந்தது போன்று மாணவர்கள் சோபிக்க வில்லை. உதாரணத்திற்கு நெல்லையைச் சார்ந்த கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த மாணவி யாஸ்மின் மாநிலத்திலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது போல பணத்தினைக் கொட்டி பல்வேறு டூயூஷன் வைத்தாலும் மாணவர்கள் சிறப்புடன் வெற்றியடைவில்லை. இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிப்பரீட்சை எழுதிய 170 மாணவிகளும் 117 பத்தாம் வகுப்பு எழுதிய மாணவிகளும் வெற்றியடைந்திருப்பது பாராட்டலுக்குரியது. ஆனால் ஆண்கள் படிக்கும் தமிழக பள்ளிகளின் வெற்றி சதவீதம் பாராட்டுவதுக்குரியதாக இல்லை. கல்வியறிஞர் ‘யாஸ்பால’ அறிக்கைப்படி நாட்டில் பள்ளி இறுதி வகுப்பு எழுதிய 70 லட்ச மாணவர்களில் வெறும் 30 லட்சம் பேர்கள் தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்தி வேலை தேடி ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் மாணவிகளை பெற்றோர் கண்டிப்புடன் வளர்ப்பது போல மாணவர்களை பெற்றோர் கண்டிக்காமல் பேனிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களெல்லாம் சம்பாதிக்கும் மிஷினாகவும், திருமண வியார சந்தையில் அதிக விளை போகும் பொருளாக கருதப்படுவதால்தானே அந்த நிலை! மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாததிற்கு டி.வி. சினிமா, விளையாட்டு, தந்தையின் செல்வக்கொழிப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. தமிழக அரசு 3.5 சதவீதம் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் பணியிடங்களில் ஆட்களை நிரப்ப தகுதியான முஸ்லிம்களில்லை என இடங்கள் காலியாக வைக்கப்பட்டு அதனில் வேறு பிரிவினருக்கு ஒதுக்கும் நிலை பரிதாபமானது என உங்களுக்குத் தோன்றவில்லையா? நமது மாணவர்களும், பட்டதாரிகளும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தால் சோர்ந்து விடுவதினை விட்டு மறுபடியும் அந்தத்தோல்விக்கான காரணங்கள் கண்டுபிடித்து வெற்றிக்கனியினைப் பறிக்க உதவுவதிற்காக தீட்டப்பட்டதே இந்த தன்னம்பிக்கைக் கட்டுரை.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஜனநாயக கட்சி மாநாட்டில் அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர-கறுப்பினத் தலைவர் ஜெசி ஜேக்ஷன் போட்டியிடும்போது பேசுகையில், ‘கறுப்பின மக்களைப்பார்த்து கூறிய மூன்று வார்த்தைகள், ‘நம்பிக்கை கொள்வீர், நம்பிக்கை கொள்வீர், நம்பிக்கை கொள்வீர்’. அன்று அவர் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அவர் கூறியபடி 2009 ஆம் ஆண்டு ஒரு கலப்பு-கறுப்பினத் தலைவர் பாரக் ஒபாமா அமெரிக்க அரியணையில் ஏறியது கறுப்பின மக்களிடம் மட்டுமல்லாது உலகில் நசுக்கப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது என்றால் அது பொய்யாகுமா? உங்கள் நம்பிக்கையில் சில இடர்ப்பாடுகள் வரலாம். அதனை நினைத்து உங்கள் உள்ளம் சோர்வடையக் கூடாது. உதாரணத்திற்கு விமானப் பயணத்தினை எண்ணிப்பார்க்கலாம். விமானம் புறப்படும் போது அது செல்லும் பாதை, நேரம், தட்ப வெட்ப நிலை போன்றவை துள்ளிதமாகக் காட்டும் கருவிகள் உதவியுடன் விமானி அதனை செலுத்தினாலும், சிறிதும் எதிர் பார்க்காத அளவில் இயற்கைச் சீற்றத்தின் பயனாக மழை, இடி, மின்னல், இருள் கொண்ட மேகம், மனித தவறினைத் தாண்டி விமானக் கேப்டன் விமானத்தினை திறமையாக தரையிறக்குவார். அதே போன்றுதான் வாழ்க்கையில் பல தடுமாற்றமிருந்தாலும் நம்பிக்கையினை கைவிடாவிட்டால் நிச்சம் வெற்றி உங்கள் பக்கமே!

உங்கள் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும் குறிக்கோளினை உருவாக்கிக் கொண்டு அதில் ஆர்வத்தினைச் செலுத்தினால் வெற்றிவாகை சூட முடியும். ‘மைக்ரோ சாப்ட்வேரின’ அதிபர் பில்கேட்ஸ் கல்லூரி படிப்பினை பாதியில் நிறுத்தியவர் என்பதும் ஆனால் இன்று உலக கல்விக்கும,; வேலைக்கும் உத்திரவாதம் கொடுக்கும் சிறப்பு செயல் கம்யூட்டரினை உருவாக்கி உலக முதல் பணக்காரராகி தன் பாதி வருமானத்தில் உலக சுகாதாரத்திற்காக செலவிடும் சமூக தொண்டராக இருப்பது எவ்வாறு முடிந்தது என்றால் விடா முயற்சியே வெற்றிக்கு அடித்தளம் என்ற கொள்கையினைக் கொண்டதால்தானே!!

ராபர் புரஷனிங் என்ற அறிஞர், ‘உங்கள் உடல் உழைப்பு வலி குறையும் போது உங்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்;’ என்கிறார். இது எதனைக்காட்டுகிறது என்றால் தன்னம்பிக்கை கொண்ட எந்த மனிதருக்கும் பின்னடைவு ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பது தான். மாறாக அது தன் வாழ்க்கையில் முன்னேறும் வெற்றிப்டிகளாக அமையும். ஜப்பான் நாட்டில் ஹிரோசிமா-நாகசாகி என்ற நகரங்களின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஆறாம் தேதி அமெரிக்கா ‘லிட்டில் மாஸ்டர்’ என்ற அனுகுண்டை வீசு சின்னா பின்னமாக்கியது. இன்று ஜப்பானியர் முயற்சியால் அந்த நகரம் அழகு நகரமாக உயர்ந்த கட்டிடங்களுடன் எரிந்த சாம்பலுக்கிடையில் ‘பீனிக்ஸ’ பறவைபோல எழுந்து நிற்கிறதும், உலக குத்துச் சண்டை போட்டிகளிலே பல தோல்விகளைக் கண்டாலும் மூன்று முறை சாம்பியனாக வெற்றிக் கொடி நாட்டியதோடு மட்டுமல்லாமல் ஐ.நா.வின் ஆப்பரிக்கா சிறப்புத்தூதராக பணியாற்றிய முகம்மது அலி((கேசியஸ் கிலே) தோல்விமனப்பான்மையுடையவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் என்றால் மிகையாகுமா?

நம்மிடையே நம்பிக்கையாளர்களிடமிருந்து அவ நம்பிக்கையாளர்களை கீழ்கண்ட உதாரணத்துடன் அறிந்து கொள்ளலாம். நமது வீட்டிற்கு தாகத்துடன் ஒரு விருந்தாளி வந்து தண்ணீர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அரைகிளாஸ் தண்ணீர் கொடுக்கிறீர்கள் என்றால் அந்தத் தண்ணீரைப்பருகியவர் ‘கஞ்சப்பய கிளாஸ் நிறைய தண்ணீர் கொடுக்காமல் அரைக்கிளாஸ் தண்ணீர் கொடுக்கிறானே’ என நினைத்தால் அவன் அவ நம்பிக்கையாளன். அதனை விடுத்து அரைக்கிளாஸ் தண்ணீராவது குடிக்க கிடைத்ததே என்று மனநிறைவு கொள்பவன் நம்பிக்கையாளனாகும். ஆகவே அவநம்பிக்கை என்ற இருள் உங்களை எந்த நேரத்திலும் கவ்வாது பார்த்துக் கொள்ள வேண்டும். சார்லஸ் டிக்கன்ஸ் என்ற புகழ் பெற்ற எழுத்தாளரை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர் ஆரம்பத்தில் கட்டுக்கட்டாக கதை எழுதித்தள்ளி பல்வேறு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவை ஒன்று கூட பிரசுரிக்கவில்லை. டிக்கன்ஸ_டைய நன்பர்கள் அனைவரும் அவரை கழுதை திண்பதிற்காக கதை எழுதும் எழுத்தாளர் என கேளி செய்தார்கள். ஆனால் டிக்கன்ஸ் அதனைப் பொருட்படுத்தாது மேலும் எழுதினார். என்ன ஆட்சரியம். ஒரு மாத இதழில் அவருடைய கதையொன்று பிரசுரமானகி பிரபலமானது. அதன் பின்பு அவருடைய ஒவ்வொரு வரிக்கும் காசோ காசுவென்று கொட்டித்தள்ளியது. வெற்றி வீரர்களின் பெயரளவில் ஒரு சதவீதம் தான். ஆனால் அவர்கள் உடலுழைப்பு 99 சதவீதமாகும்.

நீங்கள் உங்கள் லட்சியத்தினை அடைய லாட்டரி சீட்டோ அல்லது அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற மாயை பொருளோ தேவையில்லை. மாறாக கீழ்கண்ட செயல்பாடுகளின் மூலம் உங்கள் வெற்றியினை அடைய முடியும்:

1) செயல்திறன்: உங்கள் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற அவசரத்தினை முன் வைத்து வேலையினைத் தொடர வேண்டும். அதற்கு மன உறுதியும், இடையூறுகளை சமாளிக்கும் திறனும், பயத்தினை விட்டொழிக்கவும் தெரிய வேண்டும். உங்கள் முன் மாதிரியாக உங்கள் தொழில், கல்வியில் வெற்றியடைந்தவர்களை எடுத்துக் கொண்டு அவர்கள் போல வளர ஆசைப்பட வேண்டும்.

2) நம்பிக்கை: நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நூறு சதவீத நம்பிக்கை வேண்டும்.

3) தெளிவு: உங்கள் குறிக்கோளின் கனவுகள் குழப்பமில்லாமலும் தெளிவாகவும் இருக்க வேண்டும். அதற்கு உதாரணமாக உங்கள் தந்தை அல்லது அண்ணன் உங்களுக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்ததை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது கை, கால்களில் அடிபட்டு காயம் ஏற்பட்டதினை நினைத்து சைக்கள் ஓட்டுவதினை விட்டு விட்டீர்களா? இல்லையே! அதேபோல் தான் உங்கள் முதல் முயற்சியில் தோல்வியேற்பட்டாலும் துவளாது வெற்றி வரை உழைக்க வேண்டும்.

4) இழப்பு-ஆபத்து: உங்கள் முயற்சியில் இழப்பு, ஆபத்துக்கள் நேரலாம். ஆனால் அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப் பூர்வமான நம்பிக்கையாக எடுக்கும் முயற்சிகள் மூலம் அவைகளை முறியடிக்க முடியும்.

5) நட்பு: தன்னம்பிக்கையுள்ளவர்களுடன் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முட்டாள் நண்பர்களை விட ஒரு கூர்மையான பென்சில் மேல் என்ற பழமொழிக்கிணங்க உங்கள் குறிக்கோளுக்கு உதவும் வகையில் நட்பினை தேடிக் கொள்ளுங்கள்.

6) உரு: உங்களுடைய குறிக்கோளை ஒரு காகித்தில் எழுதி அதற்கு உருக்கொடுக்க வேண்டும். ஜென் பழமொழி ஒன்று சொல்வார்கள், ‘மலையை நகர்த்த சிறு கற்களை முதலில் உடையுங்கள்’ என்று. ஆகவே உங்கள் குறிக்கோளினை சிறிது சிறிதாக செயல் படுத்துங்கள்.

7) தோல்விக்கான காரணங்கள்: நீங்கள் தோல்வியடைந்தால் என்ன காரணத்திற்காக தோல்வியடைந்தோம் என ஆராயுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு புதிய உருக் கொடுங்கள். தோல்வி மனித இயற்கையென்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி உலக உயரமான இமய மலையினை வெற்றிக் கொண்ட எட்மண்ட் ஹில்லாரியினை ஞாபகமிருக்கும். அவர் முதல் முயற்சியில் தோல்வியடைந்தார். அதன் பின்பு முயற்சியினை கைவிடவில்லை. மாறாக எவரஸ்ட் சிகரத்தின் படத்தின் முன்னின்று, ‘எவரஸ்ட் சிகரமே! இந்தத் தடவை நீ ஜெயித்து நான் தோல்வியடைந்து விட்டேன். ஏனென்றால் நீ எந்த அளவு உயரமாக வளர முடியுமோ அந்த அளவு வளர்ந்து விட்டாய். ஆனால் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கிறேன். உன்னை விடப்போவதில்லை, விடப்போவதில்லை’ என்று கூறி அடுத்த முயற்சியில் வெற்றியும் கண்டார். அதேபோன்று உங்கள் தோல்வியினை கண்டு மிரளாது தொடர் முயற்சி செய்தால் உங்கள் குறிக்கோளில் வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைத் தழுவாதா?

Sunday, August 8, 2010

அழாதே அம்மா … அழாதே !

அழாதே அம்மா … அழாதே !
(கருவறையிலிருந்து ஒரு கடிதம்)
( பொற்கிழிக் கவிஞர். மு. சண்முகம், இளையான்குடி )


அம்மா ….!
என்னைக் கருவினில்
சுமப்பது போதாதென்று
உயிரிலும் சுமக்கும் …..
உத்தமியே …!
மண்காயப் பொறுக்காத
மழைவானப் புன்னகையே ..!
பிள்ளையின் நிழல் கூட …
முள்ளில் விழத் தாங்காத
பேரன்பே !

படுத்திருக்கும் என்
பாசக் கடலே …!
உன்னுள் இருந்துதான்
பேசுகிறேன் …!


உன் குருதி விதையின்
குழந்தைப் பூ
பேசுகிறேனம்மா …!
அழுகிறாயாமே …?
ஏனம்மா …?


உன் கண்ணீர்த்துளி பட்டு
என் இதயமெல்லாம்
கொப்புளங்கள் !


அழாதே … அம்மா ..!
அழாதா !

இன்ஷா அல்லாஹ்
ஒரு கருத்த இரவிலோ
நெருப்புப் பகலிலோ
நிச்சயம் வெளிவருவேன் !
வலித்தால் அழுவார்கள்
இது
வையக நிதி
ஆனால் …. நீ

பிரசவ வலி வரவில்லை
யென்று அழுகிறாயாமே …
பிரசவ வலி
இல்லையென்றால் ….
ஒரு கொடுமை,
உடனே …
ஆபரேஷன் என்று – சில
மருத்துவர்கள்
அறிவித்துவிடுவார்கள் !

அதோடு
இருபத்தி ஐயாயிரம் ரூபாய்
ரெடி பண்ணி வை என்றும்
சொல்லி விடுவார்கள் !

இவ்வளவு தொகைக்கு
எங்கே போவது?
என்ன செய்வது
என்று தானே …
உனக்கு வலி! வருத்தம்

நான் சுகமாய்
பிறக்க வேண்டும் !
அவ்வளவு தானே …!

உன் கண்ணீரைத் துடை
ஹக்கனை நினை !
இரண்டு ரக்அத் தொழு !
எல்லாம் நலமாகும்
எதுவும் ஜெயமாகும்
அழாதே …. அம்மா !
அழாதே !

பூமிக்கு நான்வந்து – உனக்குப்
புன்னகை சேர்க்கிறேன் உன்
பொழுதுகளில் சோகம்
படராமல் காக்கிறேன் !

நேரம் ஆகிறது !
கண்ணுறங்கப் போகிறேன் !
நேசம் வளர்ப்பவளே
உன்னையென்
நெஞ்சிலே சுமக்கிறேன்


இப்படிக்கு
உன் வயிற்று பிள்ளை

நர்கிஸ் ஜுன் 2010 இதழிலிருந்து
நர்கிஸ் நடத்திய போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை

Sunday, August 1, 2010

பயனுள்ள தொடுப்புகள் (Links)

பயனுள்ள தொடுப்புகள் (Links), நமது உபயோகத்திற்காக

இதோ சில பயனுள்ள தொடுப்புகள், நமது உபயோகத்திற்காக...
http://districts.nic.in
இந்தியாவிலுள்ள மாவட்டங்களைப் பற்றிய விவரங்களனைத்தையும் அறிந்துகொள்ள உதவும் ஒரே இடம் இந்த இணைய தளம் ஆகும்.
_________

http://www.indianrail.gov.in
இந்திய ரயில்வேயின் இணைய தளச் சேவை அளிக்கும் தகவல் சேவைகள் பின்வருமாறு: பயணிகள்/பி.என்.ஆர். நிலவரம், முக்கியமான ரயில் நிலையங்களுக்கிடையே ஓடும் ரயில்களைப் பற்றிய விவரங்கள், ரயில்/கட்டணம் மற்றும் தங்கும் வசதி, ரயில் சம்பந்தப்பட்ட விசாரணை, ஒவ்வொரு ரயில் நிலையத்திற்குமான வாராந்தர டிக்கெட் இருப்பு நிலவரம், இந்திய ரயில்வேயின் வரைபடம், இணைய தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தல், பயணிகள் திட்டம்/பட்டியல் ஆகியவற்றில் அவ்வப்போது மாற்றம் செய்தல் மற்றும் ரயில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) சேவை.
___________
http://www.results.nic.in/
பல்வேறு கல்வி சார்ந்த தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகளின் முடிவுகள் ஓரிடத்தில் இந்த இணைய தள முகவரியில் கிடைக்கும்.
____________
http://goidirectory.nic.in/

இந்திய அரசின் இணையதள முகவரிக் கையேடு ஈடு-இணையற்ற விரிவான ஒரு கையேடு ஆகும்; இவ்விணையதளம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சகங்கள், ஆகியன குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்கும் ஒரு உன்னதமான முகவரி ஆகும்.
_____________
http://passport.nic.in/
பாஸ்போர்ட் மற்றும் விசா சம்பந்தமான உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் இங்கு விடை கிடைக்கும்.
____________
http://www.judis.nic.in/
'ஜூடிஸ்' எனப்படுவது வழக்குவாரியான அனைத்து விவரங்களுமடங்கிய இணைய தள நூலகமாகும். இதில் உச்சநீதி மன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சில தீர்ப்புகளின் விவரங்கள் இங்கு கிடைக்கும்.
____________
https://tin.tin.nsdl.com/pan/
இந்த இணைய தளத்தில் உங்களுக்கு இணைய தளம் மூலம் 'பான்' கார்டுக்கு விண்ணப்பிக்கவும் அது குறித்த பிற தகவல்களைப் பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Friday, June 4, 2010

Business - Ramanathapuram

Business - Ramanathapuram

MANDAPAM BLOCK

Mandapam block is situated very close to the Bay of Bengal. In this block sea based industries like Processing of Fishes, Dry fish processing. Crab, Prawn processing, Fish net, Ice Plants, Food Processing Industries , Coir fibre and Coir related industries are encouraged.

RAMANATHAPURAM BLOCK
Ramanathapuram Block is situated near approach to sea. In this Block, not only sea based Industries but also all type of Industries like , Masala Powder, Flour Mills, Modern Rice Mills, Spinning Mills, Coir fibre and Coir related industries, Bakeries, Food Processing Industries Wooden Furniture, Cold Jewelery Making industries etc are encouraged

THIRUPULLANI BLOCK
Thirupullani block is situated very close to the Bay of Bengal. In this block sea based industries like Processing of Fishes, Dry fish processing. Crab, Prawn processing, Fish net, Ice Plants, Food Processing Industries , Bakeries, Wooden Furniture, Milk related Industries, Coconut, Coir fibre and Coir related industries are encouraged.

THIRUVADANAI BLOCK
In Thiruvadanai Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units Bakeries, Processing of Fishes, Dry fish processing. Crab, Prawn processing, Fish net, Ice Plants Food Processing Industries, Dhal Processing Units, Tamarind Paste units etc., are encouraged.

RAJASINGA MANGALAM BLOCK
In Rajasinga Mangalam Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units Tamarind Paste units etc., are encouraged.

NAINARKOIL BLOCK
In Nainarkoil Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Groundnut based units, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged.

PARAMAKUDI BLOCK
In Paramakudi Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Cotton Seed Oil based Units, Ginning units, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged.

BOGALUR BLOCK
In Bogalur Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Bakeries, Ground Nut based units, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged.

KAMUTHI BLOCK
In Kamuthi Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Ginning, Bio-Diesel (From Jetroba ) ,, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged.

KADALADI BLOCK
In Kadaladi Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Ginning, Bio-Diesel (From Jetroba ) ,, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged.

MUDUKULATHUR BLOCK
In Mudukulathur Block, Modern Rice Mills, Flour Mills, Masala Powder, Gingerly Oil Extraction and De-oiled cakes, Cotton Seed Oil based Units, Ginning, Bio-Diesel (From Jetroba ) ,, Bakeries, Food Processing Industries, Dhal Processing Units etc., are encouraged.

http://www.dicrmd.in

Friday, May 21, 2010

மாவீரன் திப்புசுல்தான் : இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

மாவீரன் திப்புசுல்தான் : இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி




1799 ஆம� �� மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இ ன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர� �கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).
1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.
இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.
போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்� ��ு வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட் கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.
திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது தி ப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.
இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்த ு ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை

திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால� �� வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.
நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர ்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு

‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்ச� ��்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.
வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வ� �ை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.
சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் � �ன்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு க ட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவக ரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்

திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.
இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்து� ��் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்� ��ைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதி� ��் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.
திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போர்களத்தில் நேர்மை

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் � �ுதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”

மக்கள் சக்தியை திரட்டியவர்

ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி� �்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்”.என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?

இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.

உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.

திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது. ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது.
கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக� ��கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.
புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.
அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்

Article taken from முத்துப்பேட்டை - http://muthupet.org
URL to article: http://muthupet.org/?p=4842

Thursday, April 29, 2010

பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?

பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்ப தில்லை.
பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட் டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.

பழங்களை எப்படி, எப்போது உண்ண வேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன?
நாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம் பழம், பப்பாசி பழம் அல்லது ஆப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு வேளைக்குப் பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது.
பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.
நீங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டுப் பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக் கூடும். ஆனால், அப்பழத்துண்டு அவ்வாறு செல்ல முடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில், பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு சமபாடடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். அதாவது பாண் துண்� �ு சமபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத் துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.
நீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகி விடும்.
Article taken from முத்துப்பேட்டை - http://muthupet.org
URL to article: http://muthupet.org/?p=4465