Sunday, August 31, 2008

அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்

அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்

கமுதி அருகே அச்சங் குளத்தில் மூடிக்கிடக்கும் நூற்பாலையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக முருக வேல் எம்.எல்.ஏ., தெரி வித்தார்.

நூற்பாலை

கமுதி அருகே உள்ள அச் சங்குளத்தில் அரசு சார்பில் கூட்டுறவு நூற்பு மில் எம்.ஜி. ஆர். முதல் அமைச்சராக இருந்த போது மத்திய மந்திரி யாக இருந்த மரகதம் சந்திர சேகர் திறந்து வைத்தார்.

இந்த நூற்பாலை மூலம் 500 பேருக்கு நேரடியாவும், 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. நல்ல லாபத்துடன் இயங்கி வந்த இந்த மில் நாள டைவில் நிர்வாகத்தில் ஏற் பட்ட குளறுபடி காரண மாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மூடப்பட்டது.

நடவடிக்கை

இந்நிலையில் மூடப்பட்ட அச்சங்குளம் கூட்டுறவு நூற் பாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அங்கு பணியாற் றிய ஊழியர்கள் முதல் அமைச் சர் கருணாநிதி மற்றும் சட்ட மன்ற உறுதிமொழி குழுவினரி டம் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து சட்டமன்ற உறுதிமொழி குழுவில் இடம் பெற்றிருந்த முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல் தமி ழக கைத்தறி துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

உடனே இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நூற்பாலையை விரைவில் திறக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள் ளதாக முருகவேல் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

Thursday, August 28, 2008

இளைஞர் நற்பணிமன்ற விழா

இளைஞர் நற்பணிமன்ற விழா



கடலாடி, ஆக. 28: கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றமும், நேரு யுவகேந்திராவும் இணைந்து சுதந்திர தினவிழா, தேசிய விழிப்புணர்வு விழா, சாதி,மத நல்லிணக்க விழா, இளையோர் எழுச்சி விழா, நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற 12-ம் ஆண்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மன்றத் தலைவர் எல். விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ம. பாலசுப்பிரமணியன், கடலாடி மறவர் சமூக உறவின்முறை தலைவர் எம். மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி. நாகராஜன் வரவேற்றார்.

விழாவில் கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் த. ராஜசேகர், "தேசிய வலிமை' மாத இதழ் ஆசிரியர் வே. சுவாமிநாதன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் என்.கே. முனியசாமி பாண்டியன், நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்கச் செயலர் வத்தலகுண்டு கவிஞர் செ. செந்தில், தாலுகா மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் வி. மயில்வாகனன், நேதாஜி தேசிய இயக்கச் செயலர் பொறியாளர் சு.க. கமல் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

கவிஞர் முகாரா "தொடக்கம்' எனும் தலைப்பில் கவிதை வாசித்தார். சிக்கனத்தை கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி எம். சசிரேகா (10-ம் வகுப்பு), கே. அரியநாச்சி (பிளஸ் 2) ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பத்திர எழுத்தர் க. முத்துராமலிங்கம், முன்னாள் ராணுவவீரர் எம். மீனாட்சி சுந்தரம், ஊராட்சி முன்னாள் தலைவர் சி.அ.ச. அய்யம்பெருமாள் நாடார், நகர் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ஆர்.எஸ். ராமலிங்கம், காமராஜர் நர்சரி பள்ளித் தாளாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ப. பாலமுருகன் நன்றி கூறினார்.

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு



கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.

Friday, August 22, 2008

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்


சிதம்பரம், ஆக. 21: பாலிடெக்னிக்கில் பயிலும் ஏழை மாணவரது படிப்பு செலவுக்கு சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவர்கள் வசூலித்த ரூ.3400-ஐ அளித்துள்ளனர்.

சிதம்பரம் குஞ்சமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆர்.கலியபெருமாள் மகன் கே.ராஜா. இந்த ஈரோடு நந்தா பாலிடெக்னிக்கில் கல்வி பயின்று வருகிறார்.

இவரின் படிப்புக்காக, சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் ரூ.3400-ஐ வசூலித்தனர்.

இந்த உதவித் தொகையை அவரது பெற்றோரிடம் பள்ளித் தாளாளர் இரா.செந்தில்குமார் முன்னிலையில் தமிழாசிரியர் கே.நடனகுஞ்சிதபாதம் திங்கள்கிழமை அளித்தார்.

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


நாகப்பட்டினம், ஆக. 21: தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகைப் பெற தகுதியான கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் 2008-09-ம் ஆண்டுக்குக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று; பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்; எந்த உதவித் தொகையும் பெறாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு, முதலாம் ஆண்டு கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், டிப்ளமோ முடித்து 2-ம் ஆண்டு பொறியியல் பயிலுபவர்கள், பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

நிகழாண்டில், 400 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

முதலாம் ஆண்டு பட்டயப்படிப்புப் பயிலுபவர்களுக்கு ரூ. 4 ஆயிரம், முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்புக்கு ரூ. 4,500, முதலாம் ஆண்டு தொழில் நுட்பப் படிப்புக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதிகள்: சுமார் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

உறைமேலிட்ட கவரில் சுய முகவரியைத் தெளிவாக எழுதி (உறை அளவு 22.5 செ.மீ 1 செ.மீ), ரூ. 10-க்கான தபால் தலை ஒட்டி, "கெüரவச் செயலர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராஜா அண்ணாமலை பில்டிங், இணைப்புக் கட்டடம் 2-வது தளம், 18/3 ருக்மணி லெட்சுமிபதி சாலை, எக்மோர், சென்னை-8' என்ற முகவரிக்கு வரும் அக். 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு


புதுக்கோட்டை, ஆக. 21: ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி என்றார் ஜெஜெ கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றியடைந்து பயிற்சி பெறுபவருமான க. விஜயேந்திரபாண்டியன்.

புதுகை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

கடும் உழைப்புக்குப் பலன் நிச்சயம். மகிழ்ச்சி, ஆர்வம், ஈடுபாடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு படித்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.

ஐஏஎஸ் பதவி என்பது சாதாரணமானவர்கள் நினைத்தே பார்க்க முடியாதது, அது மேட்டுக் குடியினருக்கு மட்டுமே சொந்தம் என்பதெல்லாம் வெறும் கற்பனை.

ஐஏஎஸ் அகாதமியில் தற்போது பயிற்சியில் என்னுடன் இருக்கும் பெரும்பாலானவர்கள் சாதாரண அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த முதல் தலைமுறையினர். இவர்கள் உத்வேகத்துடன் படித்ததால்தான் வெற்றி பெற்றனர்.

கடின உழைப்பால் வெற்றி நேருக்கு நேராக கிடைக்கும். அந்த வெற்றியைச் சுவைத்துவிட்டால் பின் திரும்பிப் பார்க்கும் எண்ணம் வராது.

மொழி இந்தப் படிப்புக்குத் தடை இல்லை. தாய்மொழியில் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தற்போது அதிகம்.

முதலில் நம்மை நாம் மதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நடை, உடை பாவனைகள் மாறும். ஒரு அதிகாரி என்பதை மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத பரந்து விரிந்த களம் உங்கள் முன் உள்ளது. பணம் சேர்க்க எத்தனையோ படிப்புகள் உள்ளன. ஆனால் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமிருந்தால் மட்டுமே இதில் இயல்பாகவும், எளிதாகவும் வெற்றி பெறலாம்.

பணம் என்றும் நம்மை வழி நடத்தும் கருவியாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் முறை தேர்ச்சி பெற்று நேர்காணலில் 7 மதிப்பெண் குறைந்ததால் தோல்வியடைந்தேன்.

ஆனால், அடுத்த முயற்சியில் ஐஆர்எஸ் பதவி கிடைத்தது. ஐஏஎஸ் என் லட்சியம் என்பதால் மீண்டும் முயற்சி செய்து இந்த ஆண்டு வெற்றி பெற்றேன். தன்னம்பிக்கையுடன் ஒரே சிந்தனையில் முயற்சி செய்ததால் இதை அடைய முடிந்தது.

படிக்க மனம் இருந்தால் போதும் உங்கள் தேடுதல் நிறைவேறும். மாணவர்கள் கூச்சத்தை தவிர்க்க வேண்டும், கூச்சமில்லாமல் இருப்பது தற்போது தனி திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விடா முயற்சியே ஐஏஎஸ் கனவை நனவாக்கும் என்றார் விஜயேந்திரபாண்டியன்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாக அறங்காவலர் கவிதாசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

முதல்வர் ஜெ. பரசுராமன் வரவேற்றார். பிபிஎம் இயக்குநர் சோலையப்பன் நன்றி கூறினார்.

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்


நாகர்கோவில், ஆக. 21: சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. பால்சுதந்திரதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் மையம், குட்வில் கம்யூனிகேஷன்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கிவ் லைப் சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம் சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

மொத்தம் 21.09 கி.மீ. தொலைவு கொண்ட இப் போட்டியில் இருபாலரும் பங்கேற்கலாம். முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், 2-வது பரிசாக ரூ. 5 லட்சமும், 3-வது பரிசாக ரூ. 2 லட்சமும், 4-வது பரிசாக ரூ. 1 லட்சமும், 5-வது பரிசாக ரூ. 50 ஆயிரமும், 6-வது பரிசாக ரூ. 25 ஆயிரமும், 7-வது பரிசாக ரூ. 15 ஆயிரமும், 8-வது பரிசாக ரூ. 10 ஆயிரமும், 9-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும், 10-வது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 11 முதல் 20-வது இடம் வரை பெறுவோருக்கு ரூ. ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இருபாலருக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். முதல் 20 இடங்களைப் பெறும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாரத்தான் ஓட்டத்தில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ. 50. பள்ளி மாணவர்களுக்கு இலவசம். நிரப்பப்பட்ட படிவங்களை குட்வில் கம்யூனிகேஷன்ஸ், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதுகுறித்த கூடுதல் தகவல்களை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடர்பு கொண்டு அறியலாம் என்றார் அவர்.

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

திருநெல்வேலி, ஆக. 21: போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம் நடத்தப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பி.ஆர். பிந்துமாதவன் தெரிவித்தார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:

நாங்கள் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைகள் தவிர இதர வேலைகள் அனைத்துக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பி வருகிறோம்.

இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6,800 பேரை வேலைக்காக பல்வேறு நாடுகளுக்கு தேர்வு செய்து அனுப்பி இருக்கிறோம். இந்தாண்டு இது வரை 300 பேரை தேர்வு செய்து அனுப்பி உள்ளோம். 340 பேரை அனுப்பும் தருவாயில் இருக்கிறோம்.

ஒமன், துபாய், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற அரேபிய நாடுகளுக்குத் தான் அதிகமாக ஆள்களை அனுப்பி வருகிறோம்.

இது தவிர சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஆள்களை அனுப்பி வருகிறோம். இதில் அமெரிக்க நாட்டுக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம்.

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் எங்களிடம் கேட்பதை பொருத்து தான், ஆள்களை தேர்வு செய்து அனுப்புகிறோம்.

அந்த நிறுவனங்கள் ஒருவரின் அனுபவத்தையும், திறமையையும் பொருத்து ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. இதில் ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணமாக நாங்கள் வசூல் செய்கிறோம்.

ஆனால் இதற்கு தனியார் ஏஜென்சிகள் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றன.

பயணக் கட்டணம், உணவு வசதி, தங்கும் வசதி, என்.ஆர்.ஐ இன்சூரன்ஸ் போன்ற அனைத்து சலுகைகளும் எங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகிறவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள அயல்நாடு செல்வோர் காப்பாளர் மையத்தில் பதியாமலேயே தனியார் ஏஜென்சிகள் பல வெளிநாடுகளுக்கு பல்வேறு விதிமுறைகளை மீறி ஆள்களை அனுப்புகின்றனர். இப்படிப்பட்ட ஏஜென்சிகள் மூலம் அழைத்து செல்லப்படுவர்கள் தான், வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட ஏஜென்சிகளின் ஏமாற்றுவேலைகளை கட்டுபடுத்ததான், நாங்கள் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெளிநாட்டுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம்களை நடத்துகிறோம். இது வரை 13 முகாம்கள் நடத்தி இருக்கிறோம்.

மேலும் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோர், எங்களது நிறுவனத்தில் தனியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒமன் நாட்டில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்துக்கு கொத்தனார், டைல்ஸ், மார்பிள், பிளாக் ஒர்க்ஸ் வேலை செய்வோர், பிளாஸ்டரிங், கார்பெண்டர், பார்பெண்டர், எலக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், என்ஜினீயர்கள் ஆகியோர் சுமார் 1,000 பேர் தேவைப்படுகிறார்கள். இதற்காக பாளையங்கோட்டையில் முகாம் நடந்தது.

மேலும், இந்தப் பணியிடங்களுக்கு இம் மாதம் 23-ம் தேதி ராமநாதபுரம், 24-ம் தேதி திருச்சி, 25-ம் தேதி ஆகிய இடங்களில் நடத்த உள்ளோம். இதேபோல பல இடங்களில் முகாம் நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றார் பிந்துமாதவன்.

Thursday, August 21, 2008

கடலாடி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்

கடலாடி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்
போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு முடிவு


சாயல்குடி,ஆக.21-

கடலாடி தாலுகா சிக்கல் பகுதியில் இலவச பாஸ் இருந்து பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி அறி வித்துள்ளது.

பஸ் பாஸ்

கடலாடி தாலுகா செயலா ளர் மயில்வாகனன், மாவட்ட குழு உறுப்பினர் பச்சமால் ஆகியோர் கலெக்டர் கிர் லோஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:- கடலாடி தாலுகா சிக்கல் பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் சிக்கல், வாலிநோக்கம், மேலக் கிடாரம், மாரிïர் ஆகிய ஊர் களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசு சார் பில் இலவச பஸ் பாஸ் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பள்ளி கள் உள்ள பகுதியில் அரசு டவுன் பஸ்கள் போதிய அளவு இல்லை. மேலும் பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இல்லாததால் மாணவர்கள் இலவச பாஸ் வைத்திருந்தும் அவை பயனில்லாமல் உள் ளது. இதனால் அவர்கள் தனியார் பஸ்சிலும், பிற ஊர்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்துகளிலும் டிக் கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

போராட்டம்

ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் நடந்து தான் பள்ளி சென்று வருகின் றனர். எனவே சிக்கல் பகுதி ஊர்களை சேர்ந்த மாண வர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் மாண வர்களை திரட்டி மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, August 20, 2008

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜனாப் அலாவுதீன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 20.08.2008 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரது ஜனாஸா பரமக்குடி கீழமுஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவர் முதுவை ஹிதாயத்தின் மைத்துனரும், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஹிதாயத்துல்லாஹ்வின் தகப்பனார் ஆவார். இவரது தொடர்பு எண் 9750105141

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜனாப் அலாவுதீன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 20.08.2008 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரது ஜனாஸா பரமக்குடி கீழமுஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவர் முதுவை ஹிதாயத்தின் மைத்துனரும், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஹிதாயத்துல்லாஹ்வின் தகப்பனார் ஆவார். இவரது தொடர்பு எண் 9750105141

Monday, August 18, 2008

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


முதுகுளத்தூர், ஆக. 17: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், அபிராமம் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, நர்சரி பள்ளி ஆகியவற்றில் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ. ஷாஜகான் தலைமையில், கல்விக்குழுத் தலைவர் எஸ். திவான் முன்னிலையில், தாளாளர்கள் எஸ். கமால்நாசர், சீனி முகம்மது ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.

தலைமை ஆசிரியர்கள் ஓ.ஏ. முகம்மது சுலைமான், காதர்சா, விக்டோரியா உள்ளிட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நர்சரி பள்ளி, கண்ணா நர்சரி பள்ளி, ஊ.ஒ.பள்ளி, அரசுத் தொழிற்பயிற்சி நிலையம், சோணை-மீனாள் கல்லூரி ஆகியவற்றில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூர் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் பாக்கியநாதன் தலைமையில், தாளாளர் எஸ். அப்துல்காதர் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ். பசீர் அகம்மது தலைமையில், தாளாளர் ஏ. முகம்மது இத்ரீஸ் கொடி ஏற்றி வைத்தார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரியர், ஆசிரியைகள் பலரும் பேசினர். சாரணர் மாணவர்கள் 8 பேருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

அபிராமம் வி.என்.எஸ்.உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, பேட்டை நடுநிலைப் பள்ளி, நத்தம் துவக்கப் பள்ளி, ஊ.ஒ.பள்ளி ஆகியவற்றில் கொடி ஏற்றப்பட்டது.

வலையபூக்குளம் கே.வி.சாலா நடுநிலைப் பள்ளி, நீராவி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, மண்டலமாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, பம்மனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி, பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி ஆகியவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ராமசாமிபட்டி உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஊராட்சித் தலைவர் பத்மாவதி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சி. சோலையப்பன், பிரமுகர்கள் ஏ. பாம்புலு, சி. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இடைச்சூரணி ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துமுருகன் தலைமையில், ஊராட்சித் தலைவர் காளிமுத்துவும், பாப்பணம் ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமையில், ஊராட்சித் தலைவர் மாரியும் கொடி ஏற்றினர்.

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்


சென்னை, ஆக.18-

வெளிநாடு வாழ் இந்தியர் தினவிழா முதன் முதலாக சென்னையில் 2009 ஜனவரியில் நடக்கிறது. இதில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் விழா

ஒரு வெளிநாட்டினராக தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மாகாந்தி 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நாடு திரும்பினார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ந் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கப்பூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

7-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின விழாவை முதன் முதலாக சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த விழா 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு விழாவை முறைப்படி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இணையதளம்

9-ந் தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கலந்து கொள்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் சிறந்த பங்காற்றிய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கி கவுரவிக்கிறார். வெளிநாடுவாழ் இந்தியர் நல அமைச்சகத்துடன், தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறது.

கண்காட்சிகளும், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்களும் நடத்தப்பட உள்ளன. விழாவில் பங்கேற்கும் உயர்நிலை குழுவினரை திருப்பதி, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பிரத்யேகமாக இணையதளம் ஒன்று(ஷ்ஷ்ஷ்.ஜீதீதீவீஸீபீவீணீ.ஷீக்ஷீரீ) வரும் 21-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. விழா குறித்த அனைத்து தகவல்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432782&disdate=8/18/2008&advt=2

Saturday, August 16, 2008

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு


சென்னை, ஆக.16-

ஒவ்வொரு ஊர்களுக்கும் உரிய தபால் நிலைய பின்கோடு எண்களை மாற்றி, `பேல்' என்ற புதிய குறியீட்டை பயன்படுத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

பின்கோடு நம்பர்

தபால்களை பட்டுவாடா செய்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் நாட்டின் பகுதிகளை அஞ்சல்துறை குறியீடுகளாக வைத்துள்ளது. 6 எண்கள் கொண்ட இந்த குறியீடுகள் போஸ்டல் இன்டக்ஸ் நம்பர் (பின்) அதாவது பின்கோடு நம்பர்கள் என்றழைக்கப்படுகின்றன.

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ கடிதம் எழுதும் போதும், வேலைக்காக விண்ணப்பிக்கும் போதும், மற்றவரிடம் ஒரு விலாசத்தை கொடுக்கும் போதும் `பின்கோடு' எண்களை எழுதுவது என்பது தற்போது அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 1972-ம் ஆண்டு `பின்கோடு' நம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

8 பிரிவுகள்

பின்கோடு எண்கள் குறியீட்டின் முதல் எண்ணை வைத்து இந்தியாவை தபால்துறை மொத்தம் 8 பிரிவுகளாக பிரித்துள்ளது.

1) டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகார். 2) உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட். 3) ராஜஸ்தான், குஜராத், டாமன், டைï 4) சத்தீஸ்கர், மராட்டியம், மத்தியபிரதேசம், கோவா. 5) ஆந்திரபிரதேசம், கர்நாடகா. 6) கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவுகள். 7)மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், சிக்கிம், அருணாசலபிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள். 8) பீகார், ஜார்கண்ட்.

6 எண்கள்

பின்கோடு எண்களில் உள்ள மொத்தம் 6 எண்களில் முதல் எண் இந்தியாவில் உள்ள மண்டலம், அடுத்து உள்ள எண் துணை மண்டலத்தையும், அதைத் தொடர்ந்து உள்ள எண் அந்த மண்டலத்தில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்டத்தையும், அதற்கு அடுத்துள்ள 3 எண்கள் அங்குள்ள தபால் நிலையங்களையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சென்னையில் `600001' என்ற பின்கோடு எண்கள் பூக்கடை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, மண்ணடி, முத்தையால்பேட்டை, ஏழுகிணறு ஆகிய தபால் நிலையங்களையும், `600002' என்பது, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களையும் குறிப்பதாக உள்ளது.

எளிதாக அறியலாம்

இந்த நிலையில், பின்கோடு நம்பர்களை பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை கணக்கில் கொண்டு இந்திய அஞ்சல்துறை `போஸ்டல் அட்ரஸ் லொகேட்டர்' (பேல்) என்ற தபால் விலாச குறியீடுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பின்கோடு நம்பர்களை பொறுத்தவரை தபால் நிலையத்தை வைத்தே அந்த பகுதி, பின்கோடு எண்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் `பேல்' குறியீடுகள் அதில் இருந்து மாறுபட்டு, ஒவ்வொரு இடத்தையும் ஒரு குறியீட்டால் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு மாவட்டம் என்பது நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பின்கோடு எண்களை பொறுத்தவரை, மாவட்டம் என்பதற்கு குறியீடுகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள தபால் விலாச குறியீடுகளில் (பேல்) கிராமம், டவுண், இடம், கட்டிடம், தெரு, சாலை, பகுதி, நகரம் என அனைத்தும் குறிக்கப்படும். இதனால் குறியீடுகளில் இருக்கும் எண்கள் மூலமாகவே இருக்கும் இடத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

2, 3 மாதங்களில் அமல்

தபால்காரர்கள் கடிதங்களை கொண்டு செல்வதற்கான முகவரியை அறிந்து கொள்ள இந்த புதிய முறை வசதியாகவும், சுலபமானதாகவும் இருக்கும். கடிதங்களை பின்கோடு எண்களை பார்த்து குறிப்பிட்ட தபால் நிலையத்திற்கு அனுப்பி அங்கிருந்து சென்று சேரவேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்ப்பதை விட, `பேல்' முறை மிகவும் எளிதானது என்று அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ``இந்த புதிய தபால் விலாச குறியீடுகள் இந்திய அஞ்சல்துறையில் அறிவுசார் சொத்துரிமை. இதை இந்திய அஞ்சல்துறையின் அனுமதியின்றி மற்ற நாடுகளின் தபால்துறை பயன்படுத்த முடியாது. தபால் துறை மிகப்பெரிய மாற்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக ஒருங்கிணைந்த தபால் துறை சாப்ட்வேர்கள், ஒன்றிணைக்கப்பட்ட தபால் நிலையங்கள், ஜி.பி.எஸ். வசதி கொண்ட மெயில் வேன்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. இன்னும் 2, 3 மாதங்களில் தபால் விலாச குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432360&disdate=8/16/2008

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி



மதுரை, ஆக. 15: தானம் அறக்கட்டளையின் வளர்ச்சித் தொடர்பு மையம் சார்பில் "கலாசாரமும் பாரம்பரியமும்' எனும் தலைப்பில் குறும்பட போட்டி நடைபெற உள்ளது.

பாரம்பரியக் கலைகள், கலாசாரங்கள், நிர்வாக முறைகள், பழங்குடிகளின் நாகரிகங்கள், தொழில் நுட்பங்கள், விழாக்கள், வரலாறு மற்றும் தொல் சமூக நிகழ்வுகள் தொடர்பாக குறும்படங்கள் அமைந்திருப்பது அவசியம்.

உலக மொழிகளில் தயாரிக்கப்பட்டிருப்பினும் துணைத் தலைப்புகள் அல்லது உரையாடல்களின் எழுத்து வடிவம் ஆங்கிலத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். குறும்படம் கடந்த 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இயக்குநரின் சுய சிந்தனையில் உருவாகியிருத்தல் அவசியம். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பில் உறுதுணையாய் இருந்த நிறுவனங்கள் இப்போட்டியில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களாவர். விசிடி, டிவிடி அல்லது விஎச்எஸ் வடிவத்தில் குறும்படங்களை அனுப்பலாம். படத்தின் மூலப் பிரதியை அனுப்புதல் கூடாது. விண்ணப்பங்கள் மற்றும் விளக்க அறிக்கையை ஜ்ஜ்ஜ்.க்ட்ஹய்.ர்ழ்ஞ்/க்ச்ச் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்வியாளர்கள், இதழாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் தீர்ப்பே இறுதியானது.

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 15.

மேலும் விவரங்களுக்கு தானம் அறக்கட்டளை, வளர்ச்சித் தொடர்பு மையம், 7-இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை-625 016 (தொலைபேசி எண் 0452- 4353983) எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080816000945&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/16/2008&dName=U%D5%FBW&Dist=4

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்


புதுதில்லி, ஆக. 15: சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திடீரென தனது சிறுவயது கால ஞாபகம் வரவே தான் வாழ்ந்த கிராமத்தின் நினைவில் ஆழ்ந்தார். இரவு நேரத்தில் பள்ளிப்பாடங்களை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்ததாகவும் தெரிவித்தார்.

சிறுவயதில் தான் பட்ட சிரமங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அவர் கூறியதாவது:

பிரிவினைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தது எனது பட்டிக்காட்டு கிராமம். 10 வயதாகும் வரை நான் பட்ட சிரமங்கள் ஏராளம். எனது கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, குடிநீர் வசதி இல்லை, டாக்டர் இல்லை, சாலைகள் இல்லை, தொலைபேசி வசதி இல்லை. இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் கிடைக்கும் அரைகுறை வெளிச்சத்தில் எனது பாடங்களை படிப்பேன். ஆனால் நாடு விடுதலை பெற்றபிறகு கிராமப்புறங்களில் கணிசமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இன்னும் பல இடங்களில், நான் சிறு வயதில் பட்டது போன்ற சிரமங்களை, எத்தனையோ பேர் அனுபவிக்கின்றனர். அதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றவுடன் இந்த நிலைமையை மாற்ற முற்பட்டது. பாரத் நிர்மாண் போன்ற நல்ல பல திட்டங்களை மேற்கொண்டது.

கிராமங்களை புனரமைக்கும் நோக்கில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

கிராமப்புற இந்தியாவின் தோற்றத்தை முழுமையாக மாற்றுவதே இந்த அரசின் லட்சியம். இதை கட்டாயம் நிறைவேற்றிக் காட்டுவோம். கடந்த 4 ஆண்டுகளில் பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளோம்.

இந்த அரசின் முயற்சிகளால் புதுமைமிக்க வளமான இந்தியா உருவாகப் போவது உறுதி என்றார் மன்மோகன் சிங்.

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்




* கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு கவனம்

* 6000 புதிய உயர்தர மாதிரி பள்ளிகள் அமைப்பு

* ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தது ஒரு பள்ளி

* பின்தங்கிய மாவட்டங்களில் 30 புதிய பல்கலைக்கழகங்கள், 8 புதிய இந்திய தொழில்நுட்பப் பயிலகங்கள், 7 புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 10 புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப பயிலகங்கள், 5 புதிய இந்திய அறிவியல் கழகங்கள், இரண்டு திட்டமிடல் மற்றும் கட்டடக் கலைப் பள்ளிகள், 10 தேசிய தொழில்நுட்ப பயிலகங்கள் மற்றும் 1000 புதிய பாலிடெக்னிக்குகள் அமைக்கப்படுகின்றன.

* வேளாண்துறைக்கு அளிக்கப்பட்ட கடனுதவி கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 81 ஆயிரம் கோடியிலிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

நிலவுக்கு இந்த ஆண்டில் இந்தியாவின் விண்வெளி ஓடம் "சந்திராயன்'

* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உறுதிமிக்க நடவடிக்கைகள்.

* அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக வளர்ந்த நாடுகளுடன் பேச்சு

* தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், குடிமக்கள் அமைப்புகள், சமூக, மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.

* ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த தொடர்ந்து அயராது முயற்சி

* தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் இந்தியா, பாகிஸ்தான் மக்களின் விரோதிகள்.

Friday, August 15, 2008

முதுகுளத்தூரில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் பஸ் நிலை யத்தில் முருகவேல் எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றினார். இதில் நல்லாசிரியர் அப்துல் காதர், பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி, அரசு மேல்நி லைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி ஆகிய வற்றை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண் டனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமு தேசியக் கொடி ஏற்றி னார். இதில் நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் சுகுமாறன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் ïனியன் அலுவலகத்தில் ïனியன் தலைவர் ஈஸ்வரி கருப்பையா தேசியக்கொடி ஏற்றினார். இதில் ஆணையாளர்கள் ஆதி மூலம், சுப்பிரமணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண் டனர். இதே போல பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதி காரி முனியாண்டி முன்னி லையில் பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் கொடி ஏற்றினார். இதில் துணை தலைவர் ஷாஜ கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு


சென்னை, ஆக. 14: ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 267.62 கோடி இழப்பீடாக வழங்கப்பட உள்ளது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமே பயனடைந்து வந்த இத்திட்டத்தில், பயிர்க்கடன் பெறாத விவசாயிகளையும் சேர்த்து அவர்கள் செலுத்தும் பிரிமீயம் தொகையில் 50 சதத்தை மானியமாக வழங்கிட 2006-07-ல் ரூ.8 கோடியும், 2007-08-ல் ரூ.15 கோடியும், 2008-09-ல் ரூ.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 2005-ல் 1 லட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2006-ல் 3 லட்சமாகவும், 2007-ல் 5.5 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை ரூ. 267.62 கோடி என இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 150.53 கோடியும், சிவகங்கை விவசாயிகளுக்கு ரூ. 57.73 கோடியும், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 27.96 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டு தொகையில் 50 சதம் மாநில அரசும், 50 சதம் மத்திய அரசும் ஏற்கின்றன. இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிட்டு அரசியல் லாபம் பெற முயற்சிப்பதற்கு, செவிசாய்க்காமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

""சுதந்திரம் காத்திடுவோம்''

""சுதந்திரம் காத்திடுவோம்''

வீ. சுந்தரமகாலிங்கம்



இப்போது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு,

அப்துல் கலாம் கண்ட கனவு

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில்

இந்தியா வல்லரசு ஆகணுமாம்!

நல்லரசாகவும் நிலவ வேண்டும்!

கொஞ்சம் எனக்குச் சந்தேகம்

அதற்குள் இந்திய தேசம்

மக்கள் தொகையில் முதன்மையாகலாம்!

(இ)லஞ்சம் பெறுவதிலோ உலகில்

கஞ்சத்தனமே இல்லாமல் அஞ்சாம்

இடமாகலாம்! நினைப்பது ஒன்றும்

நடப்பது வேரொன்றும் என்பதாம்

இதுதானோ! வேலை தேடுவோர் பட்டியலில்

இரண்டு கோடியாம்! வறுமைக்

கோட்டின்கீழ் முப்பது கோடியாம். இன்று!

நாட்டில் எங்கும் தீவிரவாதிகளின்

நடமாட்டம்! குண்டுகள் வெடித்துக்

கொண்டாட்டம் கண்டும், மக்கள்,

பயந்து கொண்டும் வாழ்கிறார்!

பயனுள்ள செயல்கள் எல்லாம் தயங்காமல் செயல்பட வேண்டும்

இந்தியா எதிலும் முந்திச் செல்ல

அணுசக்தி, ஒப்பந்தம் நிறைவேற்றிட

அணுகியதில், பாராளுமன்றம் நம்பிக்கை

வோட்டில் பெற்றதாம் வெற்றி!

கோடி கோடியாய்ப் பெற்றனராம் வோட்டுப் போட!

மூடிமூடி வைத்தாலும் மறைக்க முடியுமா?

விலைவாசியோ வானளவு உயர்ந்திட

மலைப்பாக இருக்கிறார் மக்கள்!

நிலையாக விலைவாசி நின்றிட

அலையாக ஆட்சியர் இயங்கிட

கலையாத ஆட்சி நிறுவிட

விலைபோகாமல் தேர்தலில் வென்றிட

தலையாய சேவைகள் செய்திடுவீர்!

உலைபோல உழைத்திடுவோம்! செதுக்கிய

சிலையான சுதந்திரத்தைக் காத்திடுவோம்!

சுதந்திரமே உன்னால்...!

சுதந்திரமே உன்னால்...!


சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி
என்று வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

நன்றி:முத்துக்கமலம்.

http://thamizheamude.blogspot.com/

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று அறிவித்துள்ளவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. வேல்ச்சாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்செல்வனூர் ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.), முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்தினரும் அறிவித்துள்ளனர்.

சுதந்திரதின நாளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்பவர்கள் தேசத் துரோகிகள். இவர்களை குண்டர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ராமநாதபுரம், ஆக. 14: ஒரு சிலிண்டர் இணைப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு இல்லாத அனைத்துப் புதிய குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணை பெற்றுக் கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட், செப்டம்பர் 2008 ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் 2 லிட்டர் மண்ணெண்ணையுடன் கூடுதலாக ஒரு லிட்டர் சேர்த்து 3 லிட்டர் வீதம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்



ராமநாதபுரம், ஆக. 14: அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம், ரா.சந்திரசேகரன் ஆகியோர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அணுக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அவசியத்தையும், அவசரத்தையும் தெரிந்து கொள்ளும் அவர்கள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அந்தக் காரியத்தை செய்து கொடுப்பதற்காக உங்களிடம் லஞ்சம் கேட்பார்கள். இதற்கு நீங்கள் லஞ்சம் தரவேண்டியதில்லை. எனவே அவர்களைப் பற்றிய புகார்களை நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் ராமநாதபுரம் பாரதிநகர் ஓம்சக்தி கோயில் அருகில் கதவு எண் 2/1873 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உங்களுடைய வேலையை முடிக்காமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்தாலும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

முக்கியமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தாலும் அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ சொத்து வாங்கி இருந்தாலும் தெரிவிக்கலாம். சொத்து விபரம் (நிலம், வீடு, வீட்டுமனை, வங்கி சேமிப்பு, வாகனங்கள், டெபாசிட், லாக்கர், பாலிசிகள், தங்கம், வெள்ளி முதலிய ஆபரணங்கள், ரொக்கம் முதலியன) பற்றியும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து தபால் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு அலுவலக தொலைபேசி எண் 04567-230026 அல்லது இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம் (9443503477), ரா.சந்திரசேகரன் (9442268400) என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

ராமநாதபுரம், ஆக. 14: பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சிப் பள்ளியில் இலவசமாக குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முடிவில் அவர்கள் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் முதல்வர் க.மணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 45 நாட்கள் தினசரி மாலை 5 மணி முதல் 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முகாம் இம்மாதம் 18 ஆம் தேதி துவங்குகிறது.

வயது 14 முதல் 40 வரையும், 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வீட்டு வயரிங், கடைசலர், கியாஸ் வெல்டிங், ஆர்க் வெல்டிங், வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ்-1, பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், தொழிற்சாலைகளில் சான்றிதழ் இல்லாமல் வேலை செய்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் முதல்வர் சு.மணி தெரிவித்தார்.

முதுகுளத்தூரில் ரகளை: இளைஞர் கைது

முதுகுளத்தூரில் ரகளை: இளைஞர் கைது



முதுகுளத்தூர், ஆக. 14: முதுகுளத்தூரில் புதன்கிழமை ரகளை செய்த இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.

காக்கூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் துகுளத்தூர் பஸ் நிலையம் அருகே ரகளையில் ஈடுபட்டு. பொது மக்களுக்கு இடையூறு செய்தாராம். ரோந்து சுற்றிவந்த காவல் ஆய்வாளர் பாலமுருகன், தலைமைக் காவலர்கள் ஐந்துகாயம், செல்வராஜ் ஆகியோர் மணிகண்டனை கைது செய்தனர்.

Thursday, August 14, 2008

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது


முதுகுளத்தூர்,ஆக.15-

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட் டம் நடத்தப்போவதாக அறிவித்த தியாகியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தியாகி மனைவி

கடலாடி தாலுகா ஆப்ப னூர் கிராமத்தை சேர்ந்தவர் நீல மேகத்தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவ ரது மனைவி ராமு அம்மா ளுக்கு அரசு சார்பில் ஆப்ப னூரில் 5 செண்டு நிலம் வழங் கப்பட்டது.

ஆனால் இந்த இடத்தை அரசு சார்பில் ஊரணி வெட் டுவதற்காக ஒதுக்கியுள்ளனர். இந்த இடத்திற்கு பதிலாக அவருக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இது வரை வேறு இடம் ஒதுக்கி வழங்கப்படவில்லையாம்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் அவர் சுதந்திர தினத்தன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தனது குடும் பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அறிவித் திருந்தார். இதுகுறித்து கட லாடி கிராம நிர் வாக அதிகாரி முத்துவேல் போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கட லாடி போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ் பெக்டர் சிவஞானமூர்த்தி மற் றும் போலீசார் தேச விரோத செயல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராமு அம் மாள், அவரது மகன் கணே சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத் தனர்.

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி


தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்


ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் மாவட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்கா ளர் பட்டியல் குளறுபடியாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பலர் அலைக்கழிக்க வைக்கப்படுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை ஜூலை 24 முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அந்தந்த

வாக்குச்சாவடிகளில் பெறவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி, அங்கு பொதுமக்களிடம் பூர்த்தி செய்து பெறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, மாவட்ட நிர்வாகமும், பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றால் எந்த பட்டியலும் வைக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலை பார்த்தால் மட்டுமே தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். வாக்காளர் பட்டியலை அலுவலர்கள் காட்ட மறுப்பதாக பல இடங்களில் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதனால், வாக்குச்சாவடி மையங்கள் அல்லது சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு, குடிபெயர்ப்பு மற்றும் நீக்கம் உள்பட விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. விண்ணப்பங்கள் ஸ்டாக் இல்லை. ஜெராக்ஸ் கடையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் கூறி பொதுமக்களை அனுப்பி வைக்கின்றனர். ராமநாதபுரம் சபாநடேசய்யர் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் முதல் பல வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பம் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதுபோன்ற தவறுகளை சில அரசு அலுவலர்கள் தொடர்ந்து செய்து வருவ தால் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை தெரிந்து கொள்ள முடி யாமல் மக்கள் தினமும் ஏமாற்றம் அடைகின்றனர்.

கடந்த வாரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது நிறைய குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினால் வாக்காளர் பட்டியலின் குளறுபடி வெளிச்சத்திற்கு வரும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

சாயல்குடி அருகே நரிப்பையூர் பகுதியில் வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் மக்கள் நலத் திட்டப்பணிகளை ஜப்பான் தொண்டு நிறுவன அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.

முதுகுளத்தூர் வட்டார வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவன சார்பில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களில், பொது மக்களுக்காகப் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றி வருகின்றனர்.

குறிப்பாகக் குடிநீர் வசதி, ஊருணிகள் வெட்டிதல், சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து வருகின்றனர்.

சாயல்குடி மையத்தைச் சேர்ந்த நரிப்பையூரில் நடைபெற்றுள்ள மக்கள் நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட, ஜப்பான் நாட்டு தொண்டு நிறுவன அலுவலர்கள் சிகோ அகியோமா, டுமாகோ ஐடேகா ஆகியோர் தலைமையில் 20 பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜே. ஜெசுகரன் தலைமையில் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளிட பலரும் வரவேற்றனர்.

ஜப்பான் குழுவினர், நலத் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு பாராட்டினர்.

மேலும் நரிப்பையூர் ஜனசக்தி மகளிர் கூட்டமைப்பு பயிற்சி அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் ஜப்பான் குழுவினர் கண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜெசுகரன் தலைமயில், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் யோவான், இளங்கோவன், பால் முத்தையா மற்றும் திட்டப்பணியாளர்கள் பலரும் செய்திருந்தனர்.

Monday, August 11, 2008

முதுகுளத்தூரில் செல்போனை திருடியதாக கூறியதால் நண்பர்கள் இடையே தகராறு

முதுகுளத்தூரில் செல்போனை திருடியதாக கூறியதால் நண்பர்கள் இடையே தகராறு
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


முதுகுளத்தூர்,ஆக.11-

முதுகுளத்தூரில் நண்ப னின் செல்போனை திருடி விட்டதாக கூறிய தால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நண்பர்கள்

ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த கார்மேகம் என் பவரது மகன் முத்துப்பாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் விநாயகம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் விடுமுறை யில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் விநாயகம் முதுகுளத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி அவரும், அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி மற்றும் பாலா என்ற பாலகிருஷ்ணன், மங்கள விஜயன் ஆகியோர் ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு ஒரு ஆட் டோவில் சென்றனர்.

தகராறு

அங்கு விநாயகம் மட்டும் தனது மாமியார் வீட்டில் இறங்கி கொண்டு தனது நண் பர்களை கடையில் சாப்பிட கூறி அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பினாராம். இதைத் தொடர்ந்து சாப்பிட சென்ற இடத்தில் நண்பர்க ளிடையே தகராறு ஏற்பட் டது. அப்போது விநாயகத் தின் செல்போனை முத்துப் பாண்டி திருடி விட்டதாக மங்கள விஜயன் புகார் கூறி னாராம். இதனால் அவர்க ளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த மங் கள விஜயன் அருகில் கிடந்த கார் லீவரை எடுத்து முத்துப் பாண்டியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து பால கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துப்பாண்டியை குத்த முயன்றாராம்.

கைது

உடனே சுதாரித்துக் கொண்ட முத்துப்பாண்டி யன் படுகாயத்துடன் தப்பி ஓடி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மங்கள விஜயன், பாலகிருஷ் ணன் ஆகியோரை கைது செய்தனர். சிகிச்சைக்காக முத்துப்பாண்டியை முதுகு ளத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

Sunday, August 10, 2008

முதுகுளத்தூர் மவ்லவி அப்துல் காதர் ஆலிம் இல்லத் திருமணம்! பேராசிரியர் கே.எம்.கே. தலைமையில் நடக்கிறது !!




துபாய் அமீன் சகோதரர் திருமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

www.mudukulathur.com


மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிமின் புதல்வரும்,துபாய் அமீன் சகோதரரும், முதுகுளத்தூர் திடல் மன்சூர் அஹமது சேட் ( முதுவை ரோஸ் லேடிஸ் கார்னர் ஹபிபுல்லாஹ் சகோதரர் ) மைத்துனருமான

ஏ. ரஸீன் அஹமது பி.இ. ( பொறியாளர், Bemaco - கத்தார் ) மணமகனுக்கும்

ஸ்ரீ வில்லிபுத்தூர் என்.ஜி.என். காஜா மைதீன் அவர்களின் மகளுக்கும் திருமணம் இன்ஷா அல்லாஹ் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏ.எம். முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில் 20.08.2008 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இத்திருமண விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ. அவர்கள் தலைமை தாங்க இருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்,இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி, டாக்டர் ஏ. அமீர்ஜஹான், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ. முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஈ, முஸ்லிம் லீக் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மணமக்கள் ஹக்கில் அனைவரும் துஆ செய்ய அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், 41 அமெரிக்கன் மிஷன் சர்ச் தெரு, மதுரை 625 001
தொலைபேசி : 0452 - 2337990 / 98 421 58 543

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

சாலை வசதி செய்துதராத தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு; இராமநாதபும் மாவட்டம் முதுளத்தூர் வட்டம் ஏனாதி ஊராட்சியை சேர்ந்தது பொந்தம்புளி கிராமம் இங்கு 100 குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த கிராம மக்களின் பிரதானதொழில் விவசாயம் ஆகும். இதனால் ஊர் மக்கள் கிராமத்திலேயே உள்ளனர். ஆனால் இவர்களால் எங்குமே வெளியில் செல்ல முடிவதிலை. காரணம் சாலை வசதி இல்லாததே இக்கிராம மக்களும் அனைத்து அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் சாலை வசதி கோரி மனு கொடுத்தும் பயனில்லை. ஒரு ஊரே எந்தவித வசதியும் இன்றி தீவு போல் காட்சியளிக்கின்றது. அரசும், அதிகாரிகளும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தலைவர் தங்கமுத்து தலைமையில் வருகிற ஆகஸ்ட் 15_ந் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்ற உள்ளனர்.

மேலும் தங்கள்ளது குடும்ப அட்டைகளையும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்க கிராம மக்கள் முடிவுசெய்துள்ளனர்.

Saturday, August 9, 2008

முதுகுளத்தூர் அருகே வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்தந்தை புகார்

முதுகுளத்தூர் அருகே வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்தந்தை புகார்

முதுகுளத்தூர், ஆக.9-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட முத்து விசயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. அவரது மகன் மார்ட்டின் (வயது 25). திருமணமாகாத இவர் சண்டிகாரில் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ் காரராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தனது தாயாருக்கு உடல்நிலைசரி இல்லை என்று மேல் அதிகாரியிடம் விடுமுறைக்கான கடிதம் கொடுத்து ஊருக்கு செல்வதாக கூறினார்.

நேற்று சண்டிகாரில் இருந்து அந்தோணிக்கு ஒரு தந்தி வந்தது. அதில் உங்கள் மகனை உடனே பணிக்கு அனுப்புங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது தான் மார்ட்டின் சண்டிகாரில் இல்லாத விசயம் அந்தோணிக்கு தெரியவந்தது.

ஆனால் மார்ட்டின் இதுநாள்வரை ஊருக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அந்தோணி கீழத்தூவல் போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில், மாயமான தனது மகன் மார்ட்டினை கண்டு பிடித்து தரும்படி கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டின் என்ன ஆனார்ப எங்கு சென்றார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெசுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி

மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெசுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி
அந்தந்த ïனியன் அலுவலகங்களில் நடக்கிறது


ராமநாதபுரம்,ஆக.9-

சுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி அந் தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வருகிறது.

வங்கி கடன்

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள சுய உதவி குழுக்க ளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கவும், பயிற் சிகள் வழங்கவும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வச திகள் ஏற்படுத்தி கொடுக்க வும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட கண்காட்சி கள் நடத்தவும் பொன் விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராமநாத புரம் மாவட்டத் தில் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்க குழுக் களை தரம் பிரிக்கும் பணி அந்தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வரு கிறது.

ïனியன் வாரியாக

வருகிற 12-ந்தேதி மண்டபத் திலும், 13-ந்தேதி கடலாடியி லும், 14-ந்தேதி நயினார் கோவிலும், 20-ந்தேதி முது கு ளத்தூரிலும், 21-ந்தேதி பரமக் குடியிலும், 22-ந்தேதி திருப்புல் லாணியிலும், 26-ந்தேதி ஆர். எஸ்.மங்கலத்திலும், 27-ந் தேதி போகலூரிலும் நடை பெறு கிறது. இதுவரையிலும் தரம் பிரிக்கப்படாத அனைத்து சுய உதவி குழுக்களும் சம்பந்தப் பட்ட நாளில் அந்தந்த ïனி யன் அலுவலகங்களில் நடை பெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித் தார்.

ஒரு சிலிண்டர் பெறும் பயணாளிகளுக்கு தலா ரூ.30 மானியம் ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ஒரு சிலிண்டர் பெறும் பயணாளிகளுக்கு தலா ரூ.30 மானியம் ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம் ஆக 9.

தமிழக அரசு 01.07.08 முதல் ஒரு உருளை(சிலிண்டர்)எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு எரிவாயு உருளை விற்பனை விலையில் ஒரு உருளைக்கு ரூ.30/_மானியமாக வழங்க அரசானைண பிரப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 08ம் மாதத்தில் ஒரு உருளை பெறும் பெறும் பயனாளிகளுக்கு ரூ.8,57,340/_மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 08ம் மாதத்திற்கும் ஒரு உருளை பெறும் பயனாளிகள் ரூ.30/_மானியம் பெற்றுக்கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் ஆக 9.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2008 மாதத்திற்க்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.8.08 அன்று

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக்கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் தெரிவிக்கிறார்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி விழாவில் இலவச மிதிவண்டி வழங்கல்

321 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் அமைச்சர் சுப.தங்கவேலன் வழங்கினார்

ராமநாதபுரம் ஆக 9.,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மேல்நிலை வகுப்பு பயிலும் 321 மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகளை குடிசை மாற்று மற்றும் இடவசதிக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் சுப.தங்கவேலனஅ வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அமைச்சர் பேசும்போது

தெரிவித்ததாவது: தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகள் இலவச பேருந்து அனுமதி அட்டை போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.தற்போது மிதி வண்டிகள் இலவசமாக மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கல்வித்துறையின் வளர்ச்சிக்காக மாணவர்களின் நலன் கருதி அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு முன்னேற்றத்திட்டங்களுள் ஒன்றாக இத்திட்டம் அமைந்துள்ளது.

மாணவர்களை மென்மேலும் ஊக்குவிக்க கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1000மாணவர்களுக்கு மடி கணினிகளை அரசு வழங்கியுள்ளது.மேலும் எல்காட் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் கணினி கருவிகள் மாணவர்களுக்கு வழங்கவும் அரசு அறிவித்துள்ளது என்றார்.

விழாவில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.முருகவேல் முன்னிலையுரையாற்றினார்.அபிராமம் பேரூராட்சி தலைவர் கணேசன்,முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ.எம்.முகமது இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள்.

Friday, August 8, 2008

மாவட்ட யோகாசன போட்டி ஆக.16ல் நடக்கிறது

மாவட்ட யோகாசன போட்டி ஆக.16ல் நடக்கிறது

ராமநாதபுரம், ஆக.8: மாவட்ட அளவிலான யோகாசனப்போட்டி ஆக.16ம் தேதியன்று ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டரங்கில் நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட யோகாசன சங்க பயிற்சியாளர் காசிநாததுரை கூறியதாவது: மாவட்ட அளவிலான யோகாசன போட்டி வரும் 16ம் தேதி துவங்குகிறது. மாவட்ட யோகாசன சங்கமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் இப்போட்டி ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டரங்கில் நடக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம். 5 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

போட்டி விபரம் அறிய 9865506506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உப்பு தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா

உப்பு தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா

கடலாடி, ஆக.8: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் உப்பு தொழிற் சாலை சுத்திகரிப்பு நிலைய துவக்க விழா நடந்தது. கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு உப்பு நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குநருமான விஜயகுமார், முதுநிலை மேலாளர் சுந்தரராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் சுப.தங்கவேலன் பேசியதாவது:

உப்பு நிறுவனத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாலிநோக்கம் ஓடைக்குளம் சாலையை உப்பு நிறுவனம் சார்பில் பராமரிக்கப்படும். டிஎம் கோட்டை, கரிசல்குளம், செவல்பட்டி, புச்சாபுரம் சாலைகளை சீரமைக்க ரூ.4.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடஞ்சேரி, தத்தங்குடி சாலையை சீரமைக்க சுனாமி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. உப்பு நிறுவன ஊழியர்கள் அனைவரும் அரசு தொழிலாளர் நலவாரியத்தில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசுகையில், ÔÔவாலிநோக்கம் உப்பு தொழிற்சாலையில் 700 டன் உற்பத்தி நடந்தது. உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தாமல் கிடக்கிறது. அதனை பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 75 டன் உற் பத்தி கூடுதலாக கிடைக்கும்,ÕÕஎன்றார்.

Thursday, August 7, 2008

ராமநாதபுரத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.09.2008 காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்குறை தீர்க்கும் நாளில் ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை மனுவின் மூலம் விருப்பமுள்ள ஓய்வூதியதாரர் மாவட்ட ஆட்சித்தலைவர், ராமநாதபுரம் என்ற முகவரியில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு பெயரிட்டு ''இரட்டைப்பிரதிகளில் 5.9.08க்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பம்

அனுப்பிய ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியீடு

தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியீடு
முக்கியமான ரெயில் நிலையங்களில் கிடைக்கிறது


சென்னை, ஆக.6-

ரெயில்வே கால அட்டவணை தமிழில் வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றின் விலை 30 ரூபாய்.

தமிழில் ரெயில்வே கால அட்டவணை

ரெயில்வே கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 1-ந் தேதி வெளியிடப்படுகிறது. ஜுலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை கால அட்டவணை அமலில் இருக்கும். இந்த ஆண்டு, அகில இந்திய அளவில் ஓடும் ரெயில்களுக்கான கால அட்டவணையும் (விலை 35 ரூபாய்), தென்மண்டலங்களுக்கான கால அட்டவணையும் (விலை 30 ரூபாய்) வெளியிடப்பட்டு உள்ளது.

தெற்கு ரெயில்வே சார்பில் தென் மண்டலங்களுக்கான கால அட்டவணையை (ஆங்கில பதிப்பு) சென்னையில் கடந்த மாதம் 1-ந் தேதி ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு வெளியிட்டார். அப்போது, தமிழில் ரெயில்வே கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்தார்.

அதன்படி, தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரெயில்வே, செகந்திராபாத்தில் உள்ள தென்மத்திய ரெயில்வே, கர்நாடக மாநிலம்-ஊப்ளியை தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு ரெயில்வே, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொங்கன் ரெயில்வே ஆகிய 4 மண்டலங்களில் ஓடும் ரெயில்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தமிழில் தெளிவாக தொகுத்து தரப்பட்டு உள்ளன.

4 மண்டல ரெயில்களின் விவரம்

தமிழ் ரெயில்வே கால அட்டவணையில், அதனைப் பயன்படுத்தும் முறை, ரெயில்கள் போய்ச் சேரும் இடங்கள், ரெயில்களின் பட்டியல், தென்மண்டலத்தில் உள்ள 4 மண்டலங்களிலும் ஓடும் ரெயில்கள், மீட்டர் கேஜ், அகல பாதை மற்றும் கொங்கன் ரெயில்வேயில் ஓடும் ரெயில்கள், ராஜதானி, சதாப்தி, ஜன்சதாப்தி, சம்பர்க் கிராந்தி, கரீப் ரத் (ஏழைகள் ரதம்) போன்ற முக்கிய ரெயில்களின் கண்ணோட்டம் ஆகியவை பல்வேறு வண்ணத்தில் அழகாக அச்சிடப்பட்டு உள்ளன.

இதுபற்றி தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீனு இட்டேரா கூறியதாவது:-

5 ஆயிரம் பிரதிகள்

தென் மண்டலங்களுக்கான ரெயில்வே தமிழ் கால அட்டவணை முக்கியமான ரெயில் நிலையங்களில் கிடைக்கும். முதல்கட்டமாக 5 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தேவைக்கேற்ப மேலும் அச்சிட்டு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தென்மண்டல ரெயில் போக்குவரத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் பயணிகள் எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஏதாவது குறைகள் இருந்தால் ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்படி பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்
காந்திகிராம பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் வேண்டுகோள்


சின்னாளப்பட்டி, ஆக.7-

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று காந்திகிராம பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் வில்லியம் பாஸ்கரன் கூறினார்.

12 நாள் பயிற்சி

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் வளர்ச்சி மற்றும் கருத்தாக்க மையமான `இடாரா` அமைப்பும், மத்திய அரசின் நேரு இளையோர் மைய மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி, சென்னை ஆகியவை இணைந்து தேசிய சேவை தொண்டர்களுக்கான 12 நாள் பயிற்சியை நடத்தியது.

இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 30 தேசிய சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் நிறைவு நாள் விழா காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு `இடாரா` மையத்தின் இயக்குனர் பேராசிரியர் சிவராமன் தலைமை தாங்கி பேசினார்.

விழாவில் பயிற்சி பெற்ற சேவை தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அர்ப்பணிக்க வேண்டும்

சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கிராமத்தில் உள்ள பொது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு சிக்கல்களில் மாட்டி தவிக்கின்றனர். சாதி, மத மோதல்களும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இதையெல்லாம் மாற்றி சிறந்த குடிமக்களாக, மக்களை மாற்ற வேண்டும் என்றால், இன்றைய இளைஞர்கள் எளிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். மேலும் தேசிய சேவை தொண்டர்களாக மாற உள்ளவர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களது சேவையை அர்ப்பணிக்க வேண்டும்.

இவ்வாறு வில்லியம் பாஸ்கரன் கூறினார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட நேரு இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம், திண்டுக்கல் ஒருங்கிணைப்பாளர் விஜயா, இடாரா உதவி திட்ட இயக்குனர் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூற்றாண்டு விழாவையொட்டி தேவர் சிறப்பு தபால் தலை வெளியிட கோரிக்கை

நூற்றாண்டு விழாவையொட்டி தேவர் சிறப்பு தபால் தலை வெளியிட கோரிக்கை


மதுரை, ஆக.7-

பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என செக்கானூரணியில் நடந்த அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் மாநாடு, பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழா ஆகியவை செக்கானூரணியில் நடைபெற்றது. நிறுவனர் பி.என்.அம்மாவாசி தலைமை தாங்கினார். எஸ்.ஏ.சுரேந்திரன் வரவேற்று பேசினார்.

இதனையொட்டி நடந்த பேரணிக்கு பி.கனி தலைமை தாங்கினார். டீக்கடை செல்வம் முன்னிலை வகித்தார். கவிஞர் கோ தொடங்கி வைத்தார். மாநாட்டில் காங்கிரஸ் பிரமுகர் ரா.சொக்கலிங்கம், ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், தமிழ்தாங்கி சங்க பொதுச்செயலாளர் மா.திரவியபாண்டியன், வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், பிரமலை கள்ளர் பேரவை மாநில அமைப்பாளர் ஆர். அருளானந்தம், ராணுவவீரர் எஸ்.வேலுச்சாமி, கனகமகால் ஆர்.கார்த்திகேயன், தியாகி பாலகிருஷ் ணன் ஆகியோர் பேசினார்கள்.

பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும், 58 கிராம கால்வாய் திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய பொதுச்செயலாளராக பி.என்.அம்மாவாசி, தலைவராக ரா.ஜெயச்சந்திரன், பொருளாளராக பி.கே.செல்வம், மாநில தலைவராக ஏ.எஸ்.மச்சராசுத்தேவர், செயலாளராக பிச்சைஅம்பலம், பொருளாளராக எல்.செல்வம், மாநில இளைஞரணி செயலாளராக அ.மணிகண்டன், தொழிற்சங்க தலைவராக பரட்டையாண்டி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட தலைவராக எஸ்.அய்யாவுத்தேவர், செயலாளராக கே.நேரு, பொருளாளராக பி.செல்லப்பா, மாவட்ட தொழிற்சங்க தலைவராக ஜே.ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கடலாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு

கடலாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை


சாயல்குடி,ஆக.7-

கடலாடியை சேர்ந்த கல் லூரி மாணவி கொலை வழக்கில் தொடர்ந்து மர் மம் நீடித்து வருகிறது. இது குறித்து போலீசார் பல் வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இளம்பெண்

கடலாடி அருகே இளஞ்செம்பூர் போலீஸ் சரகம் சவேரியார் பட்டினத்தை சேர்ந்தவர் சேசு. இவரது மகள் அருள்ஜோதி(வயது 20). இவர் கடந்த 1-ந்தேதி மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிணத்திற்கு அருகில் கிடந்த சூட்கேசை போலீ சார் கைப்பற்றி சோதனை யிட்ட போது, ஒரு டைரி சிக் கியது. அதில் அவர் சென் னையில் உள்ள ஒரு கல்லூ ரியில் படித்து வந்தது தெரிய வந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? ஏன் சோழவந்தானுக்கு வந்தார்? ஏன் கொலை செய்யப்பட் டார்? என்பது குறித்து போலீ சார் குழப்பமடைந்தனர்.

தகவல்

உடனே போலீசார் கல்லூ ரியை தொடர்பு கொண்ட போது, அவர்கள் அருள் ஜோதி கல்லூரியில் சேரும் போது கொடுத்த தொலை பேசி எண்ணை தெரிவித்த னர். அது சவேரியார் பட் டினம் தூய சந்தியாகப்பர் ஆலய பாதிரியார் டேவிட் என்பவரது டெலிபோன் எண் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பாதிரியார் டேவிட்டை தொடர்பு கொண்டு அருள் ஜோதி இறந்த தகவல் பற்றி தெரிவித்தனர். இதுகுறித்து அவர் அருள்ஜோதியின் தாயார் வியாகுல அம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர்கள் சோழ வந்தானுக்கு சென்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிணத்தை பெற்று அடக்கம் செய்தனர்.

விசாரணை

இந்நிலையில் சோழ வந் தான் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாத்தப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சவேரியார் பட்டினம் வந்தனர். அங்கு பாதிரியார் டேவிட், தாயார் வியாகுல அம்மாள் மற்றும் உறவினர் களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண் அருள் ஜோதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wednesday, August 6, 2008

நாளை முதல் முதுகுளத்தூர் தவிர 25 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்

நாளை முதல் 25 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்


ராமநாதபுரம், ஆக. 6: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. நாளை (6ம் தேதி) கடலாடி பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், 10ம் தேதியன்று பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12ம் தேதியன்று பெருங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், 13ம் தேதி திருப்புல்லாணி பஞ்.யூனியன் பள்ளியில் நடக்கிறது.

வருகிற 14ம் தேதி ராமநாதபுரம் ஆர்சி சர்ச் வளாகத்திலும், 16ம் தேதி பரமக்குடி ஆயிரவைசிய பள்ளியிலும், 17ல் தேவிப்பட்டினம் முஸ்லிம் சட்ட கட்டடத்திலும் நடக்கவுள்ளது.

வருகிற 18ம் தேதியன்று திருஉத்திரகோசமங்கை யாதவ சங்க கட்டடத்திலும், செவ்வூர் பஞ். யூனியன் பள்ளியில் நடக்கிறது. 19ம் தேதி பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 20ம் தேதி ராமநாதபுரத்தில் பஞ். யூனியன் பள்ளியிலும், 22ம் தேதி மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24ம் தேதி தங்கச்சிமடம் பஞ். யூனியன் பள்ளி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

வருகிற 25ம் தேதியன்று போகலூர் பஞ். யூனியன் பள்ளியிலும், 28ம் தேதி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29ம் தேதி ஆண்டாவூரணி ஆர்சி சர்ச் வளாகத்திலும், 31ம் தேதி கமுதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பேரையூர் பஞ். யூனியன் பள்ளி, பரமக்குடி நகராட்சி பள்ளியிலும் நடக்கவுள்ளது.

முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

முதுகுளத்தூர் ஆக. 6: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் முதுகுளத்தூரில் நடந் தது. அரசு மருத்துவமனை யில் நடந்த முகாமிற்கு, முதுகுளத்தூர் இன்ஸ் பெக்டர் பால முருகன் தலைமை வகித்தார். டாக் டர் அஜிஸ் துவக்கி வைத் தார். பேரூராட்சி துணை தலைவர் ஷாஜஹான், ஜமாத் தலைவர் யாசிகை, லோகநாதன் முன்னிலை வகித்தனர். 72 பேர் ரத்ததானம் செய்தனர். ஆசிரியர் துரைப்பாண் டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடலாடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

கடலாடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்


கடலாடி, ஆக. 6: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளிக் கு போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலாடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வர்த்தக சங்கத் தினர் கடந்த 31ம் தேதி கடை யடைப்பு போராட் டம் நடத்தினர்.

இதையடுத்து, வர்த்தகர்கள் மற்றும் கட லாடி அரசு மருத்துவ மனை டாக்டர்கள் பிரச்¬ னகள் குறித்த சமா தான கூட்டம் தாலுகா அலு வலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் கதிரேசன், மண்டல துணை வட்டாட்சியர் ரவிராஜ், வர்த்தக சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் செல்வராஜ், டாக்டர்கள் கணேச மூர்த்தி, முத்தரசன் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.
கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், சாயல்குடியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் கடலாடி பகுதிவாசிகளுக்கு இருக் கைகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத் தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கடலாடி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருக்க வேண் டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வெளியூரில் இருந்து வரு வதால் மருத்துவ மனை யில் தங்கி சிகிச்சை அளிக்க முடியாது என டாக்டர்கள் மறுத்து விட் டனர். இதுகுறித்து பின் னர் ஒரு தேதியில் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் பேசலாம் என தாசில்தார் கதிரேசன் தெரிவித்தார்.

முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவசாயி வீடு சூறை

முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவசாயி வீடு சூறை

முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவ சாயி வீட்டை சூறையாடி யவரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவ ரது மகன் பால்ச்சாமி(வயது 52). அதே ஊரைச்சேர்ந்தவர் வேலு மகன் ராமையா (65). இவர் தனக்கு சொந்தமான கிணற்றில் இருந்து அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மோட்டார் மூலம் வாடகைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.

இந்நிலையில் இவரிடம் பால்ச்சாமி தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சும்படி கேட் டுக்கொண்டதன் பேரில் அவ ரது வயலுக்கு மோட்டார் மூலம் ராமையா தண்ணீர் பாய்ச்சினார். ஆனால் இதற் கான வாடகை பணத்தை பால்ச்சாமி கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்த டித்து வந்ததாக கூறப்படு கிறது.

வீடு சூÛ
இதனால் ஆத்திரமடைந்த ராமையா அவரது வீட்டிற்கு சென்று பால்ச்சாமியிடம் தகராறு செய்தார். அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடிய ராமையா, அரிவாளை எடுத் துக்கொண்டு பால்ச்சாமியை துரத்தினாராம்.

இதுகுறித்து அவர் முதுகு ளத்தூர் போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் பாலமுருகன், சப்- இன்ஸ் பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராமையாவை கைது செய்த னர்.

Monday, August 4, 2008

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு
பரமக்குடி,ஆக.4_

பரமக்குடி, ரேமா கல்வி மையத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் புதியத படிப்பான மழலையர் நல கல்வியியல் பட்டயப் பயிற்சி அறிமுக விழா நடைபெற்றது.

இப் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கவுரையை ரேமா கல்வி மைய முதல்வர் வில்சன் மாணவிகளுக்கு வழங்கி பயிற்சி பற்றி அறிமுகம் செய்து கூறியதாவது

ப்ரீ.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு மாண்டிச்சோரி முறை கே.ஜி முறை மற்றும் நர்சரி முறையில் விளையாட்டு மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் சிந்தனை ஆற்றலை தூண்டுவது ஆங்கிலத்தில் பேசும் திறமை வளர்ப்பது எப்படி என இப் பயிற்சியில் கற்றுத்தரப்படும்.

மேலும் பயிற்சியில் சேர்ந்த மாணவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கற்பிக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்கும் என்றும் கூறினார்.

இப் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ப்ரீ.கே.ஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

முதுவை முகவரிகள்

முதுவை மெடிக்கல்ஸ்
இங்கிலீஸ் மருந்து வியாபாரம்
8/258 மெயின் பஜார்
தேரிருவேலி முக்கு ரோடு
முதுகுளத்தூர் 623 704
தொலைபேசி : 04576 - 222177