முதுகுளத்தூரில் உரிமையியல் நீதிமன்றம் துவங்க அரசு உத்தரவு'
www.muduvaivision.com
முதுகுளத்தூர், ஜன. 4: முதுகுளத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் துவங்க அரசு உத்தரவிட்டிருப்பதாக வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் ஆர்.அரிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் நீதிமன்றம் குற்றவியல் மற்றும் உரிமையியல் இணைந்த விசாரணை நீதிமன்றமாக ஆரம்பம் முதல் இயங்கி வந்தது. ஆனால், முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் அதிகமாக உள்ளன. சுமார் 650-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை முடியாமல் உள்ளன.
எனவே, முதுகுளத்தூரில் தனியாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இயங்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வந்தோம். அரசு இதை ஏற்று மாவட்ட உரிமையியில் நீதிமன்றம் துவங்க உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசுக்கு முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளோம். ஏற்கெனவே உள்ள நீதிமன்றம் வளாகப் பகுதியில்தான் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் செயல்பட உள்ளது என்றார்.
பேட்டியின்போது சங்கத் தலைவர் கு.காசிலிங்கம், பொருளாளர் ஆர்.முனியசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
Monday, January 5, 2009
Subscribe to:
Posts (Atom)