Thursday, August 7, 2008

ராமநாதபுரத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.09.2008 காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்குறை தீர்க்கும் நாளில் ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை மனுவின் மூலம் விருப்பமுள்ள ஓய்வூதியதாரர் மாவட்ட ஆட்சித்தலைவர், ராமநாதபுரம் என்ற முகவரியில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு பெயரிட்டு ''இரட்டைப்பிரதிகளில் 5.9.08க்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பம்

அனுப்பிய ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியீடு

தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியீடு
முக்கியமான ரெயில் நிலையங்களில் கிடைக்கிறது


சென்னை, ஆக.6-

ரெயில்வே கால அட்டவணை தமிழில் வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றின் விலை 30 ரூபாய்.

தமிழில் ரெயில்வே கால அட்டவணை

ரெயில்வே கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 1-ந் தேதி வெளியிடப்படுகிறது. ஜுலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை கால அட்டவணை அமலில் இருக்கும். இந்த ஆண்டு, அகில இந்திய அளவில் ஓடும் ரெயில்களுக்கான கால அட்டவணையும் (விலை 35 ரூபாய்), தென்மண்டலங்களுக்கான கால அட்டவணையும் (விலை 30 ரூபாய்) வெளியிடப்பட்டு உள்ளது.

தெற்கு ரெயில்வே சார்பில் தென் மண்டலங்களுக்கான கால அட்டவணையை (ஆங்கில பதிப்பு) சென்னையில் கடந்த மாதம் 1-ந் தேதி ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு வெளியிட்டார். அப்போது, தமிழில் ரெயில்வே கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்தார்.

அதன்படி, தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரெயில்வே, செகந்திராபாத்தில் உள்ள தென்மத்திய ரெயில்வே, கர்நாடக மாநிலம்-ஊப்ளியை தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு ரெயில்வே, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொங்கன் ரெயில்வே ஆகிய 4 மண்டலங்களில் ஓடும் ரெயில்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தமிழில் தெளிவாக தொகுத்து தரப்பட்டு உள்ளன.

4 மண்டல ரெயில்களின் விவரம்

தமிழ் ரெயில்வே கால அட்டவணையில், அதனைப் பயன்படுத்தும் முறை, ரெயில்கள் போய்ச் சேரும் இடங்கள், ரெயில்களின் பட்டியல், தென்மண்டலத்தில் உள்ள 4 மண்டலங்களிலும் ஓடும் ரெயில்கள், மீட்டர் கேஜ், அகல பாதை மற்றும் கொங்கன் ரெயில்வேயில் ஓடும் ரெயில்கள், ராஜதானி, சதாப்தி, ஜன்சதாப்தி, சம்பர்க் கிராந்தி, கரீப் ரத் (ஏழைகள் ரதம்) போன்ற முக்கிய ரெயில்களின் கண்ணோட்டம் ஆகியவை பல்வேறு வண்ணத்தில் அழகாக அச்சிடப்பட்டு உள்ளன.

இதுபற்றி தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீனு இட்டேரா கூறியதாவது:-

5 ஆயிரம் பிரதிகள்

தென் மண்டலங்களுக்கான ரெயில்வே தமிழ் கால அட்டவணை முக்கியமான ரெயில் நிலையங்களில் கிடைக்கும். முதல்கட்டமாக 5 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தேவைக்கேற்ப மேலும் அச்சிட்டு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தென்மண்டல ரெயில் போக்குவரத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் பயணிகள் எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஏதாவது குறைகள் இருந்தால் ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்படி பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்
காந்திகிராம பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் வேண்டுகோள்


சின்னாளப்பட்டி, ஆக.7-

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று காந்திகிராம பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் வில்லியம் பாஸ்கரன் கூறினார்.

12 நாள் பயிற்சி

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் வளர்ச்சி மற்றும் கருத்தாக்க மையமான `இடாரா` அமைப்பும், மத்திய அரசின் நேரு இளையோர் மைய மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி, சென்னை ஆகியவை இணைந்து தேசிய சேவை தொண்டர்களுக்கான 12 நாள் பயிற்சியை நடத்தியது.

இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 30 தேசிய சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் நிறைவு நாள் விழா காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு `இடாரா` மையத்தின் இயக்குனர் பேராசிரியர் சிவராமன் தலைமை தாங்கி பேசினார்.

விழாவில் பயிற்சி பெற்ற சேவை தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அர்ப்பணிக்க வேண்டும்

சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கிராமத்தில் உள்ள பொது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு சிக்கல்களில் மாட்டி தவிக்கின்றனர். சாதி, மத மோதல்களும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இதையெல்லாம் மாற்றி சிறந்த குடிமக்களாக, மக்களை மாற்ற வேண்டும் என்றால், இன்றைய இளைஞர்கள் எளிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். மேலும் தேசிய சேவை தொண்டர்களாக மாற உள்ளவர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களது சேவையை அர்ப்பணிக்க வேண்டும்.

இவ்வாறு வில்லியம் பாஸ்கரன் கூறினார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட நேரு இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம், திண்டுக்கல் ஒருங்கிணைப்பாளர் விஜயா, இடாரா உதவி திட்ட இயக்குனர் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூற்றாண்டு விழாவையொட்டி தேவர் சிறப்பு தபால் தலை வெளியிட கோரிக்கை

நூற்றாண்டு விழாவையொட்டி தேவர் சிறப்பு தபால் தலை வெளியிட கோரிக்கை


மதுரை, ஆக.7-

பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என செக்கானூரணியில் நடந்த அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் மாநாடு, பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழா ஆகியவை செக்கானூரணியில் நடைபெற்றது. நிறுவனர் பி.என்.அம்மாவாசி தலைமை தாங்கினார். எஸ்.ஏ.சுரேந்திரன் வரவேற்று பேசினார்.

இதனையொட்டி நடந்த பேரணிக்கு பி.கனி தலைமை தாங்கினார். டீக்கடை செல்வம் முன்னிலை வகித்தார். கவிஞர் கோ தொடங்கி வைத்தார். மாநாட்டில் காங்கிரஸ் பிரமுகர் ரா.சொக்கலிங்கம், ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், தமிழ்தாங்கி சங்க பொதுச்செயலாளர் மா.திரவியபாண்டியன், வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், பிரமலை கள்ளர் பேரவை மாநில அமைப்பாளர் ஆர். அருளானந்தம், ராணுவவீரர் எஸ்.வேலுச்சாமி, கனகமகால் ஆர்.கார்த்திகேயன், தியாகி பாலகிருஷ் ணன் ஆகியோர் பேசினார்கள்.

பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும், 58 கிராம கால்வாய் திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய பொதுச்செயலாளராக பி.என்.அம்மாவாசி, தலைவராக ரா.ஜெயச்சந்திரன், பொருளாளராக பி.கே.செல்வம், மாநில தலைவராக ஏ.எஸ்.மச்சராசுத்தேவர், செயலாளராக பிச்சைஅம்பலம், பொருளாளராக எல்.செல்வம், மாநில இளைஞரணி செயலாளராக அ.மணிகண்டன், தொழிற்சங்க தலைவராக பரட்டையாண்டி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட தலைவராக எஸ்.அய்யாவுத்தேவர், செயலாளராக கே.நேரு, பொருளாளராக பி.செல்லப்பா, மாவட்ட தொழிற்சங்க தலைவராக ஜே.ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கடலாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு

கடலாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை


சாயல்குடி,ஆக.7-

கடலாடியை சேர்ந்த கல் லூரி மாணவி கொலை வழக்கில் தொடர்ந்து மர் மம் நீடித்து வருகிறது. இது குறித்து போலீசார் பல் வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இளம்பெண்

கடலாடி அருகே இளஞ்செம்பூர் போலீஸ் சரகம் சவேரியார் பட்டினத்தை சேர்ந்தவர் சேசு. இவரது மகள் அருள்ஜோதி(வயது 20). இவர் கடந்த 1-ந்தேதி மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிணத்திற்கு அருகில் கிடந்த சூட்கேசை போலீ சார் கைப்பற்றி சோதனை யிட்ட போது, ஒரு டைரி சிக் கியது. அதில் அவர் சென் னையில் உள்ள ஒரு கல்லூ ரியில் படித்து வந்தது தெரிய வந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? ஏன் சோழவந்தானுக்கு வந்தார்? ஏன் கொலை செய்யப்பட் டார்? என்பது குறித்து போலீ சார் குழப்பமடைந்தனர்.

தகவல்

உடனே போலீசார் கல்லூ ரியை தொடர்பு கொண்ட போது, அவர்கள் அருள் ஜோதி கல்லூரியில் சேரும் போது கொடுத்த தொலை பேசி எண்ணை தெரிவித்த னர். அது சவேரியார் பட் டினம் தூய சந்தியாகப்பர் ஆலய பாதிரியார் டேவிட் என்பவரது டெலிபோன் எண் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பாதிரியார் டேவிட்டை தொடர்பு கொண்டு அருள் ஜோதி இறந்த தகவல் பற்றி தெரிவித்தனர். இதுகுறித்து அவர் அருள்ஜோதியின் தாயார் வியாகுல அம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர்கள் சோழ வந்தானுக்கு சென்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிணத்தை பெற்று அடக்கம் செய்தனர்.

விசாரணை

இந்நிலையில் சோழ வந் தான் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாத்தப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சவேரியார் பட்டினம் வந்தனர். அங்கு பாதிரியார் டேவிட், தாயார் வியாகுல அம்மாள் மற்றும் உறவினர் களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண் அருள் ஜோதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.