முதுகுளத்தூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
http://mudukulathur.com/mudseithiview.asp?id=842
முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் “மஸ்ஜித் முஹைதீன்” என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான் தலைமை தாங்கினார். உதவி இமாம் மவ்லானா முஹைதீன் ஆலிம் கிராஅத் ஓதினார். தலைமை இமாம் “சிராஜுல் உம்மத்” மவ்லானா அல்ஹாஜ் எஸ்.அஹமது பஷீர் சேட் ஆலீம் வரவேற்புரை நிகழ்த்தினார். முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவை கவிஞர் மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் ஆலிம் சிற்பபுரையாற்றினார்.
தனது தந்தை மர்ஹும் ஹாஜி. முஹம்மது முஹைதீன் அவர்கள் பெயரால் கட்டப்பட்ட “முஹைதீன் பள்ளிவாசலை” பனைக்குளம் வள்ளல் அல்ஹாஜ் ஆ.ஜாஹிர் ஹுஸைன் திறந்து வைத்து வஃக்பு செய்தார். ஜமாஅத்தினர் அனைவரும் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
செய்தி: ஹெச்.ஏ. முகம்மது சுல்தான் அலாவுதீன்
Thursday, December 31, 2009
Subscribe to:
Posts (Atom)