Tuesday, March 24, 2009

முதுகுளத்தூரில் மனித நேயக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூரில் மனித நேயக் கட்சி ஆலோசனைக் கூட்டம்


முதுகுளத்தூர், மார்ச் 23: முதுகுளத்தூரில் ராமநாதபுரம் (மேற்கு) மாவட்ட மனித நேயக் கட்சியின் மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் கலிமுல்லாக்கான் தலைமையும் மாவட்ட நிர்வாகிகள் சல்மான், சகுபர் சாதிக், ஜபருல்லாக்கான் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

ஒன்றியச் செயலர் வாவா ராவுத்தர் வரவேற்றார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் சாதிக், முஹிதுல்லா, கலிமுல்லா, சம்சுதீன் சேட், காசீம் முகம்மது உள்ளிட்டோர் பேசினர். மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேருமபோது ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் மனித நேயக் கட்சி வேட்பாளர் போட்டியிடுவதற்கு கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரச் செயலர் அமீருல் ஹக் நன்றி கூறினார்.