Thursday, August 21, 2008

கடலாடி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்

கடலாடி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்
போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு முடிவு


சாயல்குடி,ஆக.21-

கடலாடி தாலுகா சிக்கல் பகுதியில் இலவச பாஸ் இருந்து பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி அறி வித்துள்ளது.

பஸ் பாஸ்

கடலாடி தாலுகா செயலா ளர் மயில்வாகனன், மாவட்ட குழு உறுப்பினர் பச்சமால் ஆகியோர் கலெக்டர் கிர் லோஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:- கடலாடி தாலுகா சிக்கல் பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் சிக்கல், வாலிநோக்கம், மேலக் கிடாரம், மாரிïர் ஆகிய ஊர் களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசு சார் பில் இலவச பஸ் பாஸ் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பள்ளி கள் உள்ள பகுதியில் அரசு டவுன் பஸ்கள் போதிய அளவு இல்லை. மேலும் பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இல்லாததால் மாணவர்கள் இலவச பாஸ் வைத்திருந்தும் அவை பயனில்லாமல் உள் ளது. இதனால் அவர்கள் தனியார் பஸ்சிலும், பிற ஊர்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்துகளிலும் டிக் கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

போராட்டம்

ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் நடந்து தான் பள்ளி சென்று வருகின் றனர். எனவே சிக்கல் பகுதி ஊர்களை சேர்ந்த மாண வர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் மாண வர்களை திரட்டி மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.