Tuesday, February 3, 2009

4 ஆண்டுகளாக காணாமல் போனவர் ஒரிசா சிறையில் இருப்பதாக தகவல் மீட்டு தருமாறு கலெக்டரிடம் தாய் மனு

4 ஆண்டுகளாக காணாமல் போனவர் ஒரிசா சிறையில் இருப்பதாக தகவல் மீட்டு தருமாறு கலெக்டரிடம் தாய் மனு


ராமநாதபுரம்,பிப்.3-

பரமக்குடி அருகே 4 ஆண்டு களாக காணாமல் போனவர் ஒரிசா மாநில சிறையில் இருப்ப தாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து தனது மகனை மீட்டுத்தருமாறு கலெக்டரிடம் தாய் மனு கொடுத்தார்.

மனு

பரமக்குடி அருகே உள்ள மேலச் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறு முகம். இவரது மனைவி மல்லிகா. இவர்களின் மகன் பாஸ்கரன். இவர் கடந்த 13.9.2005 முதல் காணாமல் போய்விட்டார். இதுதொடர்பாக மல் லிகா பரமக்குடி போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். ஆனால் கடந்த 4 வருடங்களாகியும் பாஸ்கரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி பாஸ் கரனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பாஸ்கரன் ஒரிசா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள் ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள தனது மகனை மீட்டு தரக்கோரி மல்லிகா நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத் தார்.