Tuesday, July 8, 2008

துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கும் நோயாளிகள் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் அவலம்

துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கும் நோயாளிகள் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் அவலம்


முதுகுளத்தூர், ஜுலை.8-

போதிய துப்புரவு பணி யாளர்கள் இல்லாததால் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின் றனர்.

அரசு ஆஸ்பத்திரி

முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தின மும் நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த காலங்களில் இங்கு பணிபுரிந்த டாக்டர்கள் பணிகளை சிறப் பாக மேற்கொண்டதால் ஏழை மக்கள் மத்தியில் இந்த மருத்துவமனை நன்மதிப்பை பெற்றது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகி விட் டது. 6 டாக்டர்கள் பணி புரிய வேண்டிய இந்த ஆஸ் பத்திரியில் தற்போது 3 டாக் டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலை யத்தை போல் காலை 8.30 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு 10 மணிக்கு தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். இத னால் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வரு கின்றனர்.

துர்நாற்றம்

மேலும் இங்கு துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை யாக உள்ளதால் நோயாளி கள் தங்கியுள்ள வார்டுகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு தங்கியுள்ள நோயாளிகள் இரவு நேரங்க ளில் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலையில் திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு வரும் அவல நிலை தொடர் கிறது.

டாக்டர்கள் தங்களது பணி நேரம் முழுவதும் ஆஸ்பத்திரியிலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்ï னிஸ்டு தாலுகா செயலாளர் சண்முகவேல் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் அதே நிலை நீடிப் பதாக கம்ïனிஸ்டு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

அவதி

நோயாளிகளின் நம்பிக் கையை பெற்ற முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தற் போது ஆரம்ப சுகாதார நிலைய அளவிற்கு தள்ளப்பட் டுள்ளதாக நோயாளிகள் தெரி விக்கின்றனர். மேலும் அங்கு தங்கியுள்ள ஒரு சில நோயா ளிகளும் போதிய மருத்துவ வசதியின்றி அவதிப்பட்டு வரு கின்றனர்.