Tuesday, May 12, 2009

பிரசாரத்தை பதிவு செய்த போது வீடியோ கேசட்டை பறிமுதல் செய்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு

பிரசாரத்தை பதிவு செய்த போது வீடியோ கேசட்டை பறிமுதல் செய்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு

ராமநாதபுரம்,மே.12-

பிரசாரத்தை பதிவு செய்த போது வீடியோ கேசட்டை பறிமுதல் செய்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது.

அ.தி.மு.க. வேட்பாளர்

பாராளுமன்ற தேர்தலை யொட்டி வேட்பாளர்களின் பிரசார பணிகளை கண்கா ணிக்க ஒவ்வொரு வேட்பாள ருடன் ஒரு துணை தாசில்தார், 2 போலீசார் மற்றும் ஒரு வீடியோ கிராபர் உடன் செல்ல தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராமநாத புரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சத் தியமூர்த்தி நேற்று முன் தினம் ராமநாதபுரம் சக்கரக் கோட்டை பள்ளிவாசல் பகு தியில் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டு இருந்தார்.
அப்போது தேர்தல் பிரசார பணிகளை ஒரு வீடியோ கிராபர் படம் எடுத்ததை கண்டு வேட்பாளர் சத்திய மூர்த்தி அவரை விசாரித்தார். அப்போது வீடியோ கிராபர் செல்வக்குமார், தான் ஒரு தனியார் வீடியோ கிராபர் என்று கூறியதை தொடர்ந்து வேட்பாளர் சத்திய மூர்த்தி தனது அனுமதி இல்லாமல் ஏன் வீடியோ எடுக்கிறாய்? என்று கேட்டு கேமிராவை பறித்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த தேர்தல் அலுவலரான திருவாடானை துணை தாசில்தார் கதிரேசன், வேட் பாளரிடம் செல்வக் குமாரை தேர்தல் பணியில் ஈடுபட் டுள்ள வீடியோ கிராபர் என்று கூறினார். இதையடுத்து வேட்பாளர் சத்திய மூர்த்தி கேசட்டை எடுத்துக்கொண்டு வீடியோ கேமிராவை மட்டும் கொடுத்தாராம்.

இதுகுறித்து துணை தாசில் தார் கதிசேரன் அளித்த புகா ரின் பேரில் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக அ.தி.மு.க. வேட்பாளர் சத்திய மூர்த்தி மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.