Thursday, December 31, 2009

முதுகுளத்தூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

முதுகுளத்தூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

http://mudukulathur.com/mudseithiview.asp?id=842

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் “மஸ்ஜித் முஹைதீன்” என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜ‌ஹான் தலைமை தாங்கினார். உதவி இமாம் மவ்லானா முஹைதீன் ஆலிம் கிராஅத் ஓதினார். தலைமை இமாம் “சிராஜுல் உம்மத்” மவ்லானா அல்ஹாஜ் எஸ்.அஹமது பஷீர் சேட் ஆலீம் வரவேற்புரை நிகழ்த்தினார். முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவை கவிஞர் மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் ஆலிம் சிற்பபுரையாற்றினார்.

தனது தந்தை மர்ஹும் ஹாஜி. முஹம்மது முஹைதீன் அவர்கள் பெயரால் கட்டப்பட்ட “முஹைதீன் பள்ளிவாசலை” பனைக்குளம் வள்ளல் அல்ஹாஜ் ஆ.ஜாஹிர் ஹுஸைன் திறந்து வைத்து வஃக்பு செய்தார். ஜமாஅத்தினர் அனைவரும் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

செய்தி: ஹெச்.ஏ. முகம்மது சுல்தான் அலாவுதீன்

Wednesday, October 21, 2009

உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்

உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=197


ப‌த்திரிக்கையின் திருப்பிய‌ ப‌க்க‌ங்க‌ளும்,தெலைக்காட்சி சேன‌ல்க‌ளும் ந‌ம்மையும் அறியாம‌ல் ஒரு செய்தியை ந‌ம‌க்கு கொடுத்துக்கொண்டிருக்கின்ற‌ன. ந‌வ‌யுக‌ உல‌கில் ம‌ர‌ண‌ம் என்ப‌து நாம் குடிக்கும் காலை "டீ" க்கு ஒப்பாக்கிக்கொண்டிருக்கிற‌து என்று.

ஒரு இட‌த்தில் விப‌த்து நிக‌ழ்ந்து ஒரு ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டால் கூட‌ அது ப‌ற்றி பெரிதாக பேசிய‌ கால‌ம் போய் சில‌ நொடிப்பொழுதில் ப‌ல்லாயிர‌க்க‌ணக்கானோர் கை, கால்க‌ளை இழுந்து, உயிருக்கு போராடி உயிரைவிடுகிற‌ காட்சிக‌ள் சில‌ வினாடிக‌ளில் ந‌ம் தொலைக்காட்சி திரைக‌ளில் தின‌ம்தின‌ம் க‌ரைந்து போகின்ற‌து ந‌ம் சிந்த‌னை கூட அவ‌ற்றை தொடுவ‌தில்லை..
ச‌மீப‌கால‌மாக‌ தொட‌ர்ந்து வ‌ருகிற‌ ம‌ர‌ண‌ச்செய்திகள் யாவும்
ஆலிம்க‌ள்,ச‌ன்மார்க்கஊழிய‌ர்க‌ள், ச‌மூக ஆர்வ‌ல‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌தாகவே இருப்பது ந‌ம்மை மிக‌ப்பெரிய க‌வ‌லையில் ஆழ்த்துகிற‌து.

ம‌ர‌ண‌ம் என்பது விதிக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்றாக‌ இருந்தாலும் அது ம‌னித‌ வாழ்வில் எப்ப‌டி ஆட்கொள்கிறது என்ப‌து ப‌ற்றி குர்ஆன் பல‌ வித‌ங்க‌ளில் எடுத்துரை பாங்கு அலாதியான‌து ப‌ல்வேறு ச‌மூக‌த்த‌ருடைய‌ முடிவுக‌ள் எப்ப‌டி இருந்த‌து என்பது பற்றி அறிவிக்கும் குர்ஆன், ந‌மக்கெல்லாம் மிகவும் ப‌ரிச்சிய‌மான‌, குர் ஆனில் அதிக‌மாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ ந‌பி மூஸா அலைஹிஸ்ஸ‌லாம் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றில் அவ‌ர்க‌ளின் எதிரியான ஃபிர்அவுனின் ச‌மூக‌த்திற்க்கு முடிவுரை எழுதிய‌ நிக‌ழ்வை இறைவ‌ன் இப்ப‌டி வ‌ர்ணிக்கிறான்.
அவ‌ர்க‌ளின் ம‌ர‌ணித்திற்க்காக‌ வான‌மும் அழவில்லை பூமியும் அழ‌வில்லை (துஹான்: 29) என்று கூறி முடிக்கிறான்.

ந‌ம் புழ‌க்க‌பாஷையில் " உல‌க‌மே அழுதுச்சி அவர் இற‌ந்த‌ப்ப‌" கேள்விப்ப‌ட்டிருப்போம். ஆனால் அது என்ன‌ வான‌ம் அழுவ‌து பூமி அழுவ‌து??? அப்ப‌டி அழுவுமோ!!! அது எப்ப‌டி அழுவும்? ஏன் அழுவும்? ஏத‌ற்க்காக‌ அழுவும்...

(இன்ஷாஅல்லாஹ் ம‌ல‌ரும்)

உங்க‌ள் ச‌முதாய ஊழிய‌ன்
" ஹ‌ஸ‌னீ “
avoorismail@gmail.com

Tuesday, October 6, 2009

கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை

கிடப்பில் ஏர்வாடி சுற்றுலா அறிவிப்புறக்கணிப்பால் வேதனை

ஏர்வாடி தர்காவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் அறிவிப்பு கிடப்பில் உள்ளதால் அப்பகுதியினர் வேதனை அடைந்துள்ளனர். கீழக்கரை அருகில் உள்ள ஏர்வாடி தர்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தலத்தை சிறப்பிக்கும் பொருட்டு இதை சுற்றுலா தலமாக மாற்ற அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால்இப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை அமைப்புகள் மற்றும் ஊராட்சி மூலமே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் சந்தனக்கூடு திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கானோர் கூடும் இவ்விழா ஒரு மாதம் வரை நடக்கும். அரசின் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இருப்பினும் யாத்ரீகர்களின் நலன் கருதி இத்திருவிழாவுக்காக தர்கா நிர்வாகம் கனிசமான தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்கிறது. சுகாதாரபணிக்கு ஊராட்சி நிர்வாகம் 50 சதவீத செலவை ஏற்கிறது. இதுவே சுற்றுலா தலமாக இருக்கும் பட்சத்தில் இங்கு வருபவர்களுக்கு இன்னும் கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன், மாவட்டத்தின் வருவாய் அதிகரிக்கும். இது குறித்து ஏர்வாடி தர்கா நிர்வாகம் சார்பில் சுற்றுலா துறையினருக்கு பலமுறைவலியுறுத்தியும் பிரயோஜனம் இல்லை. தொடரும் புறக்கணிப்பால அப்பகுதியினர் மட்டுமின்றி வரக்கூடிய யாத்ரீகர்களும் வேதனையடைந்துள்ளனர். தொடர்ந்து கிடப்பில் இருக்கும் அரசின் சுற்றுலா தல அறிவிப்பை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

ஷார்ஜாவில் அப‌ர‌ஞ்சி ஆசிரியை

ஷார்ஜாவில் அப‌ர‌ஞ்சி ஆசிரியை

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளியில் ப‌ணிபுரிந்து ஓய்வுபெற்ற‌ அப‌ர‌ஞ்சி ஆசிரியை அவ‌ர்க‌ள் ஷார்ஜா வ‌ருகை புரிந்துள்ளார்க‌ள்.

இவ‌ர்க‌ள‌து புத‌ல்வ‌ர்க‌ள் இள‌ங்கோ ம‌ற்றும் குமார் ஆகியோர் அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ருகின்றன‌ர்.

அமீர‌க‌ தொட‌ர்புக்கு : 06 5610729

-~----------~----~----~----~------~----~------~--~---
assalaamu alaikum,

dear brother,
happy see teacher mrs.abaranji "photo.it is a very long time to see her.she is my first std teacher in muslim school(may be 1957to 1958.).mr.chellam vathiyaar also my science teacher.please convey my best regards to her.she may remember me as RAJA
vassalam

msmuthumohamed
9444174904

Tuesday, August 25, 2009

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=152
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0825-control-the-sins-of-the-tongue.html

மாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலான் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.

தம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும்? அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.

மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது!. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.

நாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. "யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.
சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக "நாவு" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.

மொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். "சொல்லாதே செய்" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர். "தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள். பிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே? என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து "ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.
பிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. புனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்!

Tuesday, August 18, 2009

பாசக்கடல் “ஷாஹா”


பாசக்கடல் “ஷாஹா”

http://www.mudukulathur.com/Nerkanalview.asp?id=181


60 ஆண்டுகளுக்கு முன் எழுத ஆரம்பித்து 90 வயதைக் கடந்துள்ள முஸ்லீம் எழுத்தாளர் யார்?

அறிந்து கொள்ள நர்கிஸ் வாசகர்கள் விரும்பலாம்.

அவரே பதில் சொல்கிறார்.

ஷாஹா என்பது என் புனைப் பெயர். முழுப் பெயர் ஷாஹுல் ஹமீது. புனைப்பெயரில் மோகம் கொண்டவனில்லை நான். ஒரு நிர்பந்தத்தால் இந்தப் பெயரைச் சூட்டினேன். மணிவிளக்கு ஆசிரியர் (ஆ.கா.அ. அப்துஸ் ஸமது) ஷகீலா என்ற மற்றொரு பெயரைச் சூட்டினார்.


உங்கள் பூர்வீகத்தைக் கூறலாமா?

இராமநாதபுரம் மாவட்ட சித்தார்கோட்டையில் 1919 –ல் பிறந்தேன். சீறாப்புராணம் படைத்த உமறுப்புலவரின் வழித்தோன்றல்கள் நாங்கள். ஹாஜி. மு.சீ. முஹம்மது களஞ்சியம் மரைக்காயர் என் தந்தையார். தாயார் இப்ராஹீம் அம்மாள். மூன்று தலைமுறைக்கு முன் ஏற்பட்ட பர்மா தொடர்பு எங்களை மூலைக்கு மூலை பிரித்து விட்டது. தந்தையார் தமிழ், அரபி, உர்தூ, பார்ஸி மொழி அறிந்த இலக்கியவாதி. அவரால் நான் இலக்கிய உணர்வு பெற்றது முதல் கட்டம்.


உங்கள் கல்வி, தொழில் பற்றி…?

உள்ளூரிலேயே அரபி மொழி கற்றேன். ஆசிரியர் ‘பெரிய ஆலிம்’ என அந்நாளில் அழைக்கப் பெற்ற மெளலவி அஹ்மது இபுராஹீம் ஆலிம். உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து ஊட்டி வளர்த்தவர் திரு.என். ராமகிருஷ்ண ஐயர். இரு ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிப்பாக இரண்டு கதைகளை எழுதினேன். தமிழ் கற்பித்தவர்கள் வித்துவான் சிவஞானம் பிள்ளை, கார்மேகக் கோனார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1941-ல் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்து விட்டு பர்மாவுக்குச் சென்றேன். அங்குள்ள சோலியா உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வேலை.


உங்கள் எழுத்துத் துறையைப் பற்றி …?

கதை எழுத வேண்டும் என்ற ஆசை கல்லூரி மாணவனாக இருந்த . போதே மனதில் அரும்பு கட்டி விட்டது. அமுதசுரபி பத்திரிகையில் 1948 –ல் எழுத ஆரம்பித்தேன். அடுத்தடுத்து மூன்று சிறுகதைகளை அதன் ஆசிரியர் திருவேம்பு பிரசுரித்தார். இந்த காலத்தில் எனக்கும் எழுத்தாளர் மாயாவிக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய கதைகளை விரும்பிப் படித்தேன். உடனுக்குடன் விமர்சனம் எழுதுவேன். அவர் உற்ற நண்பராக, உடன்பிறவா சகோதரராக இருந்தார். சுதேசமித்திரனிலும் அப்போது எழுதினேன். 15 ரூபாய் அன்பளிப்புக் கிடைத்தது. சென்னை வானொளியில் பணியாற்றிய மாயாவியின் மூலம் அகிலன், கலைமகள் கி.வா.ஜ. முதலானோரின் நட்பைப் பெற்றேன்.


அடுத்த கட்டங்கள் எப்படி?

ஐந்து வருடம் தொய்வு. பர்மாவில் ஏற்பட்ட குடும்பப் பொருளாதார சுழற்சியினால் எழுதுவதை நிறுத்தி விட்டேன். ரங்கூனுக்கு வந்த மணி விளக்கு ஆசிரியர் தூண்டியதால் மீண்டும் எழுதத் தொடங்கினேன். அந்த இதழில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை ஆ.கா.அ. கேட்டுக் கொண்டபடி மொழி பெயர்த்தேன். ‘இக்வானுஸ் ஸபா’ நூலை ‘மனிதனா? மிருகமா? என்ற தலைப்பில் தந்தேன். முக்கியத் திருப்பத்தைத் தந்தது. ‘இன்ப வேதனை’ தொடர்கதை… அடுத்து பாசக்கடல், மலர்மாலை,அன்னை பூமி தொடர்கதைகள். என் எழுத்தில் அக்கறை கொண்ட நட்பு வட்டம் அருகில் இருந்தது

நண்பர் எழுத்தாளர் நூன் முக்கியமானவர். பத்திரிகையாளரான அவர், சோலியா முஸ்லிம் பள்ளியின் மேலாளராகவும் இருந்தார்.


உங்களுக்கும் பத்திரிகை அனுபவம் உண்டா?

பள்ளி ஆசிரியராவதற்கு முன் சாந்தி தினசரியில் பணிபுரிந்தேன். இரங்கூனில் சிறப்பாக வெளிவந்த பத்திரிகை அது. இரண்டு வருடம் அதில் இருந்து விட்டு சோலியா பள்ளிக்கு மாறினேன். பர்மாவில் வாழ்ந்தாலும் இந்திய ஹிந்தி பத்திரிகைகளுடன் தொடர்பு உண்டு. சரிகா, தர்மயுக் இதழ்கள் என் சிறுகதைகளை ஹிந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டன. பர்மிய மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளன.

உங்களுக்குப் பிடித்தவர்கள்?

அது ஒரு பெரிய பட்டியல் … இதோ எதிரில் இருக்கும் உங்களையும் இந்த டாக்டரையும் சொல்லாமல் இருக்க முடியுமா? நீங்கள் என் உடன்பிறவா தம்பி… டாக்டர் ஹிமானா சையத் என் மைத்துனர். அரை நூற்றாண்டாக நாம் இருவரும் இறைவனின் நாட்டப்படி இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறோம். இத்தனையாண்டுகளாக நாம் எழுதிய கடிதங்கள் பாசநேசத் தொகுப்பல்லா?

தமையனார் ஷாஹா நெகிழ்ச்சியுடன் ஆரத் தழுவி நல்லாசி கூறி இரங்கூனுக்குப் புறப்படும் வரை, இரண்டு வாரத்திற்கு மேல், நானும் டாக்டர் ஹிமானா சையதும் (’நர்கிஸ்’ கெளரவ ஆசிரியர்) அன்றாடம் அவர்களுடன் ஆன்மீக, இலக்கிய உரையாடல்களில் ஆழ்ந்திருக் கிறோம். பாசக் கடலான ஷாஹாவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

இது ஓர் அத்தியாயம் !

சந்திப்பு : ஜே.எம். சாலி

நன்றி : நர்கிஸ் மாத இதழ் – ஆகஸ்ட் 2009

Saturday, August 15, 2009

கடைசி தேதி நீட்டிப்பு - சுவனப்பாதை மாதஇதழின் கட்டுரை போட்டி

கடைசி தேதி நீட்டிப்பு - சுவனப்பாதை மாதஇதழின் கட்டுரை போட்டி

சுவனப்பாதை மாதஇதழின் மூலம் நடத்தப்படுகின்ற உலகளாவிய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்ற அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி

கடைசி தேதி நீட்டிப்பு:
கட்டுரைகளை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ரமளான் பிறை 25, ஹிஜ்ரி1430 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பரிசு விபரங்கள்:

சவூதி ரியால் 700 மதிப்புள்ள முதல் பரிசு
சவூதி ரியால் 500 மதிப்புள்ள இரண்டாம் பரிசு
சவூதி ரியால் 300 மதிப்புள்ள மூன்றாம் பரிசு
மற்றும்
பத்திற்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.

விதிமுறைகள் மற்றும் கட்டுரை தலைப்புகள் பற்றி கூடுதல் விவரங்களை அறிய பார்வையிடுக:
www.suvanam.com
www.islamkalvi.com
www.satyamargam.com

அல்லது தொடர்பு கொள்க
00966 506096740
00966 567421270

ஆசிரியர்
சுவனப்பாதை மாதஇதழ்
ஜித்தா - சவூதி அரேபியா

குறிப்பு: இச்செய்தி கிடைக்கப்பெறாத மற்ற சகோதரர்-சகோதரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010

ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010


www.mudukulathur.com


சென்னை, சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு மையம் செய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010 க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் வழங்கப்பெறும் இப்பரிசு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நூலுக்கு ரூ.30,000 வழங்கப்பெறும்.

இவ்வாண்டு அரபுத்தமிழ் – தோற்றம் – வளர்ச்சி – தேக்கம் ( அரபுத்தமிழ் இலக்கிய வரலாறு ) எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நூல்கள் ஏ4 அளவில், கணினி அச்சில் இடம் விட்டு, 200 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ டெம்மி புத்தக அளவு, 200 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

தாளில் ஒரு புறம் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும். தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்து படிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2010 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு வந்து சேர வேண்டும். நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000 வழங்கப்படும்.
தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையைப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.

தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும். மேலதிக விபரங்களுக்கு செயலாளர், சீதக்காதி அறக்கட்டளை,இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம், எண் 6, மாடல் ஸ்கூல் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006. தொலைபேசி : 2829 7335

Thursday, August 13, 2009

ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய கேள்விகளுக்கு உடனடி விடை

ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய கேள்விகளுக்கு உடனடி விடை




உலகமெங்கும் பன்றி காய்ச்சல் பீதி பற்றிக்கொண்ட நிலையில் அதை பற்றிய பல குழப்பங்கள் நமக்கு இருக்கும் .
இதை பற்றி நமக்கு உள்ள குழப்பங்களை தெரிவுபடுத்த ஆன்லைனில் in.com நிறுவனத்தினர் ஒரு உதவி தளத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த தளத்தில் இந்த பன்றி காய்ச்சல் பற்றிய தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்யப்படுகின்றன.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே தீர்த்துக்கொள்ளலாம்.

கீழ்க்கண்ட தளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய உடனடி தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் .

http://www.in.com/swineflu/

--
Thanks with regards

Ma Sahib - ما صهيب

இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் !

இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் !
ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி .( 050 795 99 60 )

நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது ! உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறு பட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வால் ஒருங்கிணைக்கப்பட்ட வர்கள் நாம் ! “வேற்றுமையில் ஒற்றுமையே “ இந்தியாவின் தனிச் சிறப்பாகும்.

நாட்டின் சுதந்திரத்தைப்பற்றி உலகம் முழுவதும் வாழும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சுதந்திர போராட்ட தியாகிகளும் உணர்வுப்பூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உரையாற்ற தயாராக இருப்பதால் நான் இங்கே இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரத்தைப்பற்றி பேசுகிறேன்.

இயற்கை என்பது இறைவன் நமக்களித்த அருட்கொடை ! ஆனால் நாம் வாழும் முறை களெல்லாம் செயற்கையான நடைமுறையாகிவிட்டது. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரைக்கும் தனக்குத் தேவையானதை தானே உற்பத்தி செய்து அனுபவித்துக் கொண்டிருந்த நாம் தற்போது எல்லாவற்றையும் (மிஷின்) இயந்திரங்களிடம் ஒப்படைத்து விட்டோம்.

தனது ஆடைகளுக்குரிய நூல்களை தமது கைகளால் ராட்டை சுற்றி தயார் செய்து கொண்ட தேசத்தந்தை காந்தியடிகள் எங்கே? நினைத்த நேரத்தில் நினைத்த கலர், டிசைனில் இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வரும் குப்பனும், சுப்பனும் எங்கே….? மனிதன் தம் கரத்தால் களிமண்ணை குலைத்து பாத்திரங்கள் செய்து அதில் உணவுண்ட காலங்களிலிருந்து விடுதலை பெற்று, முற்றிலும் இயந்திரத்தால் செய்யப்பட்ட (used & Throw) ஒருமுறை பயன்படுத்தி விட்டு எறிந்து விடும் பிளாஸ்டிக் என்னும் நச்சுப்பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.

அதன் விளைவு? குப்பைகளுக் குள்ளும் ஜாதிப்பிரிவினைகள், ஆமாம், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனும் இரண்டு பிரிவுகள் ! இன்றைய உள்ளாட்சி அமைப்புகளில் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்றாக கடற்கரை, குளங்கள், ஏரிகள், பூங்காக்கள் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த விதிக்கப்படும் தடையாகி விட்டது ! “முன் செய்யின் பின் விளையும்” என்பது இதுதானோ?

உடல் நோகாமல் சொகுசாகவே அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்ற நாம் கூடவே சுகாதார சீர்கேடுகளையும் தூக்கி சுமக்கிறோம். அதனால் தான் குடிக்கும் நீரை கூட பிளாஸ்டிக் பையில் அடைக்கப்படும் வரை மெளனித்து விட்டு இப்போது அவைகள் கழிவுகளாகி நிலத்தடி நீருக்கு ஜென்ம விரோதியாய் மாறி குடிநீர்ப் பஞ்சம் ஏற்படக் காரணமாகி விட்டதை மிகவும் தாமதமாக உணர்ந்து கொண்டு ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருள்களுக்கெதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.

ஆடி மாசத்தில் அடிக்கும் காற்றின் வீரியத்தை வர்ணிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழக்குச் சொல்தான் “ ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்” என்பதாகும் ! ஏதோ ஒரு நிகழ்வில் இன்றைய இளைஞன் ஒருவனிடம் இந்தப் பழமொழியை நான் சொன்னதும் தான் தாமதம் உடனே அவ்விளைஞன் இடைமறித்து பழமொழியை தப்பா சொல்றீங்க ஆடிக்காற்றில் மம்மியும் பறக்கும் என்றுதான் சொல்லனும் என்றான். அவனது அதிகப் பிரசங்கித்தனத்தை நினைத்து நான் கோபப் படவில்லை ! காரணம் அந்த இளைஞன் அம்மிக்கல்லையே பார்த்த தில்லை என்பது தான் உண்மை ! இப்போது நகரப் பகுதிகளில் மட்டுமல்ல கிராமங்களிலும் கூட அம்மிக்கல்லுக்கு பதிலாக மிக்ஸி என்னும் இயந்திரம் பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. பெண்களின் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகவே அன்றைய காலத்து சமையற்கலை இருந்தது. அம்மிக்கல்லில் மசாலா அரைத்து, ஆட்டு உரலில் மாவாட்டி, மண் பானையில் சோறு வடித்து, மண் பாத்திரத்தில் உண்டு வந்த காலம் வரைக்கும் பன்றிக்காய்ச்சலும், எலிக்காய்ச்சலும், பறவைக்காய்ச்சலும் மனிதனுக்கு தெரிந்திருக்க வில்லை !
ஆனால் இன்றோ, ஒவ்வொரு மிருகத்தின் பெயராலும், பறவைகளின் பெயராலும் நோய் தாக்கப்பட்டு மனிதன் மடிந்து போகிறான். எல்லாமே இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் தான் ! 16 குழந்தைகளையும் கூட தம் வீட்டிலேயே சுக(மாய்)ப் பிரசவம் செய்து கொண்ட தாய்மார்களில் சிலர் இன்றும் கூட ஆரோக்கியமாய் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றோ, ஒரு குழந்தையானாலும் சுகப்பிரசவமென்பது அரிதாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம்? பெண்களிடம் உடற்பயிற்சி இல்லாமல் போனதுதான் ! ஆம், வீட்டில் நடக்கும் சமையலை கூட இயந்திரங்களின் உதவியுடனேயே செய்து விடுகிறார் கள். பற்ற வைக்கும் அடுப்பிலிருந்து சாதம் வடிக்கும் பானை (குக்கர்) வரைக்கும் எல்லாமே இயந்திரங்களாகி விட்டன. அம்மிக்கல் – மிக்ஸி யாகவும், ஆட்டுக்கல் – கிரைண்டராகவும், மாறிய பின்பு பெண்களுக்கு எங்கிருந்து வருமாம் உடற்பயிற்சி? துணி துவைப்பதும் கூட ஒரு உடற்பயிற்சி தான் ! ஆனால் இப்போது அதற்கும் ஒரு இயந்திரம் (Washing Machine) வந்து விட்டது. பிறந்த குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டி விடும் போது தாயின் கைக்கு ஒரு உடற்பயிற்சி யாகவும் அவளது மனசுக்கோர் ஆனந்தமாகவுமிருந்தது அந்தக் காலம் ! ஆனால் இன்று குழந்தையை தள்ளு(Whed chair) வண்டியில் வைத்து விட்டு டி.வி. சீரியல் பார்ப்பது இந்தக் காலம் !

மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கையே இயந்திரத் தனமாகி விட்டது. இயந்திரங்கள் வழங்கிய ஒவ்வொரு சுதந்திரமும் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற் கெதிரானதே ! ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்பட்ட சுதந்திரத்தை லஞ்சம், ஊழல் என்னும் அரக்கன்கள் மாறி மாறி கற்பழித்து வருவதைப் போல இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரமும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தை சூறையாடி வருகிறது என்பதே நிதர்சனம் !

Wednesday, August 12, 2009

நீங்களும் போலீஸ் ஆகலாம்....!

நீங்களும் போலீஸ் ஆகலாம்....!



போலீஸ்'என்ற சொல் கிரேக்கச் சொல்லா கிய பொலிட்டியா (Politeia) மற்றும் இத்தாலியச் சொல்லாகிய பொலிட்டா (Politia) என்பதிலிருந்து தோன்றியது.

"பொலிட்டா என்றால் ""முறைப்படுத்தும் அமைப்பு'' பொலிஸ் (Polis) என்னும் சொல்லுக்கு நகரம் (City) என்றும் பொருள் உண்டு).

அதாவது நகரத்தில் உள்ள மக்களை காப்பவர்கள் என்றும் அர்த்தம்.

1844-இல் முதன்முதலில் போலீஸ் நிலையம் நியூயார்க்கில் நிறுவப்பட்டது.இந்தியாவில் நவீன காவல்துறை அமைப் புக்கு வித்திட்டவர் சர் சார்லஸ் நேப்பியர்.

1861-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காவல் சட்டமே இந்தியா முழுமைக்கும் ஒரேமாதிரியான சட்ட ஒழுங்கை முறைப் படுத்தும் வலிமையான காவல்துறையை ஏற்படுத்த உதவியது.

மாநில காவல்துறையினரின் முக்கிய பொறுப்புகள்:

1. ரோந்துப்பணி
2. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கண்டறிதல்
3. சாலைப் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல்
4. போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பது
5. மதுபானங்களின் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது
6. இளங்குற்றவாளிகளை கையாளுவது என பல்வேறு பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.

மத்திய அரசு தொடர்பான நிறுவனங்களில் உள்ள பணியாளர்களின் தவறான நடத்தை களைக் கண்டறியவும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்கி முக்கிய மிகப் பெரிய விசாரணைகளை நடத்தவும் மத்திய புலனாய்வுத்துறை (CBI) உள்ளது.

1962-ல் நடைபெற்ற சீனப்படையெடுப்பை அடுத்து இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை (ITBP) உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1965-ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படை (BSF) ஏற்படுத்தப்பட்டது.

மத்திய ரிசர்வ் காவல்படை (RPF) இந்தியா வின் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்க 1939-இல் உருவாக்கப்பட்டது.

அஸ்ஸாம் துப்பாக்கிப் படை (Assam Rifles) இந்தோ-திபெத்திய எல்லைகள், இந்தோ பர்மா எல்லைபுறங்கள் மற்றும் வடகிழக்கு மாகாணங்கள் ஆகியவற்றை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. இது 164 ஆண்டுகள் பழமையான (கி.பி. 1835) காவல்படை ஆகும்.

தேசிய பாதுகாப்புக் காவல்படை (National Security Guards) என்பது தீவிரவாதிகள், கடத் தல் சம்பவங்கள், சதிகாரர்களை சமாளிப் பது, விமானக் கடத்தல், பணயக் கைதிகளை மீட்பது போன்றவைகளுக்கான உருவாக்கப் பட்ட அமைப்பாகும்.

மத்தியத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) மத் திய அரசுக்குச் சொந்தமான பெரிய தொழிற் சாலைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் பொருட்டு 1969-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

உள்நாட்டு காவலர்படை (Home Guard) தன்னார்வத் தொண்டர்களை மட்டுமே கொண்ட அமைப்பு. இது 1946-இல் உருவாக்கப்பட்டது.



தமிழ்நாடு வரைபடம்

மொத்த மக்கள்தொகை : 7893923








நீங்களும் போலீஸ் ஆகலாம்....!

தமிழகக் காவல்துறை


தமிழகத்தில் 1792-இல் முறையான போலீஸ் அமைப்பை ஆங்கிலேயர் உருவாக்கினர். தமிழக காவல்துறையின் நிர்வாக அமைப்பு இரண்டு பிரிவுகளாக உள்ளது.


அவை 1. ஆட்சி பணித்துறை (The Civil Wing)
2. காவல் பணித்துறை (Professional Wing) ஆகும்.


ஆட்சிப் பணித்துறை (The Civil Wing)ல் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், ஆட்சிப் பணியாளர் (அதாவது ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொறுப்பில் இயங்குகிறது.


காவல்பணித்துறை (The Professional Wing) காவல்துறையின் நேரடி தொடர்புடைய, காவல்துறை தலைமை இயக்குநர் தலைமை யில் செயல்படுகிறது. இவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாவார்.


ஒட்டுமொத்த, தமிழ்நாடு காவல்துறை ஒரு தலைமை இயக்குநர் (DGP) கீழ் இயங்கு கிறது.இவர் தமிழகக் காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப் படுத்தும் மூளையாக இவர் செயல்படுவார்.


தமிழ்நாடு மாநிலம், 12 சரகங்களாகப் (Ranges) பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சரகமும் ஒரு துணைத் தலைவர் (DIG) கீழே இயங்குகிறது.


ஒவ்வொரு சரகமும் காவல்துறை மாவட்டங் களாகப் (Police District) பிரிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு காவல்துறை மாவட்டமும் ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP) கீழே செயல்படுகிறது.


காவல்துறை மாவட்டம் உட்கோட்டங் களாகப் (சப்-டிவிஷன்) பிரிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு உட்கோட்டத்தையும் உட் கோட்ட அதிகாரி (சப்-டிவிஷனல் ஆஃபீசர் -எஸ்.டி.ஓ.) கவனித்துக் கொள்கிறார்.


உட்கோட்ட அதிகாரி இந்திய காவல் பணியைச் (IPS) சேர்ந்தவராக இருந்தால், உதவி கண்காணிப்பாளர் (அசிஸ்டெண்ட் சூபரின்டெண்டெண்ட் ஆஃப் போலீஸ்ஏ.எஸ்.பி.) என்று அழைக்கப்படுகிறார்.


தமிழ்நாடு காவல் பணியைச் சேர்ந்தவராக இருந்தால், துணைக் கண்காணிப்பாளர் (டெபுடி சூபரின்டெண்டெண்ட் டி.எஸ்.பி.) என்று அழைக்கப்படுகிறார்.


உட்கோட்டம் வட்டங்களாகப் (சர்க்கிள்) பிரிக்கப்பட்டுள்ளது.காவல் நிலையம், புறக்காவல் நிலையம் (அவுட் போஸ்ட்) என்று ஒவ்வொரு வட்டமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


காவல் நிலையம் காவல்துறை (இன்ஸ்பெக் டர் ஆஃப் போலீஸ்), சார்பு-ஆய்வாளர் (சப்- இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்) கீழும், புறக் காவல் நிலையம், தலைமைக் காவலர் (ஹெட் கான்ஸ்டபிள்) கீழும் செயல்படு கின்றன.


முதல் நிலை (கிரேட்/போலீஸ் கான்ஸ்டபிள்), இரண்டாம் நிலை என்று காவலர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.



தமிழகக் காவல்துறை அமைப்பு


தலைமை முதல் கடைசி பணியாளர் வரை


1. தமிழக அரசு
2. உள்ளாட்சித்துறை
3. தமிழகக் காவல்துறை
4. காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)
5. காவல்துறை தலைவர் (IGP)
6. காவல்துறை துணைத்
தலைவர் (DIG)
7. காவல் கண்காணிப்பாளர் (SP)
8. உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP)
9. துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP)
10. காவல் ஆய்வாளர் (Inspector)
11. காவல் துணை ஆய்வாளர் (Sub Inspector)
12. உதவி காவல் துணை ஆய்வாளர் (Assistant Sub-Inspector)
13. தலைமைக் காவலர் (Head Constable)
14. காவலர்கள் (Constables)


காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)

தமிழகக் காவல்துறையின் தலைமை நிர்வாகி யாகச் செயல்படுபவர். அரசுக்கு காவல்துறை தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க உதவி புரிவார்.
காவல்துறை தலைவர் (IGP)
இவர் காவல் மண்டலத்தின் தலைவராக இருப்பார். சட்டம், ஒழுங்கு, குற்றங்கள், காவலர் பயிற்சி, நவீனமயமாக்கல், காவலர் நலன் போன்ற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்.

காவல்துறை துணைத் தலைவர் (DIG)

காவல் சரகத்தின் தலைவராக செயல்படுகிறார். காவல் சரகங்களின் நிர்வாகப் பொறுப்பையும் புலனாய்வு, இரகசியப் போலீசார் காவலர் பயிற்சி போன்ற பல பொறுப்புகளை ஏற்று செயல்படுகிறார்.

காவல்துறை கண்காணிப்பாளர் (SP)

மாவட்டத்தின் அமைதிக்கும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை காவல்துறை கண்காணிப்பாளர் கவனிக்கிறார்.

உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP)

மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாள ரின் பணிகளில் உதவி செய்வதற்காக உதவி காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படுகிறார்.

துணை காவல் கண்காணிப்பாளர் (DSP)

வட்டங்களின் காவல்துறை நிர்வாகப் பொறுப்பை துணை காவல் கண்காணிப் பாளர்கள் ஏற்று செயல்படுத்துவார்கள்.

காவல் ஆய்வாளர்கள்

காவல் நிலையங்களை கட்டுப்படுத்தும் செயலை காவல் ஆய்வாளர்கள் செய்கின்றனர்.

காவல் துணை ஆய்வாளர்கள்

ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ஆவார்.

உதவி காவல் துணை ஆய்வாளர்

புறக்காவல் நிலையங்களின் தலைமை பொறுப்பை உதவி காவல் துணை ஆய்வாளர் ஏற்றுக் கொள்வார்.

தலைமைக் காவலர்

காவல்நிலையத்தின் உயர் அதிகாரியான, காவல்துணை ஆய்வாளருக்கு உதவிகரமாக இருப்பார்.

காவலர்கள்

தமிழகக் காவல்துறையின் கடைசிப்படி நிலையில் உள்ள பதவி காவலர் பதவியாகும்.




காவல்துறை பதவிகளும், சின்னங்களும்:

1. காவல்துறை தலைமை இயக்குநர் (DGP - Director General of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோகசின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவம், ஐ.பி.எஸ். சின்னம்.

2. கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP - Additional Director General of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் -வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவம், ஐ.பி.எஸ். சின்னம்.

3. காவல்துறை தலைவர் (IGP - Inspector General of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம், அதனடியில் ஃ வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள்.

4. காவல்துறை துணைத் தலைவர் (DIG - Deputy Inspector of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ். அசோக சின்னம், அதனடியில் ஃ வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள்.

5. காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police)

ஆண்டு பணிக்கு மேல் தேர்வு நிலை தோள்பட்டையில் -ஐ.பி.எஸ்., அசோக சின்னம் அதனடியில் இரண்டு நட்சத்திரங்கள். அதன் கீழ் IPS அல்லது TPS எழுத்து பொறிக்கப் பட்டிருக்கும்

6. இணைக் காவல்துறை கண்காணிப்பாளர் (Joint Superintendent of Police)

தோள்பட்டையில் -ஐ.பி.எஸ். அல்லது டி.பி.எஸ். அசோக சின்னம் அதனடியில் ஒரு நட்சத்திரம்.

7. கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (Additional Superintendent of Police)

தோள்பட்டையில் ஐ.பி.எஸ். அசோக சின்னம் (அல்லது) டி.எஸ்.பி. மூன்று நட்சத்திரங்கள். மேலே குறிப்பிட்ட எல்லா அதிகாரிகளும் கருநீல ஊதா கயிறு (Dark Blue Whistle Card) இடது தோளில் அணிவார்கள்.

8. வட்ட ஆய்வாளர் (Inspector of Police)

டி.பி. கருநீலம் , சிகப்பு ரிப்பன் , தோள்பட்டை யில் 3 நட்சத்திரங்கள்

9. உதவி ஆய்வாளர் (Sub Inspector of Police - SI)

டி.பி. கருநீலம், சிகப்பு ரிப்பன் , தோள்பட்டை யில் 2 நட்சத்திரங்கள் அனைவரும் காக்கி நிற ஊதா கயிறு அணிகிறார்கள். ஆயுதப்படை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் கரும் பச்சை நிற ஊதா கயிறு அணிவார்கள். சார்பு ஆய்வாளரிலிருந்து காவல்துறை இயக்குநர் வரை உள்ள அதிகாரிகள் தங்கள் பதவிக்கேற்ப அசோகச் சின்னமுடைய தவிட்டு (அல்லது) பழுப்பு நிறத்தால் (Brown) இடைக் கச்சைகளும் (Belt), அதே
நிறமுடைய காலணிகளும் (Shoes) அணிகிறார்கள். தலைஅணி தொப்பி (Pea Cap) அல்லது பெரோ (Beret) ஆகும்.

10. தலைமைக் காவலர் (Head Constable)

மேற்கையில் மூன்று பட்டை

11. முதல்நிலைக் காவலர் (Police Constable Grade- 1)

மேற்கையில் இரண்டு பட்டை

12. இரண்டாம் நிலை காவலர் (Police Constable Grade- II)

காவலர் பட்டை அணிவதில்லை.தொப்பி: நீலநிற செர்ஜ் தொப்பி, தலைமைக் காவலர் தொப்பியில் வெளிர் நீல நிற ரிப்பன் சுற்றப்பட்டிருக்கும். காவலர்கள் தவிட்டு நிற தோல் இடைகச்சையும், முதல்நிலை காவலரும், தலைமைக் காவலரும், பிக்கில் உடைய நீல நிற இடைக்கச்சையும் அணிகின்றனர். காலணி எல்லோருக்கும் கருப்பு நிறமாகும்.




காவல்துறை சரகங்கள் (Police Range)

காஞ்சிபுரம்,
சேலம்,
செங்கல்பட்டு,
வேலூர்,
விழுப்புரம்,
கோயம்புத்தூர்,
திருச்சி,
தஞ்சாவூர்,
மதுரை,
திருநெல்வேலி,
திண்டுக்கல் மற்றும்
இராமநாதபுரம்.

காவல்துறை ஆணையகங்கள் (Police Commissionarate)

சென்னை,
சென்னை புறநகர்,
மதுரை,
சேலம்,
கோயபுத்தூர்,
திருச்சி,
திருநெல்வேலி

போலீஸ் மாவட்டங்கள்

தமிழ்நாடு 31 போலீஸ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
சென்னை,
அரியலூர்,
திருப்பூர்,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
கடலூர்,
விழுப்புரம்,
திருவண்ணாமலை,
வேலூர்,
சேலம்,
நாமக்கல்,
தர்மபுரி,
கோவை,
ஈரோடு,
நீலகிரி,
திருச்சி,
கரூர்,
பெரம்பலூர்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
மதுரை,
தேனி,
இராமநாதபுரம்,
விருது நகர்,
சிவகங்கை,
திருநெல்வேலி,
தூத்துக்குடி,
கன்னியாகுமரி,
திண்டுக்கல் ஆகியன.




தமிழ்நாடு காவல்துறை -முக்கிய பிரிவுகள்

1. சட்டம் & ஒழுங்கு (Law & Order)

2 குற்றப்புலனாய்வு (Crime Branch)

3. குற்றப்பிரிவு நுண்ணறிவு பிரிவு (CID, Intelligence)

4. போக்குவரத்துப் பிரிவு (Traffic)

5. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition)

6. குடியுரிமை பாதுகாப்பு பிரிவு (Protect of Civil Rights)

7. இருப்புப் பாதை காவல் பிரிவு (Railway Police)

8. சிறப்பு காவல்படை (Armed Police)

9. குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வுத் துறை (Civil Supplies, CID)

10. சிறப்பு புலனாய்வுத்துறை (SBCID)

11. கடற்கரை பாதுகாப்பு (Coastal Security Group)

12. பயிற்சி பிரிவு (Training)

13. உள்நாட்டு பாதுகாப்புப் படை (Civil Defence and Home Guards)

14. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (Economic Offences wing)





தமிழக காவல்துறையின் சிறப்பு பிரிவுகள்:

கமாண்டோ போலீஸ் படை (CommandoForce)

இதன் முக்கியப் பணி தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவது. இதில் உயர் அதிகாரிகள், காவலர்கள் என மொத்தம் 300 நபர்கள் இப்படையில் உள்ளனர். இதற்கான கமாண்டோ பள்ளி சென்னையில் செயல்பட்டு வருகிறது.

கோவில் பாதுகாப்பு படை (TempleProtection Force)

1000 இரண்டாம் நிலை காவலர்களும், 3000 முன்னாள் இராணுவத்தினரும் இப்படையில் பணியாற்றி வருகின்றனர். கோவில்களையும், அவற்றின் சொத்துக்களையும் பாதுகாப்பதற் காக இப்படை உருவாக்கப்பட்டு செயல்புரிந்து வருகிறது.

விரைவுப்பணி காவல் அமைப்பு (SwiftAction Force)

மத வன்முறைகள், வகுப்புக் கலவரங்கள் நடைபெறும் சமயங்களில் விரைந்து சென்று அவற்றைத் தடுக்க வேண்டும் எனும் நோக்கத் திற்காக இக்காவல் அமைப்பு அமைக்கப்பட்டது. உயர் அதிகாரிகள், காவலர்கள் என இப்படையில் உள்ளனர்.

ரயில்வே காவலர் படை (Railway Police)

ரயில் நிலையத் திருட்டுக்கள், குற்றங்கள் தடுப்பு, பயணிகளுக்குப் பாதுகாப்பு போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்கள் பாதுகாக்கின்றது. தமிழக அரசின் ரயில்வே காவலர்படை ரயில் நிலையங்கள், பயணிகள் பாதுகாப்பு அளிக்கும் அமைப்பாகும்.

பெண் காவலர் படை (Women Police)

இளம் பெண்கள், குழந்தைகளை மீட்க உதவுதல், வரதட்சனை கொடுமைகளைத் தடுத்தல், ஆண் காவலர்களுக்கு உதவியாக இருப்பது போன்ற பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். தற்சமயம் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

கடலோர பாதுகாப்புக் குழு (Coastal Security Group)

கடலோரங்களிலிருந்து எரிபொருள் பிற நாடுகளுக்கு கடத்தப்படுவது, மருந்துப் பொருட் கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது, வெடிபொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவது, உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது போன்ற விவகாரங்களைக் கடலோரப் பாதுகாப்புக் குழு ஏற்று செயல்படுகிறது. எண்ணூரிலிருந்து தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள 1000 கிலோமீட்டர் தூரமுள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதியை
இப்பிரிவினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.

குடிமை பாதுகாப்புப் பிரிவு (Civil Defence)

சென்னை, கல்பாக்கம் ஆகிய இரு நகரங் களும் குடிமைப் பாதுகாப்புப் பிரிவின் கட்டுப் பாட்டின் கீழ் வரும் நகரங்களாகும். நெருக்கடி காலங்களில் எதிரிகளின் படையெடுப்புக் காலங்களில் உயிர்களை, சொத்துக்களைப் பாதுகாக்கவும் தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தொடரவும் இப்பிரிவினர் பாடுபடுகின்றனர்.

உள்நாட்டு பாதுகாப்புப் படை (HomeGuards)

சாலைப் போக்குவரத்து, இரவு காவல், கோவில் விழாக்களுக்குப் பாதுகாப்பு, புள்ளிவிவரங்கள் சேகரிப்பு, அவசரக் காலங்களில் உதவி செய்தல், கொடி நாளுக்கு நிதி திரட்டுவது, பெரிய தலைவர்களின் பாதுகாப்பு இவற்றிற்கு உள்நாட்டு பாதுகாப்புப் படையின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. தன்னார்வத் தொண்டர்களையே முழுக்க கொண்ட இப்படை 10,566 நபர்கள் (இதில் 550 பெண்கள்) கொண்ட படை
பிரிவாக உள்ளது.

விபச்சாரத் தடுப்புப் படை (Anti-ViceSquad)

விபச்சாரத் தடுப்புச் சட்டத்தை அமுலாக் கும் பொறுப்பை இப்படையினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மதுவிலக்கு அமல் பிரிவு (ProhibitionEnforcement wing)

தமிழகம் முழுவதும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் பணியில் இப்பிரிவினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக தமிழகத்திற்கு மதுபானங் களைத் தடுக்கும் பணியையும் இது செய்கிறது.

சிலைத் திருட்டுப் பிரிவு (Idol Wing)

முக்கியமான சிலைத் திருட்டு வழக்கு களில்இப்பிரிவினர் மாவட்டக் காவலர்களுக்கு உதவி செய்கின்றனர். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள், கள்ளச் சந்தை வியாபாரிகள், தரகர்கள், கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை ஆராய்ந்து அவற்றைத் தடுக்கின்றனர்.

பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு (Economic Offences wing)

பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தலைமûவாகி விடுவது, பண மோசடி போன்ற பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இப்பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர்.

போதை மருந்துகள் கடத்தல் தடுப்புநுண்ணறிவுத் துறை (Narcotic Intelligence Bureau)

போதைப் பொருட்களைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படும் துறை இது. 123 காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறது.

சிறப்பு அதிரடிப்படையினர் (Special Task Force)

தீவிரமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழும்போது சிறப்பு அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு (Civil Supplies CID)

கள்ளக் கடத்தல்காரர்களைச் சமாளிப்பது, உணவில் கலப்படம் செய்வோரைக் கண்டறி வது தமிழக எல்லைப் புறங்களில் சட்ட விரோதமாக அத்தியாவசியப் பொருட்கள் பிற மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதை தடுத்தல் போன்ற பணிகளை இப்பிரிவினர் செய்து வருகின்றனர்.

வீடியோ தடுப்புப் பிரிவு (Video- Piracy Cell)

திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து விற்பனை செய்வதைத் தடுக்கும் பணியை இப்பிரிவினர் செய்து வருகின்றனர்.

கொள்ளைத் தடுப்புப் பிரிவு (Anti- DacoityCell)

கொள்ளை, வழிப்பறி, பணத்திற்காகக் கொலைகளைச் செய்வது போன்ற குற்றங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது.

தீண்டாமை ஒழிப்புக் காவலர் (Protection of Civil Rights)

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின்மீது இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்கும் காவல் பிரிவு உருவாக்கப்பட்டது. தீண்டாமைக் குற்றம் புரிவோருக்கு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் உண்டு.வணிகக் குற்ற விசாரணை பிரிவு (Commercial Crimes Investigation Wing CID)கூட்டுறவுத் துறையின் பதிவாளரால் குறிப்பிடப்படும் வழக்குகளை இப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர்.தமிழ்நாடு சிறப்பு
காவல்படை (Tamilnadu Special Police Batallions)சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், வகுப்புக் கலவரங்களைத் தடுக்கவும், தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் உள்ளூர் காவல்துறைக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பணிபுரிகிறது.புலனாய்வுப் பிரிவு (Intelligence Wing) இப்பிரிவு புலனாய்வு செய்திகளைப் பெறுதல், அவற்றை ஆராய்தல் பின்பு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்தல்
போன்ற பணிகளைச் செய்து வருகின்றது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைக் குழுமம்(Tamilnadu Uniformed Services Recruitment Board)காவலர் தேர்வை எந்தவித குறைபாடுகளும் குற்றங்களுமின்றி, நடத்துவதற்காகவே 1991-ஆம் ஆண்டு தமிழக அரசு இந்த தேர்வாணைக் குழுமத்தை நிறுவியது. காவல்துறையின் இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்களைத் தேர்வு செய்தல், காவல் துறை உதவி ஆய்வாளர் களைத் தேர்வு செய்வது போன்ற
பணிகளையும், தீயணைப்புத் துறைக்கு தீயணைப்பு வீரர்களை யும் சிறைத்துறைக்கு இரண்டாம் நிலை விடுதிக் காப்பாளர் (ஆண்/பெண்)களைத் தேர்வு செய்யும் பணியையும் இவ்வாரியம் செய்து வருகிறது.பாதுகாப்புப் பிரிவு ரகசியக் காவலர் (Security Branch CID)முக்கியக் காவலர்கள் மற்றும் முக்கியமான அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான பணிகளை இப்பிரிவினர் கவனித்துக் கொள்வர். கொலை மிரட்டலுக்கு
அடிக்கடி இலக்காகும் தலைவர்களுக்கும், முக்கிய மனிதர்களுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்கின்றனர்.சிறப்புப் பிரிவு ரகசிய காவலர் (Special Branch CID)மதக் கலவரங்கள், வகுப்புக் கலவரங்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அனுப்பும் பொருட்டு இப்பிரிவு அமைக்கப்பட்டது. இப்பிரிவினர் நாட்டின் நிலைமைகளை உன்னிப்பாக ஆய்வு செய்து மாவட்டக் காவல்
கண்காணிப்பாளர் களுக்கும், நகரக் காவல் ஆணையாளருக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்வர்


தமிழ்நாட்டில் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள் பற்றிய விபரம்:






S.No
CRIME HEAD
2008
2007
2006
2005
2004


1
Murder

1630

1521

1273

1365

1389

2
Murder for Gain

105

102

89

74

73

3
Dacoity

100

88

95

73

72

4
Robbery

662

495

450

437

464

5
Burglary

3849

3717

3300

3738

4147

6
Theft

15019

13217

13651

15851

17530


TOTAL

21365

19140

18858

21538

23675

MAJOR CRIME TRENDS - TAMIL NADU



INCIDENCE OF CRIME AGAINST WOMEN CASES
FROM 2006 TO 2008 IN TAMIL NADU



S.NO

HEADS

2008
2007

2006


1
RAPE

573

523

457

2
DOWRY DEATH

207

208

187

3
MOLESTATION

1705

1558

1179

4
SEXUAL HARASSMENT

974

875

852

5
CRUELTY BY HUSBAND AND HIS RELATIVES

1648

1976

1248

6
KIDNAPPING AND ABDUCTION OF WOMEN AND GIRLS

1155

1097

718

7
DOWRY PROHIBITION ACT

262

368

81


TOTAL

6524
6605

4722



காவல் துறை உதவி ஆய்வாளர் (Sub Inspector) க்கான தகுதிகள்:

QUALIFICATIONS / NORMS / MARKS FOR RECRUITMENT OF
MEN SUB-INSPECTORS OF POLICE



Sl. No.

REVISED - As per G.O.Ms.No.953, Home(Pol.III) Department Dated 07-10-2002


1.
Age
20 - 28

2.
Age Relaxation
SC/ST-33 - Ex-Servicemen - Within 3 Years from the date of discharge subject to a maximum of 45 years

3.
Height Minimum
168 cms.

4.
Height Relaxation
SC/ST 165 cms.

5.
Chest Normal 81 cms. with an expansion of 5 cms.
81 - 86 cms.

6.
Educational Qualification
Any Degree

7.
Physical Efficiency Test

Endurance Test - Running 1500 Mtrs. in 7 Minutes. Successful candidates have to undergo PET as follows:-
(3 events with a minimum qualifying mark of 6 {1 star in each event} and a maximum of 15 marks allotted)


-

1* = 2 marks
2* = 5 marks

Running 100 mtrs. (or) 400 mtrs.
100 mtrs.
15.00 sec.
13.50 sec.

400 mtrs.
80.00 sec.
70.00 sec.

Long Jump (or) High Jump
Long Jump
3.80 mtrs.
4.50 mtrs.

High Jump
1.20 mtrs.
1.40 mtrs.

Rope Climbing
Rope Climbing
5.0 mtrs.
6.0 mtrs.

8.
Written Test
Minimum Qualifying marks - 35 marks

Test
Maximum Marks

General Knowledge Test
45

Psychology Test
25


-
Extra Qualification:
National Service Scheme/
National Cadet. Crops/
Sports/Games
5


-
Total
75

9.
Viva-Voice
Viva-voice - 10 Marks

10.
Sports Quota
Existing 10% quota shall continue. If it is not possible to fill up the Sports quota of 10% the gap be filled up by the dependents of the serving Police Perosnnel.

11.
Quota for dependents of serving police personnel, ministerial staff etc.
10% quota under direct recruitment for dependents of the serving police personnel and the wards / dependents of retired, deceased and medically invalidated police personnel and 10% out of 10% for the dependents of ministerial staff.

12.
Written Examination
Minimum 35 marks


Note :
1. If Departmental candidates from the category of the Police Constables and Head Constables are not available to fill up the 20% quota against direct recruitment for the post of Sub-Inpsector of Police, then candidates from open market be selected and the vacancies filled up accordingly.
2. The total percentage under Serial Nos. 10 & 11 should not exceed 20%.


QUALIFICATIONS/ NORMS/ MARKS FOR RECRUITMENT OF
MEN PCs/ FIREMEN/ JAIL WARDERS



Sl.No.

REVISED - As per G.O.Ms.No.953, Home (Pol.III) Department Dated 07.10.2002


1.
Age
18 - 24

2.
Age Relaxation
SC/ST - 29 - Ex-Servicemen - Within 3 years from the date of discharge subject to a maximum of 45 years

3.
Height Minimum
168 cms.

4.
Height Relaxation
SC/ST 165 cms.

5.
Chest Normal 81 cms. with an expansion of 5 cms.
81 - 86 cms.

6.
Educational Qualification
X Standard or SSLC old pattern

7.
Physical Efficiency Test

Endurance Test - Running 1500 mtrs. in 7 minutes. Successful candidate have to undergo PET as follows:-

(3 events with a minimum qualifying mark of 6 {1 star in each event} and a maximum of 15 marks allotted)



1* = 2 marks
2* = 5 marks

Running (100 mtrs. or 400 mtrs.)
100 mtrs.
15.00 sec.
13.50 sec.

400 mtrs.
80.00 sec.
70.00 sec.

Long Jump (or) High Jump
Long Jump
3.80 mtrs.
4.50 mtrs.

High Jump
1.20 mtrs.
1.40 mtrs.

Rope Climbing
Rope Climbing
5.0 mtrs.
6.0 mtrs.

8.
Written Test
Minimum qualifying marks - 40 marks

Test
Maximum Marks

General Knowledge Test
50

Psychology Test
30


-

Extra Qualification:
National Service Scheme /
National Cadet Corps /
Sports/Games.
5


-
Total
85

9.
Viva-Voice
Viva-Voice dispensed with

10.
Sports Quota
Existing 10% quota shall continue. If it is not possible to fill up the Sports quota of 10%, the gap be filled up by the dependents of serving Police Personnel. This norm is also applicable to the dependent of serving Prison Personnel in the case of selection of Jail Warders.

11.

i) Quota for dependents of serving police personnel, ministerial staff etc.
ii) Quota for dependents of serving prison personnel, ministerial staff etc.
i) 10% quota under direct recruitment for dependents of the serving police personnel and the wards/ dependents of retired, deceased and medically invalidated police personnel and 10% out of 10% for the dependents of ministerial staff.
ii) 10% quota under direct recruitment of Jail Warders for dependents of the serving prison personnel and the wards/ dependents of retired, deceased and medically invalidated prison personnel and 10% out of 10% for the dependents of ministerial staff of prison dependent. (G.O.Ms.No.362, Home (Prison.II) Department dated 25.04.2003).

12.
Written Examination
Minimum 40 marks.


Note:
1. The total percentage under Serial Nos. 11 & 12 should not exceed 20%.
2. Ex-servicemen served as Drivers, Auto-mechanic, Auto-electricians and Armourers are exempted from undergoing Physical Measurement Test and Physical Efficiency Test for the post of Gr.II. Police Constables/ Jail Warders.
Rajaghiri Gazzali
















Rajaghiri Gazzali

Monday, August 10, 2009

ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)

ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.

மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.

கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?

ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.

நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).
வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.
நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.
உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும்.
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்

தொடர்ந்த தலை வலி
குளிருதல், நடுங்குதல்
இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
தலை சுற்றல் / மயக்கம்
பசியின்மை
உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி

இடைவிடாத காய்ச்சல்
வயிற்று போக்கு
வாந்தி எடுத்தல்
மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்
உயிரிழப்பும் ஏற்படலாம்

குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?

தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்

மூச்சு விட சிரமப் படுவார்கள்

உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்
தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்
அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்
தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்
தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்

இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.

வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.
========================================================
இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன?
-----------------------------------------------------------------------
Chennai
King Institute of Preventive Medicine (24/7 Service)
Guindy, Chennai – 32
(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital
Thondiarpet, Chennai
(044) 25912686/87/88, 9444459543

Government General Hospital
Opp. Central Railway Station, Chennai – 03
(044) 25305000, 25305723, 25305721, 25330300
------------------------------------------------------------------------
Pune
Naidu Hospital
Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01
(020) 26058243

National Institute of Virology
20A Ambedkar Road, Pune – 11
(020) 26006290
------------------------------------------------------------------------
Kolkata
ID Hospital
57,Beliaghata, Beliaghata Road, Kolkata - 10‎
(033) 23701252
------------------------------------------------------------------------
Coimbatore
Government General Hospital
Near Railway Station,
Trichy Road, Coimbatore – 18
(0422) 2301393, 2301394, 2301395, 2301396
------------------------------------------------------------------------
Hyderabad
Govt. General and Chest Diseases Hospital,
Erragadda, Hyderabad
(040) 23814939
------------------------------------------------------------------------
Mumbai
Kasturba Gandhi Hospital
Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai - 11
(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital
J J Marg, Byculla, Mumbai - 08
(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute
Acharya Donde Marg, Parel, Mumbai – 12
(022) 24160947, 24160961, 24160962
------------------------------------------------------------------------
Kerala
Government Medical College
Gandhi Nagar P O, Kottayam - 08
(0481) 2597311,2597312

Government Medical College
Vandanam P O, Allapuzha - 05
(0477) 2282015

Taluk Hospital
Railway Station Road, Alwaye, Ernakulam
(0484) 2624040 Sathyajit - 09847840051

Taluk Hospital
Perumbavoor PO, Ernakulam 542
(0484) 2523138 Vipin - 09447305200
------------------------------------------------------------------------
Gurgaon & Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)
Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29
(011) 26594404, 26861698
Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases
22, Sham Nath Marg,
New Delhi – 54
(011) 23971272/060/344/524/449/326

Dr. Ram Manohar Lohia Hospital
Kharak Singh Marg,
New Delhi – 01
(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute
University Enclave, New Delhi- 07
(011) 27667102, 27667441, 27667667, 27666182
------------------------------------------------------------------------
Bangalore
Victoria Hospital
K R Market, Kalasipalayam, Bangalore – 02
(080) 26703294
Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases
Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29
(080) 26631923
Dr. Shivaraj - 99801-48780
------------------------------------------------------------------------

நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.

Saturday, August 8, 2009

YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET

YAHIND.COM – THE LARGEST NRI WEB SITE ON THE PLANET

YaHind.Com is one of the Largest NRI Web Sites on The Planet. You will find the following: NRI News, NRI Business, Online Education, Health Tips, Women's Corner, Kids Kingdom , Free Greetings, Sports News, Downloads, Free Classified Ads, Cooking Tips, Job Resources, Media Resources, Online Services, Career Tips, Entrepreneurs Ideas, Universities and Educational Institutes, Banks, Financial Institutions and Tourist Information.

Visit www.yahind.com


nri123.com - Information at your finger tips

Wednesday, August 5, 2009

கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=201


கீழக்கரை : கீழக்கரை அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 5 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 07.08.2009 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சாலை தெரு பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

கீழக்கரை ஹமீதிய்யா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சி. ஆமினா விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.
ஆயிஷா சித்தீக்கா ஆலிமா எஸ். ஹமீதா மஹ்ஃபூனா சிற்ப்புரை நிகழ்த்துகிறார்.
அல் மத்ரஸத்துன் நிஸ்வானித் தாருஸ்ஸலாம் நிர்வாகி சபீன் அமீர் பட்டம் வழங்குகிறார்.
அஜீஸா காஸிம் மற்றும் தாஜுன்னிஸா நூர்தீன் பரிசு வழங்குகின்றனர்.

இவ்விழா சிறப்புற நடைபெற துஆச் செய்திட நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு

www.dharussalam.blogspot.com

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=201


குறிப்பு : இவ்விழா பெண்களுக்கு மட்டுமே

Thursday, July 30, 2009

அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்

அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்

www.mudukulathur.com


ராமநாதபுரம், ஜூலை 29: உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சுமார் 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், 117 வகையான உயிருள்ள அற்புத பவளப் பாறைகள் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி குறித்து தேசிய அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காசி-ராமேசுவரம் புதிய ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா எனப்படுகிறது. இப் பகுதி ராமேசுவரத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியதாகும்.

மன்னார் வளைகுடா கடல் பகுதி என்பது இலங்கைத் தீவில் தலைமன்னாருக்கும் தெற்கு தமிழக கடலோரத்தில் வளைகுடா பரப்புக்கும் இடைப்பட்ட பரப்பாகும்.

குடா என்றால் ஆழம் குறைந்த கடல் பகுதி எனப்படுகிறது. இலங்கையில் தலைமன்னார் எனப்படும் மன்னாரை ஒட்டியுள்ள பகுதியாகவும் இருப்பதால், மன்னார் வளைகுடா எனவும் அழைக்கப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ம் ஆண்டு கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவித்தது. இக் கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளும் அதனைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளையும் உள்ளடக்கிய 560 சதுர கி.மீ பரப்பளவே தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

1989-ல் யுனெஸ்கோ நிறுவனம் பரிந்துரையின்படி, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வளமான பகுதியாக இருப்பதால், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும்.

எனவேதான், இதனைப் பாதுகாக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு ராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நிறுவியது.

இந்த அமைப்பு பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து கூட்டு ரோந்துப் பணி மேற்கொண்டு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்து வருகிறது.

மன்னார் வளைகுடா கடல் வளம் நமது பகுதியில் உள்ள ஓர் அரிய பொக்கிஷம். முதுகெலும்பில்லாத உயிருள்ள பிராணிகளின் எளிய தொகுப்பாகவும் பவள உயிரிகளால் ஆனவைதான் பவளப்பாறைகள் என்று இன்றும் பலரும் அறியாமல் உள்ளனர்.

கடலுக்கு அடியில் உள்ள பலவகையான பவளப் பாறைகளைப் பார்த்து மகிழ மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை சுற்றுலாப் பயணிகளுக்காக "கண்ணாடி இழைப்படகு' சவாரிக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் குறித்து அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் அலுவலர் வீ. நாகநாதன் கூறியதாவது:

சர்வதேச திமிங்கில ஆய்வு அமைப்பு முக்கியமான கடல் பாலூட்டிகள் உலக அளவில் அதிகமாக இருக்கும் இடம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுதவிர, உலகிலேயே வேறு எங்குமே இல்லாத அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் 150 வகையான வண்ண மீன்கள், பாலூட்டி வகையில் 12 வகையான ஆவுலியாக்கள் எனப்படும் கடல் பசுக்கள், 34 வகை கடல் அட்டைகள், 12 வகையான கடல் பாம்புகள், தலை குதிரையைப் போலவும் வால் குரங்கைப் போலவும் நின்று கொண்டே குதித்துக் குதித்து ஓடும் அற்புதக் கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள் இப்படியாக 3600 வகைகள் உள்ளன.

மேஜை வடிவம், தட்டு வடிவம், மனித மூளை வடிவம் மற்றும் மான்கொம்பு வடிவம் உள்ளிட்ட பவளப் பாறைகளின் வகைகள் 117-ம் வளர்ந்து கொண்டே இருக்கும் உயிரினங்களும்தான் இக் கடல் பகுதியில் இருக்கின்றன என நாகநாதன் தெரிவிக்கிறார்.

இந்தியக் கடல் பகுதியில் காணக் கிடைக்காத கடல் வளங்கள் அடர்ந்து, படர்ந்து, வியாபித்து இருக்கும் அற்புத சூழல் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துகொண்டே வருவதுதான் வேதனைக்குரியது.

வெடிவைத்து மீன் பிடித்தல், கடல் வளத்தையே அழிக்கும் வகையில் பல்வேறு மீன்பிடி முறைகள், கடல் மாசுபடுதல் போன்ற காரணங்களால் மக்களிடையே இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.

இதனால் இந்த அற்புத கடல்வளம் என்னும் இயற்கை சிதைந்து குன்றி வருகிறது.

எனவே, இத் தேசியப் பூங்கா குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க காசி முதல் ராமேசுவரம் வரை விடப்படவுள்ள புதிய விரைவு ரயிலுக்கு (கடந்த ரயில்வே பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது) மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது சிறப்பாக அமையும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயர் வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Wednesday, July 29, 2009

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபாய் –Cell : 050 795 99 60 )


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=164

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.

இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.
அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.
எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.


என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.

பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.

இந்த இரண்டு சேலை மட்டும் எடுப்பதற்காகவே சோனாப்பூரிலிருந்து ( Labour Camp Area ) டேரா பஜாருக்கு வெயில் நேரத்தில் போய் சேலையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவதற்குள் வியர்த்த வியர்வையை டவலால் துடைத்து அதை இரு முறை பிழிந்தும் விட்டேன். ஆனாலும் டவல் ஈரமாகவே இருந்தது.

ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன். அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர்.
ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார்.

காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.
என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன். ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள் என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன. டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன்.

உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம். என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது.
இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன. காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய்.

சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள். அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் !

பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன்.
சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட் களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள்.

லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல.
நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை !

ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க,

எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன். மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன்.

பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.

பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.

பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான். எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?

பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.

சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.

வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.

பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.

15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.

டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.

இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?

கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.

ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.

இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.

15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.

ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.

பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.
மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.

துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது !

குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?

எதுவானாலும் நீங்கள் கூறப்போகும் பதிலைப் பொறுத்து தான் எனது முடிவு இருக்கும் !

உங்களின் மேலான நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனக் குமுறலுடன் ஓர்
உழைப்பாளி !!

குறிப்பு ;

வாசகர்களே, உங்களின் மேலான கருத்துக்களை sjaroosi@yahoo.com என்ற இ.மெயில் முகவரிக்கோ அல்லது 050 – 7959960 என்ற கைபேசி அழைப்பிற்கோ தெரியப்படுத்தலாம்.

Monday, July 27, 2009

உர்தூ மொழியின் பிறப்பும் – சிறப்பும்

உர்தூ மொழியின் பிறப்பும் – சிறப்பும்

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=163

இந்திய மொழிகளில் முக்கியமானவை 22. அவற்றில் இரண்டு செம்மொழிகள். ஒன்று வடமொழியான சமஸ்கிருதம் இன்னொன்று தென் மொழியான தமிழ். அப்பர் பெருமான் அவருடைய தேவாரத்தில் தமிழை தென்மொழி என்றே குறிப்பிடுகிறார்.

ஆனால் அதே சமயத்தில் வடபுலத்தில் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ள உர்தூ மொழி அலாதியானது. பாரசீகம் – அரபு – வடமொழி – இந்துஸ்தானி ஆகிய நான்கு மொழிகளின் சேர்க்கையிலிருந்து பிறந்த மொழி உர்தூ. இம்மொழியிலுள்ள மெய்ஞ்ஞானக் கவிதைகள் இனிமையானவை மட்டுமல்ல. ஆன்மீக ஆர்வலர்களின் இதயங்களைக் கவரக் கூடியவை. அதிலும் இஸ்லாமிய அந்தரங்க அனுபூதிச் செம்மல்களாகிய மெய்ஞ்ஞானிகள் அருளிய பாடல்கள் தனிச்சுவை மிக்கவை. அவற்றைத் தமிழகத்துச் சித்தர் பாடல்களுடன் ஒப்பிடலாம். எளிய சொற்களில் அருமையான நுட்பங்கள் நிறைந்த சிலேடை களும் – உவமைகளும் கொழிக்கும் பாடல்கள் அவை. வட புலத்தில் வடமொழி இலக்கியங்களில் நல்ல தேர்ச்சியுடைய பெரும் புலவர்களும் அறிஞர்களும் உர்தூ மொழியிலும் அசாத்திய புலமை மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்.

இதற்குக் காரணம் உர்தூ மொழியில் நிறைந்துள்ள சமய பேதங்களைக் கடந்த ஆன்மீக உணர்வு ததும்பும் பாடல்களே ஆகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வடமொழியிலும் இந்தியிலும் ஆழ்ந்த புலமை உடையவர் மட்டுமல்ல. உர்தூ கவிதைகளில் பயில்பவரும் கூட. தமிழகத்து மேடைகளில் அண்ணா கோலோச்சி வந்ததைப் போல, இந்தி மேடைகளில் அற்புதமான நாவலராக விளங்கி வருபவர் வாஜ்பாயி. அவருடைய சொற்பொழிவில் ஆங்காங்கு உர்தூக் கவிதை வரிகள் மசாலா போல் மணம் வீசுவது வழக்கம். உர்தூ மொழி -இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பாடல்களால் ஜீவகளை யோடு பொலிந்து நின்ற போதிலும் இந்து சமய அறிஞர் களின் இதயங்களிலும் குடி கொண்டிருப்பதாகும்.

அதோடு மதபேதம் கடந்த மனிதநேயத்தை வளர்க்கும் அபூர்வ இலக்கியங்கள் உர்தூ மொழியில் நிறைந்துள்ளன. கவிஞர் இக்பாலின் பாடல்கள் உர்தூ மொழிக்கு தனி முக விலாசத்தையே தந்தவை.

பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தில் முன்ணனித் தலைவர்களில் ஒருவராக பண்டித நேரு வல்லபாய்படேல் போன்றோருக்கு இணையாக விளங்கியவர் – மெளலானா அபுல் கலாம் ஆஸாத். அவர் சுதந்திர இந்தியாவின் கல்வி அமைச்சராகப் பொலிந்து நின்றவர். இஸ்லாமிய சமய ஆன்மீக இலக்கியங்களில் மட்டுமின்றி உர்தூ மொழியில் மிகப் பெரும் புலவராக விளங்கியவர். அவருடைய பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரபு – பாரசீகம் – உர்தூ மொழி துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருதுகள் ஐந்து பெரு மக்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகளை வழங்கிய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உர்தூ மொழிகளைப் பற்றி அற்புதமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். உர்தூ மொழியை இஸ்லாமியர்களின் மொழி என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் அது சரியல்ல. இந்துக்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பையும் ஆன்மீக உணர்வால் பிணைக்கக் கூடிய இனிய மொழி உர்தூ. இன்னும் கூறுவதென்றால் பஞ்சாபி மொழிக்கு உர்தூ சகோதரி போன்றது என்று பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்ட பர்னாலா நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

ஆனால் அதே சமயத்தில் சூஃபி ஞானப் பாடல்களுக்கு எல்லா அம்சங்களிலும் இணையான சித்தர் பாடல்களைக் கொண்டுள்ள இனிய மொழி – தமிழ். அதோடு பண்ணிசையில் மலர்ந்த தேவார – திருவாசகமும் திவ்யப் பிரபந்தப்பாசுரங்களும் உலக இலக்கியங்கள் எதிலும் காண முடியாத பண்பாட்டு அதிசயங்களாகும். அதோடு தமிழ் சாத்திர மொழியாக திருமந்திரத்தில் ஒளி வீசுகிறது.

மேலும் தமிழிலுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் அலாதியான இயற்கை மணம் கமழ்பவை. இவ்வளவும் இருந்த போதிலும் வடபுலத்தவர் உர்தூவைக் கொஞ்சுவதைப் போல தென்னாட்டவர் தமிழை ஆசையோடு கொஞ்சுவதில்லை. பஞ்சாபைச் சேர்ந்த பர்னாலா உர்தூ பஞ்சாபி மொழிக்கு சகோதரி போல என்று வாய்விட்டுக் கூறி மகிழ்கிறார். ஆயினும் தமிழிலிருந்து பிறந்த தெலுங்கையோ அல்லது கன்னடத்தையோ சேர்ந்த அறிஞர்கள் தமிழைத் தங்களுடைய தமக்கை மொழியாகக் கூறி மகிழ்வதில்லை என்பது வருந்தத் தக்கது.

நன்றி – தமிழ் ஓசை

Sunday, July 26, 2009

மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்

மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 29 _ம் தேதி ஸ்பாட் அட்மிஷன்

மதுரை,ஜூலை.26

மதுரை கோ.புதூரில், அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) தற்போது அட்மிஷன் நடைபெற்று வருகிறது. வரும் 29 ம் தேதி அன்று நேரிடிசேர்க்கை நடைபெற உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், இந்த நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 29 ம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இந்நிலையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ்) மற்றும் கட்டணம் விலை185, 195, 205 உடன் நேரில் வந்து முதல்வரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை விண்ணப்பிக் காதவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ள வேண்டும்.


10 ம் வகுப்பு தேர்ச்சிக்கு ; தானியங்கி ஊர்தி, கம்மியர் இயந்திர பராமரிப்பு, தகவல் தொழல்நுட்பம், கம்மியர் (கருவிகள்) , கம்மியர் ஆட்டோ எலக்ட்ரிக்கல் ,எலக்ட்ரானிக்ஸ். 8_ம் வகுப்பு தேர்ச்சி; உலோகத்தகடு வேலையாள், தச்சர், அச்சவார்ப்பவர், 12 _ம் வகுப்பு தேர்ச்சி; சுருக்கெழுத்து (ஆங்கிலம் டி.டி.பி.ஓ. மாணவர்களின் கல்வித் தகுதி, இன சுழற்சி மற்றும் அரசின் சேர்க்கை விதிகளுக்கு உட்பட்டு மாணவர்கள் உடனுக்குடன் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைக்கு உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள். பொது மக்கள் மற்றும் மாணவர்கள் இப்பொன்னான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். அணுர வேண்டிய முகவரி,




துணை இயக்குநர்/ முதல்வர்,
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,
கோ.புதூர் மதுரை 625007.

தொலைபேசி எண் 0452 _2566183 என்ற எண்ணுடனும் தொடர் கொள்ளாலம் என முதல்வர் அறிவித்து உள்ளார்.

Saturday, July 25, 2009

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்

நெஞ்சே நெனவிருக்கர்
நினைவே நெஞ்சிலிருக்கா?

அரைக்கால் சட்டை
அடியெல்லாம் ஓட்டை

சிறுபிள்ளை பிராயமதில்
செருப்பில்லா நடைபயணம்

பால்வடியும் பருவமதில்
பால்வாடி பயிலகம்

வரிசையா ஒக்காந்து
வாய்பாடு படிச்சமே

பள்ளிக்கொடம் போவாம
அடம் புடிக்கையிலே

குஉடையிலே தூக்கி சுமந்த
கிளவி முகம் நெனவிருக்கா?

நெல்லிக்காயோட மிளகாப் பொடி
களாக்காயோட உப்புத் தூள்

அரை நெல்லிக்கா(ய்)
ஊற வெச்ச நெல்லிக்கா(ய்)

இலந்தப் பழ ஸ{சு
மைமுனம்மா க(i)ட நினைவிருக்கா
மன்சுர் மிட்டாய் க(i)ட நெனவிருக்கா


பாலுவாடி முடிஞ்சி பள்ளிவாசல் பள்ளியில
பாதத்தை பதிச்ச நாள் நெனவிருக்கா

‘அ’ னா சொல்லிக் குடுத்த
அவரஞ்சி டீச்சர் மறந்திடுமா?

சிலேட்டு குச்சி சாக்பீஸ் தின்ற
சுவை இன்னும் நாவிலிருக்கா?

அத பார்த்து விட்டும் அடிக்காத
அந்த அவரஞ்சி அம்மா நினைவிருக்கா

தும்பை நிற வெள்ளை உடையில்
தினம் கல்வி கற்பித்த அந்த

அதிகாலை வெண்ணிலா முகம்
அதை நான் மறப்பேனா?

எதையும் மறக்க வில்லை
இனி மறப்பதற்கும் இல்லை

ஏறத்தாழ இருபதாண்டு கால ஞாபகம்
அலைபேசியின் பொத்தானை அழுத்தி

அம்மா நான் தான் உங்கள் மாணவன்
ஒன்னாம் வகுப்பு உங்களிடம் பயின்றவன்

நானென்ன உங்களின் ஒற்றை பிள்ளையா
ஞாயிறு ஒளி தருவது உலகிற்கே யல்லவா

அந்த பகலவனால் ஒளியேற்கை பெற்ற
ஓர் தாவரம் ஓர் மலர்


அறியக் குஉடும் அந்தச் சூரியனை
ஆதவன் எங்ஙனம் அறிவான்

வானத்தின் நிலவு உலகிற்கே தெரியும்
வையத்தார் யாவரும் நிலவிற்கு ஒன்றுதான்

முதுவை ஹிதாயத்தின் தயவில் தங்கள்
முகம் தன்னை கண்டுகொண்டேன்

இனிய குரலையும் கேட்டுக் கொண்டேன்
இருபதாண்டு கால ஆவலுக்கு ஓர் வடிகால்

கண்களால் காண்பதற்கு விழைகிறேன்
கவிதை சிறகினை விரித்துவிட்டேன்

இருபதாண்டுகளை என் இறகானது
இரு நொடிகளிலேயே கடந்து விட்டது

இதோ உங்கள் பார்வையின் முன்னால்
என் வழிப்பயணம் தொடர்கிறது.

முதுவை சல்மான்
ரியாத் - சவுதி அரேபியா
00966-509342070


From: Muduvai Salman

Thursday, July 23, 2009

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து

மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

www.mudukulathur.com

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=15187〈=ta&Itemid=90


மேலைநாடுகளின் கலாச்சார சீர்கேட்டின் அடையாளமாகத் திகழும் ஓரினச் சேர்க்கையின் நாசகார விபரீதத்தை உணர்ந்து தான் நாடு சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றத்திற்குரியதென்றும் நமது நாட்டின் ஒழுக்கப் பாரம்பரியத்திற்கு எதிரானதென்றும் அறிவிக்கப் பட்டது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377 பிரிவின்படி 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தண்டனை வழங்கும் இந்திய தண்டனை சட்டவிதியை நீக்கு வதற்கு அதாவது ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தடையை நீக்குவதற்கு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்து வருவது இந்திய கலாச்சாரத்திற்கு விடப் பட்டுள்ள மிகப்பெரும் சவாலாகும்.

மத்திய அரசின் இந்த குறுமதி விபரீத முயற்சி ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய சீரழிவை உருவாக்கி விடும். இறைவன் அமைத்து கொடுத்தை இயற்கையான ஒழுக்கமுள்ள குண நலன்களை மறந்து தன்னிச்சையாக காட்டுமிராண்டித் தனமாக வாழ முயற்சிக்கும் ஒரு சில கலாச்சார சீர் கேட்டாளர்களின் நாசகார வாழ்க்கை சூழலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டத்தை மறு சீராய்வின் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கொடுக்க மத்திய அரசு முனைந்திருப்பது மிகவும் அருவெறுக்கத்தக்கதாகும். இறைவன் வகுத்துள்ள விதிகளுக்கே இது மிகப்பெரிய சவாலாகும்.

முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் என்றும் அவருக்கு ஜோடியாக ஹவ்வா என்ற பெண்ணும் படைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதைப் போலவே கிறிஸ்து வர்களின் பைபிளிலும் உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதாம் என்றும் அவரின் துணையாக ஏவால் என்ற பெண்ணும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. பகவத் கீதையில் கூட ஆதி என்ற துவக்கம் சிவன் என்றும் அவரின் துணையாக பார்வதி என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்படி எல்லா சமயத்தினராலும் குறிப்பிடப்படுகின்ற உலகில் தோன்றிய முதல் மனிதர் என்ற நிலைப்பாட்டை சற்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு ஆணுக்கு ஜோடியாக ஒரு பெண்ணாகவும், ஒரு பெண்ணுக்கு ஜோடியாக ஒரு ஆணாகவும் தான் இருக்க முடியும் இருக்கவும் வேண்டும் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சிறு பிள்ளைக்கும் பளிச்சென புரியும் இந்த இறைத் தத்துவம் இன்றைய ஆட்சி யாளர்களுக்கு புரியாமலா போகும்? ஒரு ஆண் இன்னொரு ஆணுடனும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் மனித சமுதாயத்தின் விரோதி களாகவே இருக்க முடியும்! இத்தகையவர்கள் மனிதருக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான் விரோதிகள்.

ஒரு பக்கம் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய்க்கெதிராக மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்யும் ஆட்சியாளர்கள் மறு பக்கம் எய்ட்ஸ் என்னும் கொலைகாரனுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எத்தனையோ பிரிவுகள் உயிரோட்டம் கொடுக்கப்படாமல் முடமாகி கிடக்கும் போது ஓரினச் சேர்க்கைக்கெதிரான இந்திய தண்டனை சட்டத்தை மட்டும் மாற்றி அமைக்கத் துடிப்பது ஏன்?

இந்திய அரசியல் சாசன சட்டவிதி 45 என்பது அனைவருக்கும் இலவச கல்வி என்பது தான். ஆனால் இன்றோ குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்கே பல ஆயிரங்களை கொட்டி தீர்க்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு கல்விக் கூடங்களெல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன.

அரசியல் சட்டவிதி 46 அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறுகிறது. சட்டமியற்றி 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது, ஆனால் இன்று வரைக்கும் தெருக்குழாயில் வரும் குடிநீரில் சாக்கடையும் கலந்து வருகிறதே ஆட்சியாளர் களால் இதை தடுக்க முடிகிறதா? மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சுகாதார சீர்கேடு தடுக்கப்பட வில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத மத்திய அரசு அவசிய அவசரமாக எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி அரக்கனுக்கு சாதகமாக ஓரினச் சேர்க்கை தவறல்ல என்ற நச்சுக் கருத்தை ஆதரிக்க முன் வருவது வெட்கக் கேடானதாகும்.

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தந்தையான மகாத்மா காந்தி வலியுறுத்தியது பூரண மது விலக்கு! இதை அரசியல் சட்டவிதி 46- ன் ஒரு பகுதியில் நாடு முழுவதும் பூரண மது விலக்கு அமுல் படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது. எத்தனை மாநிலங் களில் இந்த மது விலக்கு அமுலில் உள்ளது? நாடு சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸே காரணம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் ஆளும் மாநிலங் களிலேயே மதுவிலக்கு அமுல்படுத்தப்படாதது வேதனைக்குரியதல்லவா?

பா.ஜ.க. மதவாதக் கட்சியென்றாலும் அதனுடைய ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் பூரண மது விலக்கு அமுல்படுத்தப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே! அங்கு தான் மகாத்மா காந்தியும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியின் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கும் பா.ஜ.க இந்த விஷயத்தில் காங்கிரஸை விட மேலோங்கியே நிற்கிறது.

போலியான தேசிய வாதம் பேசும் கதர் சட்டைக் காரர்களின் சமீபத்திய எந்த நடவடிக்கையும் மக்கள் போற்றும் வகையில் இல்லை என்பது கசப்பான உண்மை தான். அதனுடைய அடையாளமாகத்தான் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிலை என்னவென்பதை வெளிப் படையாக அதன் தலைமை அறிவிக்க வேண்டும் இந்திய பாரம்பரியத்தையும் கலாச்சார ஒழுக்கத்தையும் யார் பாதுகாக்கிறார்களோ இல்லையோ? கண்டிப்பாக தமிழர்கள் பாதுகாப்பார்கள். தமிழர்களின் இந்த எண்ணவோட்டத்தை தமிழக அரசு அப்படியே மத்திய அரசுக்கு குறிப்பாக காங்கிரஸுக்கு உணர்த்த வேண்டும்.

ஓரினச் சேர்க்கை யென்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாசம் விளைவிக்கும் கேடுகெட்ட செயல் தான் என பறை சாற்றுவதின் மூலம் தமிழர்களின் கண்ணியமும், ஒழுக்கமும் பார் போற்றப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு என்ற விபரீத முயற்சியை கைவிட்டு விட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்த ஒவ்வொரு ஒழுக்க விரும்பி களும் குரல் கொடுக்க வேண்டும். இதை ஓர் அகிம்சை ரீதியில் அணுகுவோம்! ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம்!