Wednesday, September 10, 2008

207 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கீடு

207 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கீடு
கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்


ராமநாதபுரம்,செப்.10-

ராமநாதபுரம் மாவட்டத் தில் ரம்ஜான் பண்டிகை யையொட்டி 207 பள்ளி வாசல்களுக்கு 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித்தார்.

ரம்ஜான் பண்டிகை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தினத்தந்தி நிருபரிடம் கூறிய தாவது:- ராமநாதபுரம் மாவட் டத்தில் ரம்ஜான் பண்டி கையையொட்டி பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக சலுகை விலையில் பச்சரிசி ஒதுக்கீது செய்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் 7 தாலுகாக்களுக்கு உட்பட்ட 207 பள்ளிவாசல்களுக்கு 6 லட்சத்து 46 ஆயிரத்து 950 கிலோ பச்சரிசி வழங்கப்பட் டுள்ளது.

ராமநாதபுரம் தாலுகாவில் 85 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 650 கிலோவும், கடலாடி தாலுகா வில் 3 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 850 கிலோவும், திருவாடானை தாலுகாவில் உள்ள 34 பள்ளி வாசல்களுக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட் டுள்ளது.

பரமக்குடி

இதேபோல பரமக்குடி தாலுகாவில் 22 பள்ளிவாசல் களுக்கு 61 ஆயிரத்து 350 கிலோவும், முதுகுளத்தூர் தாலுகாவில் 18 பள்ளி வாசல் களுக்கு 1 லட்சத்து 42 ஆயி ரத்து 800 கிலோவும், கமுதி தாலுகாவில் 13 பள்ளி வாசல் களுக்கு 24 ஆயிரத்து 150 கிலோவும், ராமேசுவரம் தாலுகாவில் 5 பள்ளி வாசல் களுக்கு 8 ஆயிரத்து 550 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி னார்.