Saturday, August 25, 2007

ஷார்ஜாவில் முதுகுளத்தூர் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்



ஷார்ஜாவில் முதுகுளத்தூர் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்

ஷார்ஜா பலுதியா கேம்பில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் 24 ஆகஸ்ட் 2007 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுக்கைக்குப் பின்னர் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முஹம்மதலி, முஹம்மது பாரூக், இப்னு சிக்கந்தர், முஹம்மது ஹிதாயத்துல்லா, அஹமது இம்தாதுல்லா, அமீன், முஹம்மது ரிஸ்வி, முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் நோன்புப் பெருநாளையடுத்து வரும் விடுமுறை தினம் அன்று துபாய் மம்சார் பூங்காவில் அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை 31 ஆகஸ்ட் 2007 அன்று அபுதாபியில் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஜமாஅத்தார்களை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்

நீடூர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை இமாம்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், நீடூர் நெய்வாசல் ஜாமி ஆ மிஸ்பாஹ¤ல் ஹ¤தா அரபிக் கல்லூரி 61 வது ஆண்டு மவ்லலி ஆலிம் மிஸ்பாஹி மற்றும் மவ்லவி ஆலிம் பாஜில் பாகவி மிஸ்பாஹி பட்டமளிப்பு விழா 26.08.2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இவ்விழாவில் நமதூரைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர், கவிக்கோ அப்துல் ரகுமான், தொண்டி முஹம்மத் முஸ்தபா ஆலிம், நீடூர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது இஸ்மாயில் பாகவி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

அரபிக்கல்லூரி தலைவர் வழக்கறிஞர் அலஹாஜ் ஏ.எம். சயீத் தலைமை தாங்கி துவக்கவுரை நிகழ்த்துகிறார்.

இவ்விழாவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மெளலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிமும் பங்கேற்க சென்றுள்ளார்.