Tuesday, October 7, 2008

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் ( State Bank Of India ) திங்கட்கிழமை ( 06 அக்டோபர் 2008 ) அன்று காலை முதல் பி.எஸ்.என்.எல். டவர் இணைப்பு தொடர்பு கிடைக்காததால் வங்கிப் பணிகள் முடங்கி விட்டன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடிக்க முடியாமலும், செலுத்த முடியாமலும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக கிளை மேலாளர் எஸ். முத்துராமன் அவர்கள் கூறுகையில் பி.எஸ்.என்.எல். இணைப்பு கிடைக்காததால் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இயலவில்லை எனத் தெரிவித்தார். தொலைத்தொடர்பு ஊழியர்கள் இணைப்பு கிடைக்க பெரிதும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு பெரிதும் வருந்துவதாகக் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள் முதுகுளத்தூர் மட்டுமன்றி முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் வந்து காலை முதல் காத்திருக்கின்றனர். கடும் வெயில் மற்றும் மின்வெட்டு இவற்றுக்கிடையே தாங்கள் போட்ட பணத்தை எடுக்க தலைவிதி எனக் காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாக பெண்கள் மற்றும் முதியோர் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழாவண்ணம் தொலைத்தொடர்பு மற்றும் வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.