ரத்த தான முகாம்
ராமநாதபுரம், செப். 24: முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடந்தது.
கீழத்தூவல் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம், முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு முதல்வர் எஸ். கோவிந்தராஜன் தலைமையும், தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் முன்னிலையும் வகித்தனர். திட்ட அலுவலர் கே. மலர்விழி வரவேற்றார். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் சகாய் ஸ்டீபன்ராஜ், மருத்துவர் ராஜரெத்தினம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். பேராசிரியர் எஸ். மாடசாமி நன்றி கூறினார்.
Thursday, September 25, 2008
Subscribe to:
Posts (Atom)