Monday, August 18, 2008

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


முதுகுளத்தூர், ஆக. 17: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், அபிராமம் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, நர்சரி பள்ளி ஆகியவற்றில் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ. ஷாஜகான் தலைமையில், கல்விக்குழுத் தலைவர் எஸ். திவான் முன்னிலையில், தாளாளர்கள் எஸ். கமால்நாசர், சீனி முகம்மது ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.

தலைமை ஆசிரியர்கள் ஓ.ஏ. முகம்மது சுலைமான், காதர்சா, விக்டோரியா உள்ளிட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நர்சரி பள்ளி, கண்ணா நர்சரி பள்ளி, ஊ.ஒ.பள்ளி, அரசுத் தொழிற்பயிற்சி நிலையம், சோணை-மீனாள் கல்லூரி ஆகியவற்றில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூர் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் பாக்கியநாதன் தலைமையில், தாளாளர் எஸ். அப்துல்காதர் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ். பசீர் அகம்மது தலைமையில், தாளாளர் ஏ. முகம்மது இத்ரீஸ் கொடி ஏற்றி வைத்தார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரியர், ஆசிரியைகள் பலரும் பேசினர். சாரணர் மாணவர்கள் 8 பேருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

அபிராமம் வி.என்.எஸ்.உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, பேட்டை நடுநிலைப் பள்ளி, நத்தம் துவக்கப் பள்ளி, ஊ.ஒ.பள்ளி ஆகியவற்றில் கொடி ஏற்றப்பட்டது.

வலையபூக்குளம் கே.வி.சாலா நடுநிலைப் பள்ளி, நீராவி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, மண்டலமாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, பம்மனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி, பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி ஆகியவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ராமசாமிபட்டி உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஊராட்சித் தலைவர் பத்மாவதி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சி. சோலையப்பன், பிரமுகர்கள் ஏ. பாம்புலு, சி. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இடைச்சூரணி ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துமுருகன் தலைமையில், ஊராட்சித் தலைவர் காளிமுத்துவும், பாப்பணம் ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமையில், ஊராட்சித் தலைவர் மாரியும் கொடி ஏற்றினர்.

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்


சென்னை, ஆக.18-

வெளிநாடு வாழ் இந்தியர் தினவிழா முதன் முதலாக சென்னையில் 2009 ஜனவரியில் நடக்கிறது. இதில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் விழா

ஒரு வெளிநாட்டினராக தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மாகாந்தி 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நாடு திரும்பினார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ந் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கப்பூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

7-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின விழாவை முதன் முதலாக சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த விழா 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு விழாவை முறைப்படி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இணையதளம்

9-ந் தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கலந்து கொள்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் சிறந்த பங்காற்றிய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கி கவுரவிக்கிறார். வெளிநாடுவாழ் இந்தியர் நல அமைச்சகத்துடன், தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறது.

கண்காட்சிகளும், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்களும் நடத்தப்பட உள்ளன. விழாவில் பங்கேற்கும் உயர்நிலை குழுவினரை திருப்பதி, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பிரத்யேகமாக இணையதளம் ஒன்று(ஷ்ஷ்ஷ்.ஜீதீதீவீஸீபீவீணீ.ஷீக்ஷீரீ) வரும் 21-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. விழா குறித்த அனைத்து தகவல்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432782&disdate=8/18/2008&advt=2