Friday, July 4, 2008

முதுகுளத்தூரில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா.

முதுகுளத்தூரில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா.

நமது நகரில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் அர்ப்பணிப்பு விழா 28-06-2008 அன்று மாலை 6 மணியளவில் தேரிருவேலி முக்குரோடு வேன் ஸ்டாண்ட் திடலில் நடைபெற உள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் M.வாவா ராவுத்தர் கூறுகையில்....நமது நகர மக்கள் அவசர காலங்களில் மற்றும் பிரசவ நேரங்களில் வாகனங்கள் கிடைக்கமால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு நேரங்களில் காலதாமதாகவே ஆஸ்பத்திக்கு செல்லும் நிலையுள்ளது. இதனால் சொல்லமுடியாத பலதுயங்கரளுக்கு ஆளாகின்றனர்.அதுபோல் இறந்தவர்களின் உடலை பாதுகாக்க பிரிஜர் பாக்ஸ் அவசியமானதகும். இவைகளுக்கெல்லாம் நாம் பரமக்குடி போன்ற பக்கத்து ஊர்களையே நம்பியுள்ளோம்.

எனவே தமுமுகவின் சார்பில் வசூலித்து குறைந்த கட்டணத்தில் அனைவரும் பலன் பெரும் வகையில் ஆம்புலன்ஸ் மற்றும் பிரிஜர் பாக்ஸ் அர்ப்பணிக்க உள்ளோம்.28-06-08 அன்று மாலை 6 மணியளவில் மூன்று MLAக்களின் வாழ்த்துரையுடன்,மூன்று ஜமாத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் வக்பு வாரியத்தலைவர்,எங்கள் இயக்கச் செயலாளர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை வழங்கிறார்.

ஏழைகளுக்கு மிகவும் சலுகை கட்டணத்திலும், அவசர விபத்து மற்றும் முக்கிய நேரங்களில் சேவை செய்யவும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என்று தகவலை கூறினார்.

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் வஃபாத்தானதையடுத்து 27-06-08 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் யாசின் ஓதி துஆ செய்யப்படது.

இந்நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.