Thursday, April 29, 2010

பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?

பழங்களை எப்போது, எப்படி உண்ண வேண்டும்?

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்ப தில்லை.
பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட் டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.

பழங்களை எப்படி, எப்போது உண்ண வேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன?
நாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம் பழம், பப்பாசி பழம் அல்லது ஆப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு வேளைக்குப் பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது.
பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.
நீங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டுப் பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக் கூடும். ஆனால், அப்பழத்துண்டு அவ்வாறு செல்ல முடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில், பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு சமபாடடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். அதாவது பாண் துண்� �ு சமபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத் துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.
நீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகி விடும்.
Article taken from முத்துப்பேட்டை - http://muthupet.org
URL to article: http://muthupet.org/?p=4465

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்

நீங்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவரா? அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதில் குழப்பமா? இதற்கு www.pallikalvi.in என்ற இணைய தளம் வழி காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், அங்கு வழங்கப்படும் படிப்புகள், கல்விக் கடன் பெற தகுதிகள், எவ்வளவு கடன் கொடுப்பார்கள்? தேவையான ஆவணங்கள், கடனை திரும்பச் செலுத்தும் காலம், வங்கி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த இணைய தளம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. +2 படித்த மாணவ, மாணவிகள் இந்த இணைய தளத்தில் உள்ள தகவல்களை படித்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலேமே!

-ரிஃபா

Source (செய்தி வெளியீடு):
உணர்வு வார இதழ்
ஏப்ரல் 23-29, 2010 / பக்கம் 7

Friday, April 23, 2010

Learn Arabic: Numbers 1 to 20.

Learn Arabic: Numbers 1 to 20.
0. Sifr
1. waaHid
2. itneyn
3. talatta
4. arbaAha
5. khamsa
6. sita
7. sabAHa
8. tamanya
9. tisAHa
10. AHshra
11. hedaa-shar
12. itnaa-shar
13. taltaa-shar
14. arbaAHtaa-shar
15. khamastaa-shar
16. sittaa-shar
17. sabaAHtaa-shar
18. tamantaa-shar
19. tisaAHtaa-shar
20. AHishriin
--

Wednesday, April 21, 2010

கோடை காலமும், குழந்தை பாரமரிப்பும்

கோடை காலமும், குழந்தை பாரமரிப்பும்

டாக்டர். க. இராஜேந்திரன்

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் குழந்தைகளை எவ்வகையான நோய்கள் பாதிக்கும்? அதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வது எப்படி? என்பது பற்றி இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன். படியுங்கள்! பயன்பெறுங்கள்!



கோடை வெயில் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளின் வெப்பம் தாங்கும் தன்மை பெரியவர்களை விட குறைவு. குழந்தைகளின் வியர்வை சுரக்கும் தன்மையும் குறைவு. குழந்தைகளின் உடம்பு பரப்பளவு அதிகமாதலால் அதிகமான வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. மேற் சொன்ன காரணங்களால் கடுமையான வெயிலால் பல பாதிப்புகள் ஏற்படலாம்.



1. வெப்பத்தினால் கெண்டைக்கால் இழுத்துப் பிடித்தல்
இதற்கு உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ். திரவம்) மெதுவாக காலை நீட்டி மடக்குதல் முதலுதவி சிகிச்சை ஆகும்.


2. வெப்பத்தால் மயக்கம், தலை சுற்றல் - நீண்ட நேர பயிற்சியால் இது ஏற்படலாம்.
இதற்கு நீராகாரம் குடித்தல், குளிர்ச்சியான சுற்றுச்சூழலில் படுக்க வைத்தல் ஆகியவை முதலுதவி சிகிச்சை ஆகும்.


3. வெப்பத்தால் நீர் கட்டுதல்
இதன் அறிகுறி - வெப்பத்தில் இருக்கும்போது கை, கால் வீக்கம் வருதல் குளிர்ச்சியான சுற்றுச்சூழல் இதற்கு சிறந்ததாகும்.



4. மிதமான வெப்பம் தாக்கல் (99 டிகிரி - 104 டிகிரி பாரன்ஹீட் அளவு):
இதற்கு தலைவலி, வாந்தி, தலைசுற்றல், வலுவிழத்தல், மயிர்கூச்செரிதல் போன்ற அறிகுறி ஏற்படும்.



குளிர்ச்சியான சுற்றுச் சூழலில் வைத்தல், காற்றாடி அல்லது குளிர்சாதனம் செய்யப்பட்ட அறையில் வைத்தல், அதிகப்படியான உடைகளை அகற்றுதல், உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ்) கொடுப்பது இதற்கு சிகிச்சை முறையாகும். உடனடியாக மருத்தவரை அணுகுவது நல்லது.


கடுமையான கோடை வெப்ப தாக்குதலை தடுக்கும் முறைகள்:
குழந்தைகள் விளையாடும் நேரம் அல்லது வெளியில் செல்லும் நேரத்தை காலை அல்லது மாலை நேரங்களில் வைத்துக்கொள்ளலாம்.



உடம்பில் குறைந்த நீர்சத்தை சமன் செய்ய போதிய அளவு நீர் உலக சுகாதார உப்பு சர்க்கரை நீர்: இளநீர் பழச்சாறு போன்றவைகளை விளையாடும்போது அல்லது பயிற்சி செய்யும் முன்பும் மற்றும் பின்பும் குடித்தல், குளிர்ச்சியான நீர் அல்லது சுற்றுசூழல் பருத்தி துணிகளை அணிதல் சிறந்தது.


கோடை காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள் எவை?
கோடையில் வரும் நோய்:
1. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு
2. சின்னம்மை
3. மணல்வாரி அம்மை
4. நீர்க்காமாலை
5. வியர்க்குரு


வாந்தி - வயிற்றுப்போக்கு
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வர முதல் காரணம் சுத்தப்படுத்தப்படாத நீரைக் குடித்தல், ஈ மொய்க்கும் பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் காரணமாகும்.


நீர் சத்து குறைதலின் அறிகுறிகள்
படபடப்புடன் இருத்தல், அதிகப்படியான தாகம், சிறுநீர் குறைதல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் உலர்ந்து இருத்தல், குழந்தையின் எடை குறைதல், இருதய துடிப்பு அதிகமாதல் ஆகிய அறிகுறிகள் தெரிய வரும்.
வயிற்றுப்போக்குடன் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தொடர்ந்து உணவு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைவயிற்று போக்கின் போது ஈடுசெய்ய வழக்கமாக கொடுப்பவற்றைவிட அதிகப்படியான நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான நீர் ஆகாரம் என்பது உலக சுகாதார அமைப்பு சர்க்கரை கரைசல் நீர், சாதாரண தண்ணீர், அரிசி கஞ்சி, தயிர்.
இரண்டு வயதுக்கு குறைவாக 50-100 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப்போக்கின் போதும் ) கொடுக்க வேண்டும்.
இரண்டு வயதுக்கு மேல் இருந்தால் 100-200 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப் போக்கின் போதும்) கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவரை அணுகுவது நல்லது.


நீர்சத்து குறைந்தால்
வயிற்றுப்போக்குடன் மிதமான நீர்ச்சத்து குறைந்தால் மேற்சொன்ன முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
வயிற்றுப் போக்குடன் அதிகமா நீர்ச்சத்து குறைந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதுவரை மேற்சொன்ன முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


சின்னம்மை
சின்னம்மை என்றால் என்ன?
வரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் (விஜெட்வி) எனும் கிருமிகள் முதன் முதலாக வெளிப்படுத்தப்படுவதால் ஏற்படும் ஒரு வைரஸ் நோய் இது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் மூலம் இந்நோயை கண்டுபிடிக்கலாம்.
சின்னம்மையின் அறிகுறிகள் என்ன?
பொதுவான அறிகுறிகள் ஜூரம், குளிர் நடுக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். வெளிப்படையாக இது தெரியும். நன்கு அறியப்பட்ட அறிகுறி ரணமாக மற்றும் அதிக அரிப்பு உள்ள கொப்புளங்களாக தோன்றும். பெரும்பாலான குழந்தைகளுக்கு 200-300 காயங்கள் இருக்கும். பின்னர் இது பொருக்காக மாறுகிறது.
சின்னம்மை பரவக்கூடியதா?
ஆம். பரவக்கூடியது. கொப்புளங்கள் வெளி வந்த சில தினங்களுக்கு முன்பு எல்லா காயங்கள் மீதும் பொருக்குத் தட்டும் வரை சின்னம்மை மிகவும் தொற்றிப் பரவும் நோய். அதாவது அவைகள் உலரும் வரை இது வழக்கமாக கொப்புளங்கள், வெளிவர ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் ஏற்படும். பொதுவாக இந்த வைரஸ் கிருமிகள் காற்றினால் எடுத்து செல்லப்படும் நீர்த்துளிகளால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர் சுற்றி இருக்கும் காற்றில் இருமினாலோ அல்லது தும்மினாலோ மற்றும் திரவங்களை வெளியிடுவதன் மூலம் இது நேரிடுகிறது.


மேலும், சின்னம்மை அல்லது ஹர்பிஸ் உள்ளவர்களுடன் நேரடி தொடர்பினாலும் இது பரவலாம். ஏனெனில் ஈரமாக உள்ள காயங்களில் தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பமாக உள்ள தாயிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் உஅல்லது பிறந்த குழந்தைக்கும் பரவக்கூடும்.


இந்த வைரஸ் கிருமி யாரை அதிகம் பாதிக்கும்?


சின்னம்மை குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் ஆண், பெண் என பாதிக்ககூடியது. பெரும்பாலானவர்க்கு சிறு பிராயத்தில் அல்லது எப்போதாவது சின்னம்மை வருகிறது. ஆனால் முன்பே பாதிக்கப்படாத சின்னம்மை உள்ளவருடன் தொடர்பு கொள்ளும்போது தொற்று பாதிக்கப்பட்டு குழந்தைகளை பாதிப்பபதால் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துபவர்கள் போன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பவர்களை சின்னம்மை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


அத்துடன் ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பவர்கள் (மருத்துவர்கள், நர்ஸ், மருத்துவமனை ஊழியர்கள்) தொற்று பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையை செய்யும்போது பாதிக்கபட்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். குழந்தை பிராயத்தில் சின்னம்மை வராத பெரியவர்களுக்கு இப்போது அது வந்தால் மிகவும் கடுமையாக விளங்கக்கூடும்.


குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கு வரும் சின்னம்மை வேறுபட்டதா?


குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கும் வரும் சின்னம்மை கடுமையாக இருக்கும். ஜூரம் அதிகமாகவும், நீண்ட காலத்திற்கும் இருக்கும். கொப்புளங்கள் அதிகமாகவும், ஆழமாகவும், அதிக தழும்புடனும் இருக்கும். வாழ்க்கைமயின் பிற்காலத்தில் சின்னம்மை வந்தால் சிக்கல்கள் மற்றும் உயிருக்கு அபாயம் இருக்கும்.


தடுப்பது எப்படி?
சின்னம்மை வருவதை எவ்வாறு தடுப்பது?
தொற்று பாதிக்கப்பட்டவர்களை பள்ளி அல்லது வேலை இடங்களில் தனித்து வைப்பதன் மூலம் இந்த வரைஸ் நுண் கிருமி பரவுவதை குறைக்க உதவும். சின்னம்மையால் அவதிப்படுவதை தவிர்க்க தடுப்பூசி திறன் மிக்க வழியாகும்.


தடுப்பூசி போட்டபின் சின்னம்மை வர வாய்ப்பு உள்ளதா?


தற்போது கிடைக்கும் வரிசெல்லா தடுப்பூசிகளின் மருத்துவ ஆய்வுகள் அவை சாதாரண சின்னம்மைக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீதம் பயனுள்ளதாகவும், நல்ல சகிப்பு தன்மை உடையதாகவும் காட்டுகிறது. ஆனால் தடுப்பூசி பெற்றவர்களின் 1-4 சதவீதத்தினருக்கு தீவிரமற்ற இந்நோய் வரும் அறிகுறிகள் வந்திருப்பதாக இந்த தடுப்பூசியின் நீண்ட கால பாலோ அப் தெரிவிக்கிறது.


சுருக்கமாக சொன்னால் அந்தந்த வயதுகளில் தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும். பாதுகாக்கப்ப்ட்ட குடிநீர் மற்றும சுகாதாரமான வகையில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் குழந்தைகளை விளையாட மற்றும் வெளியில் கூட்டச் செல்லக்கூடாது.


மேற்சொன்ன முறைகளை கையாண்டால் கோடை காலத்தை இனிமையாகக் கழிக்கலாம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

Monday, April 19, 2010

முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து

முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து


http://www.mudukulathur.com/mmjamath.asp

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் மூலம் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதுகுளத்தூர்.காம் இணையதளம் இயங்கும் நற்செய்தி அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி, ஒரு கைக்குள் அடக்கம் என்று சொல்லும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

அறிவியலால் வரும் பயன்களை முதுகுளத்தூர் ஜமாத்தினர் பயன்படுத்தித் தங்கள் ஊரின் சிறப்பை உலக அரங்கில் உயர்த்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

தமிழக முஸ்லிம் சமுதாய வரலாற்றில் முதுகுளத்தூருக்குத் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களுடன் இணைந்து, கடல் கடந்து சென்று நிதி திரட்டி, தமிழகத்தில் உயர்கல்விக் கூடங்களுக்கு உதவியவர்கள் இந்நகரச் சான்றோர். பர்மா, சிங்கை, மலேசியா நாடுகளில் உழைக்கச் சென்று தங்களையும் உயர்த்தி, தங்களின் ஊரின் பெருமையையும் உயர்த்தி யுள்ள உயர்ந்த நன் மக்கள் நிறைந்த பேரூர் முதுகுளத்தூர்.

இந்த ஊரில் அன்றாடம் நடைபெறும் அரிய பெரிய நிகழ்வுகளை இப்பொழுது உலகம் முழுவதுக்கும் தெரிவிக்கும் சாதனமாக முதுகுளத்தூர்.காம் இணையதளம் விளங்குகிறது என்று அறிய பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

எல்லா வகையிலும் முன்மாதிரியாக இலங்கிட என் இதய வாழ்த்துக்கள்

தங்கள் அன்பன்
பேரா. கே.எம். காதர் மொகிதீன்

துபை
15-04-2010

Sunday, April 18, 2010

தாய் சேய் நலம் - டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ

தாய் சேய் நலம் - டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ

From: muthu mohamed
Date: 2010/4/8
Cc: kbalakumari@yahoo.co.in


அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு, எங்களது மருத்துவமனையின் டைரக்டர்
திருமதி.டாக்டர் க.பாலகுமாரி எம்.டி;டி.ஜி.ஒ; அவர்கள் சென்னை

வளர்வேளச்சேரி என்ற பத்திரிக்கையில் (மார்ச் 2010 ) தாய்சேய் நலம் , மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல் எழுதிய கட்டுரை.

http://www.mudukulathur.com/medicaldetails.asp?id=260


படிப்பதற்கு, பயணத்திற்கு,வீடு கட்ட,திருமணத்திற்கு
என எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம்.ஆனால் கர்ப்பம்
தரிப்பதற்கு திட்டமிட்டு செய்கிறோமா?. நூற்றுக்கு 98 சதவீதம் மக்கள் திட்டமிடாமல்தான் கர்ப்பம் தரிக்கின்றனர்.

திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது என்றால் என்ன ?
எதற்கெல்லாம் திட்டமிட வேண்டும் ?

முதலில் வயது;
21 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வது நல்லது. 18 வயதில் கல்யாணம் செய்து
கொண்டால் கூட ஒரு சில வருடங்கள் தள்ளிப்போடுவது
நல்லது.அதே போல் 35 வயதிற்குள் குழந்தைகளை பெற்று
முடிப்பது நல்லது.

சிறிய வயதில் கர்ப்பம் தரித்தால், தாயே இன்னும்
முழு வளர்ச்சி அடைந்திருக்க மாட்டார். போதிய மனப்பக்குவம் இருக்காது.



இரண்டாவதாக யோசிக்க வேண்டிய விஷயம், எடை .

எடை 18 வயதிற்கு மேல்,உயரத்திற்கு ஏற்றவாறு
இருக்க வேண்டும்.வயது ஏற ஏற எடை ஏறக்கூடாது.

உயரத்திற்கு ஏற்ற எடையை எவ்வாறு கணிப்பது
இதனை BMI என்ற அலகு மூலம் கணிக்கவும்.

BMI = BODY MASS INDEX.

எடை = கிலோகிராமில்
உயரம் =மீட்டரில்
BMI = 20 -23 சரியான எடை
BMI = 19 க்கு கீழ் குறைவான எடை நோஞ்சான்
BMI = 24 - 30 சற்று அதிக எடை
BMI = 31 க்கு மேல் குண்டு.

கர்ப்பம் தரிக்கும் போது BMI 20 - 23 இருப்பது நல்லது.
BMI 19 க்கு கீழ் இருந்தால் சற்று நன்றாக சாப்பிட்டு
உடம்பைத் தேற்றிய பிறகு கர்ப்பம் ஆவது நல்லது.
அதிக எடை , குண்டாக இருப்பவர்கள்,
உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி செய்து எடையை
குறைத்துக்கொள்வது நல்லது.

நிறைய பேர் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது
என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். கட்டாயம்
உடற்பயிற்சி செய்யலாம் .செய்வது நல்லது.


மூன்றாவது.
இரத்தபரிசோதனைகள்

HEMOGLOBIN ஹீமோகுளோபின் -
உடம்பில் இரத்தம் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து கொள்ள
வேண்டும். பொதுவாக 12 -14 கிராம்ஸ் இருக்க
வேண்டும். குறைந்தபட்சம் 10 கிராம் இருக்க வேண்டும். அதற்கும் கீழே இருந்தால்,இரும்புச்சத்து
மாத்திரைகள்,சரியான உணவு சாப்பிட்டு இரத்த
அளவை சரியான அளவுக்கு கொண்டு வந்தபின்
கர்ப்பம் ஆவது நல்லது. இரத்த சோகையுடன்
கரு தரித்தால்,கருச்சிதைவு, குறைப்பிரசவம், குறைந்த
எடையுள்ள குழந்தை போன்ற பிரச்சனைகள் வர
வாய்ப்புள்ளது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு

சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கருச்சிதைவு,
குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.
இப்பொழுது உணவு முறைமாற்றங்கள், வாழ்க்கை
முறைமாற்றங்கள் சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வர ஆரம்பித்துள்ளது எனவே அனைவரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தைராய்டு பிரச்சனை
இதுவும் நம் ஊரில் அதிகம் காணப்படும்
பிரச்சனை. பரிசோதனை செய்து கொண்டு கர்ப்பம் தரிப்பது நல்லது.


நான்காவது.

தடுப்பு ஊசிகள்;

MMR, CHICKEN BOX, HEPT B, தட்டம்மை,புட்டம்மை,
ருபெல்லா அம்மை, சின்னம்மை, B Type மஞ்சள்
காமாலை வராமல் தடுக்க ஏற்கனவே தடுப்பூசி
போடவில்லை என்றால் போட்டுக்கொள்வது நல்லது.
இப்பொழுது கருப்பை புற்று நோய் வராமல்
தடுக்கவும் ஊசி உள்ளது. அதுவும் போட்டுக்கொண்டால் நல்லது.

ஐந்தாவது .

எந்த மாதத்தில் குழந்தை பிறக்க வேண்டும், வேண்டாம் என்று திட்டமிடுதல்.

தீட்டு வந்த தேதியில் இருந்து 280 நாட்கள்
( அதாவது 40 வாரங்கள் அல்லது 9 மாதம் + 10 நாட்கள் ) கழித்து குழந்தை பிறக்கும் .இதை உபயோகித்து எப்பொழுது வேண்டும் அல்லது
வேண்டாம் என்று கண்க்கிட்டு கர்ப்பம் தரிக்க
முயற்சிக்கலாம் அல்லது தள்ளிப்போட தடுப்பு முறைகள் உபயோகிக்கலாம்.


ஆறாவது.

போலிக் ஆசிட் மாத்திரைகள்.

FOLICACID குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில்
குறைகள் ஏற்படாமல் இருப்பதற்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனை கருதரிக்கும்
முன்பிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.




தட்டச்சில் உதவி :
எம்.எஸ். முத்து முஹம்மது
msmuthumohamed@yahoo.co.in

www.mudukulathur.com

Tuesday, April 13, 2010

MUDUKULATHUR MUSLIM WELFARE ASSOCIATION

MUDUKULATHUR MUSLIM WELFARE ASSOCIATION
85,SOUTH COOUVAM ROAD,
PUDUPET, CHENNAI-600 002.


A.ABDUL KUDDUSE PRESIDENT 94441 62065.
M.S.MUTHU MOHAMED VICE PRESIDENT.94441 74904
A.NAZEEM AHMADSECERETARY94441 23975
V.M.K.S.SHAHUL HAMEED SAITTRUESERER94452 10787.
V.KAMAL NASSERASST.SECERETARY99400 87771


EXECUTIVE MEMBERS.

P.MEERA MOHIDEEN 98410 75079.
O.R.M.ISMOIL94442 23068
V.PEER MOHAMAMMED99400 08790
S.K.GULAM DASTHGIR94442 28621
M.JALALUDEEN988846 36922
S.ABDUL RAHMAN93845 34545
O.P.S.ISMOIL98441 80797.


ENQUIRY
MEERA MYDEEN94444 88780

THESE PEOPLES ARE OFFICE BEARERS OF THIS YEAR.

ACTIVITIES;

FIRST MARK MUSLIM IN MUSLIM SCHOOL MUDUKULATHUR.
PLUS 2, UNDER GRADUATE AND POST GRADUATE GRANT OF
RS.10 000 RESPECTIVELY EVERY YEAR.THE COMMITTEE WILL VERIFY THE RIGHT CANDIDATE

THIS FOR YOUR INFOMATION

Message From
MS MUTHU MOHAMED
msmuthumohamed@yahoo.co.in

Monday, April 5, 2010

முரண்பாடுகள்.-வைரமுத்து

முரண்பாடுகள்.-வைரமுத்து

by Tamilzhan on Fri Sep 11, 2009 2:22 am

முரண்பாடுகள்.-வைரமுத்து


போதிமரம் போதும்
புத்தனைப் புதைத்துவிடு

கொடிகள் காப்பாற்று
தேசத்துக்குத் தீயிடு

சின்னங்கள் முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு

கவிஞனுக்குச் சிலை
கவிதைக்குக் கல்லறை

உரைபோதும் பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்குக் குப்பைக்கூடை

கற்றது மற
பட்டத்துக்குச் சட்டமிடு

பெட்டி தொலைத்துவிடு
சாவிபத்திரம்

தலைவனைப் பலியிடு
பாதுகை வழிபடு


அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு

பத்தினிக்கு உதை
படத்துக்குப் பூ

காதல் கவியெழுத
காமம் நாமெழுத

கற்பு முக்கியம்
கருவைக் கலை

பசியை விடு
கடிகாரம் பார்த்துண்

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களைக் கொன்றுவிடு

முரண்பாடே நடைமுறையாய்
நடைமுறையே முரண்பாடாய்ச்
சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
முரண்பாடெனக்குள் யாதென்று
மூளைபுரட்டி யோசித்தேன்

மிருகத்தைக் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன்