Tuesday, January 13, 2009

கலைஞர் அவர்கட்கு வாழ்த்து

இடைத்தேர்தல் வெற்றி களிப்பு;
இனிய பொங்கல் அன்பளிப்பு
உடைத்துக் கொண்டு போனவர்கள் எங்கே?
உட்கார்ந்து விட்டனர் அங்கே
"கை கொடுப்பது கை மட்டுமே" என்று
கவிநயமாய் நன்றி கூறிய கலைஞரே..!
கைமாறு கருதாமல் தோழமை உணர்வோடு
களப்பணியாற்றி வெற்றி கனி பறிக்க
உறுதுணையாய் என்றுமே கூட்டணியில்
உங்களோடு தோள் கொடுக்கும்
சிறுபான்மையின மக்களை மறக்க வேண்டா;
"சிதறாமல் வாக்களிப்பவர்கள்" மறுக்க வேண்டா.!
மதமாற்று தடைச்சட்டம் நீக்கியதால்
மதம் கொண்ட யானைகளை அடக்கினீர்;
மதுவை ஒழித்திடச் சட்டம் தருக;
மண்ணுலகம் நிலைக்கும் வரை புகழ் பெறுக..!!

_"kavianban" KALAM
shaickkalam@yahoo.com