Friday, March 13, 2009

மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர் பணியிடம்

மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர் பணியிடம்


ராமநாதபுரம், மார்ச்.13-

ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர் பணியிடத்திற்கு விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திராவில் தேசிய சேவை தொண்டர்களாக பணிபுரிய ஆண்கள்- பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களை அமைப்பது, வழிநடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். முதலில் ஓராண்டு காலத்திற்கு பணியில் அமர்த்தப்பட்டு பின்னர் பணி திறன் வயது, சேவை போன்றவற்றின் அடிப்படையில் மேலும் ஓராண்டிற்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

இளங்கலை பட்டம் மற்றும் 3 வருட டிப்ளமோ முடித்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பை சேர்ந்த 1-4-84க்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த 1-4-81க்கு பிறகு பிறந்த ஆண்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெற்று அனைத்து வகுப்பை சேர்ந்த 1-4-81க்கு பிறந்த பெண்கள் இந்த பணிக்கு தகுதி உடையவர்கள். மேலும் இளைஞர் மகளிர் மன்ற உறுப்பினார்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி., விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வருகிற 31-ந்தேதிக்குள்

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு உதவித் தொகை மற்றும் பயணப்படியாக மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெயர், தந்தை/ கணவரின் பெயர் முழு முகவரி, பிறந்த தேதி, வயது, இனம், கல்வித்தகுதி, பாஸ்போர்ட் புகைப்படத்துடன், சான்றிதழ் நகல்களுடன் மற்றும் பிற விவரங்களுடன் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் நேரு யுவகேந்திரா, 1/372 பாரதி நகர், ராமநாதபுரம்-3 என்ற முகவரிக்கு விண்ணபிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருகிற 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.