Thursday, January 15, 2009

பட்டம் விடும் திருவிழா: குஜராத்தில் 500 பறவைகள் காயம்

பட்டம் விடும் திருவிழா: குஜராத்தில் 500 பறவைகள் காயம்


அகமதாபாத், ஜன.16-

மகர சங்கராந்தி விழாவையொட்டி நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் முழுவதும் பட்டம் விடும் விழா நடந்தது. அப்போது, பட்டத்தின் நூலில் சிக்கி நூற்றுக்கும் மேலான பறவைகள் காயமடைந்தன. மேலும் வெளிநாட்டிலிருந்து இடப்பெயர்ந்த வல்லூறு, ஆந்தை மற்றும் உள்நாட்டு புறாக்கள், கழுகுகள் போன்ற ஏராளமான பறவைகள் பட்டத்தின் நூலால் அறுக்கப்பட்டு செத்தும் போயின.

இது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஹர்மீஷ் மேத்தா கூறுகையில், `பறவைகள் காயமடைந்ததாக 155 போன் அழைப்புகள் எங்களுக்கு வந்தன. நாங்களும் காயமடைந்த 120 பறவைகளை கைப்பற்றி அவற்றுக்கு சிகிச்சை அளித்தோம். குஜராத்தில், இந்த ஆண்டு பட்டம் விடும் திருவிழா காரணமாக 500-க்கும் மேற்பட்ட பறவைகள் காயமடைந்துள்ளன' என்று கவலை தெரிவித்தார்.