Tuesday, December 30, 2008

20 பைசாவில் உள்ளூர் அழைப்பு: வோடபோன் புதிய திட்டம்

20 பைசாவில் உள்ளூர் அழைப்பு: வோடபோன் புதிய திட்டம்


சென்னை, டிச. 29: வாடிக்கையாளர்கள் 20 பைசா கட்டணத்தில் உள்ளூர் அழைப்புகள் மேற்கொள்ளும் விதமாக வோடபோன் நிறுவனம் புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது.

"பிரெண்ட்ஸ் சர்க்கிள்' என்ற இத் திட்டத்தில் அதிகபட்சம் 5 உள்ளூர் வோடபோன் எண்களை வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதில் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் 20 பைசா கட்டணம்.

இச் சலுகைக்கு போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.15-ம், பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.10-ம் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படும். இவ்வாறு சேர்க்கப்பட்ட எண்களை மாத இறுதியில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Saturday, December 27, 2008

பக்ரைனில் திறந்த வாகனங்களில் செல்ல தொழிலாளர்களுக்கு தடை

பக்ரைனில் திறந்த வாகனங்களில் செல்ல தொழிலாளர்களுக்கு தடை

பக்ரைன் நாட்டில் திறந்த கனரக வாகனங்களில் தொழிலாளர்களை வேலைக்காக அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதற்கு இந்த வாரம் முதல் பக்ரைன் அரசு தடை விதித்து இருக்கிறது.

தொழில் நிறுவனங்கள் இதுபோல் தொழிலாளர்களை அழைத்துச்செல்லக் கூடாது என்றும், மீறி அழைத்துச்சென்றால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் பக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இதுபற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொழிலாளர்களிடையே அரசு தொடங்கி இருக்கிறது. தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

சென்னை, டிச. 26: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தங்களது பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, பதிவை புதுப்பிக்காதவர்கள் 1.1.2009-ம் தேதி முதல் 31.3.2009 வரை புதுப்பிக்கலாம். தங்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், அனைத்துச் சான்றுகளின் இரண்டு நகல்கள் ஆகியவற்றுடன் ரூ. 112-க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும்.

வரைவோலையை OVERSEAS MANPOWER CORPORATION LTD என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sunday, December 21, 2008

டெல்லியில் இந்திய தூதர்கள் மாநாடு

டெல்லியில் இந்திய தூதர்கள் மாநாடு
நாளை தொடங்குகிறது


புதுடெல்லி, டிச.21-

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய நேரடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதர்களின் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டை மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார். இரண்டாவது நாளான 23-ந் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்ற இருக்கிறார். `தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும்' என்பது குறித்து இந்திய தூதர்களுக்கு இருவரும் விளக்கி கூறுவார்கள்.

இது தவிர மும்பை தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதட்டம் போன்றவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

தரமற்ற எழுத்துகள் இயற்கைக்கு செய்யும் துரோகம்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

தரமற்ற எழுத்துகள் இயற்கைக்கு செய்யும் துரோகம்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

மதுரை, டிச. 20: சமுதாயத்துக்குப் பயன்படாத வகையில் தரமற்ற எழுத்துகளைத் தாங்கிவரும் புத்தகங்கள் இயற்கைக்குச் செய்யும் துரோகம் என "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.

மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி சார்பில் சனிக்கிழமை "தேமதுரத் தமிழோசை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "நல்ல காகிதம் செய்வோம்' எனும் பொருளில் அவர் பேசியது:

தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்காக, மீண்டும் தமிழின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதான் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்.

அப்படிப்பட்ட தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ், தமிழன் என்று பேசித்திரியும் நம்மால் நூற்றாண்டு விழா எடுக்க முடியவில்லையே ஏன் என்கிற, எனது ஆதங்கத்தை எழுத்தாக கொட்டித் தீர்த்தேன். இப்போது நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. மகிழ்ச்சி, பாராட்டுகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியபோது, ஒரு நல்ல தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட வேண்டும் என்று பாண்டித்துரை தேவர் விரும்பினார்.

சங்கம் வெளிக்கொணரும் "செந்தமிழ்' பத்திரிகையில் ஒரு போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் நூறு! அப்போது தங்கம் ஒரு பவுன் ரூ.8-க்கு விற்ற காலம். புதுவையிலிருந்து கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட பாரதியின் நண்பர்கள், அவர்தான் தமிழ்த்தாய் வாழ்த்து எழுத வேண்டும் எனவும், அதற்காக அந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைத்தனர்.

ஆனால் மகாகவி சுப்பிரமணிய பாரதி அந்தப் போட்டியில் கலந்துகொள்ள மறுத்தார். ஏன் தெரியுமா? பணத்துக்காகத் தமிழை வாழ்த்துவதா? அதை நான் செய்வதாய் இல்லை என்றார் அவர்.

தமிழுக்கு நல்ல வாழ்த்து கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை எழுத வேண்டும் என பாரதியாரிடம் கேட்டுக் கொண்டதாக பாரதிதாசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாரதியாரை எழுதவைக்க சிரமப்பட்டோம் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

தரமில்லாத கவிதை தமிழ்த்தாய் வாழ்த்தாகி விடக்கூடாது என்கிற பாரதிதாசனின் வற்புறுத்தலால் எழுதப்பட்டதுதான் பாரதியின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே..' என்கிற கவிதை.

சமீபத்தில் "சாளரம்' நூல் வெளியீட்டு விழாவில் நான் நல்ல படைப்புகள் வரவேண்டும் எனக் குறிப்பிட்டேன். அடிப்படையில் புத்தகங்களை தேவையில்லாமல் வெளியிடுவதை நான் ஆதரிப்பவன் அல்ல. நல்ல படைப்புகள் வரவேண்டுமே தவிர குப்பை கூளங்கள் நூலக அலமாரிகளில் அடுக்கப்படக் கூடாது.

எழுத்தாளனைப் பொருத்தவரை எழுதுவதெல்லாம் நல்ல எழுத்தாக இருக்கலாம். ஆனால் காலத்தைக் கடந்து ஓர் எழுத்து நிற்குமானால் அதுதான் சிறந்த எழுத்து.

ஏதோ வாசித்துவிட்டு தூக்கிப்போடுவதை எல்லாம் இலக்கியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு காகிதத்துக்குப் பின்னாலும் ஒரு மரம் அழிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

நல்ல எழுத்துக்காக இயற்கை சற்று சேதப்படலாம். ஆனால் தரமற்ற படைப்புகளுக்காக இயற்கை அழிக்கப்படுவதா? நாம் நல்ல படைப்புகளை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

நாளைய தலைமுறைக்காக எழுத்து அமையுமானால் அதை நிறையவே எழுதலாம். இலக்கியம் என்பது நம்மைக் கடந்து நமது வாழ்வைக் கடந்து காணப்பட வேண்டும்.

எழுத்து நல்லதாக இருந்தால் மட்டும்தான் அதைத் தாங்கிவரும் காகிதமும் நல்லதாக அமையும். இல்லை என்றால் அதற்குப் பெயர் காகிதமல்ல, குப்பை என்றார் வைத்தியநாதன்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முகவை மன்னர் நா.குமரன்சேதுபதி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் ரா.குருசாமி, தமிழ்ச் சங்கச் செயலர் ரா.அழகுமலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கல்லூரி முதல்வர் க.சின்னப்பா வரவேற்றார். பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.

சென்னையில் ``ரெயிலே வராமல் ஒரு ரெயில்நிலையம்''

சென்னையில் ``ரெயிலே வராமல் ஒரு ரெயில்நிலையம்''
இரவில் காதலர் பூங்காவாக மாறுகிறது


சென்னை, டிச.21-

சென்னையில் ரெயிலே வராமல் ஒரு ரெயில் நிலையம் அண்ணாநகரில் உள்ளது. இரவு நேரங்களில் காதலர்களின் பூங்காவாகவும் மாறிவிடுகிறது.

அண்ணாநகர் ரெயில்நிலையம்

சென்னை பெரம்பூரில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்) உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பெட்டிகளை வெளியே அனுப்புவதற்காக வில்லிவாக்கம் - ஐ.சி.எப் இடையே 3.09 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு வருகிறது.

இந்த தண்டவாளத்தை 7.29 கோடி செலவில் பலப்படுத்தி அந்த மார்க்கத்தில் பயணிகள் ரெயில் சேவையையும் தொடங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. அந்த இடைப்பட்ட இடத்தில் பாடி, அண்ணாநகர் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு வரை ரெயில்வே பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2003-ம் ஆண்டு அப்போது மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருந்த ஏ.கே.மூர்த்தி அந்த மார்க்கத்தில் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அண்ணாநகர் ரெயில் நிலையத்தால் திருமங்கலம் சாலை, லெட்சுமிபுரம், ஐகோர்ட்டு காலனி, நாவலர் நகர், தென்றல்காலனி, முல்லை நகர், கம்பர் குடியிருப்பு, அகத்தியர் நகர், குமாரசாமி நகர், பொன்விழா நகர், லெட்சுமி தெரு உள்பட அந்த பகுதியில் இருந்தவர்கள் பயன் அடைந்தனர்.

இந்த நிலையில் பாடி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. அதை காரணம் காட்டி அண்ணாநகருக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேம்பாலப்பணிகள் முடிந்த பிறகு அண்ணாநகருக்கு ரெயில் விடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக அங்கு ரெயில் எதுவும் வருவதில்லை. ஐ.சி.எப்-ல் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகள் மட்டுமே அந்த வழியில் செல்கின்றன.

சமூக விரோத செயல்

ரெயிலே வராத அண்ணாநகர் ரெயில் நிலையம் தற்போது பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கின்றன. பகலில் மட்டும் எப்போதாவது ரெயில்வே பாதுகாப்பு போலீசார் வந்து பார்த்து விட்டு செல்வதுடன் சரி. இதன் காரணமாக அண்ணாநகர் ரெயில் நிலையம் இரவு நேரங்களில் காதலர்களின் பூங்காவாக மாறிவிடுகிறது. ஆள் அரவம் இல்லாத ஒதுக்குப்புறமாக ரெயில் நிலையம் அமைந்திருப்பது காதலர்களுக்கு வசதியாக உள்ளது.

காதலர்களை தவிர, இரவு நேரங்களில் அங்கு விபசாரமும் கொடிகட்டிப்பறப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். பகல் நேரங்களில் அந்த ரெயில் நிலையத்தில் வாலிபர்கள் மது அருந்துகிறார்கள். சமூக விரோத செயல்கள் நடைபெற்று வரும் அண்ணாநகர் ரெயில் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என்றும், கோயம்பேடு வரை ரெயில் மார்க்கத்தை நீட்டினால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரை நிறுத்தி அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர்.

நடிகர்களிடம் நாடு என்ன தெரிந்து கொள்ளப் போகிறது?: சிலம்பொலி செல்லப்பன் கேள்வி

நடிகர்களிடம் நாடு என்ன தெரிந்து கொள்ளப் போகிறது?: சிலம்பொலி செல்லப்பன் கேள்வி



சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் "திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை' என்ற நூலை சிலம்பொலி செல்லப்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் வ.உ.சி. பேரன் சிதம்பரம். உடன் (இடமிருந்து) முனைவர் இரா.குமரவேலன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ஒüவை நடராஜன், இ.சுந்தரமூர்த்தி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், முனைவர் இராம.குருநாதன்.


சென்னை, டிச. 20: அனைத்துப் பண்டிகை நாள்களிலும் தொலைக்காட்சி, வானொலியில் நாள் முழுவதும் நடிகர், நடிகைகளே ஆக்கிரமிப்பதால் நாடு அவர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்ளப் போகிறது தெரியவில்லை என்று சிலம்பொலி செல்லப்பன் கூறினார்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் சனிக்கிழமை "பாரி நிலையம்' சார்பில் வ.உ.சியின் திருக்குறள் உரை நூல் வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு அவர் பேசியது:

"நாட்டுக்கு உழைத்தவர்களை மறந்துவிடுவது வழக்கமாக உள்ளது. இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த வ.உ.சி., ""மன்னிப்பு கேட்டால் போதும், விடுதலை செய்கிறேன்'' என்ற போதும் மன்னிப்பு கேட்க மறுத்தார். மற்றவருக்கு சிறப்பான விழாக்கள் கொண்டாடும்போது வ.உ.சிக்கு விழாக்கள் இல்லை என்பது வருத்தம்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒüவை நடராஜன்: திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் உரையோடு படித்து தமிழ் மக்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்றார் வ.உ.சி.

திருக்குறளில் அறப்பால் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வ.உ.சியின் நிறைவேறாத இருபெரும் கனவான தேச விடுதலை அவர் மறைந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது; 68 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் உரை நூலும் வெளியாகியுள்ளது என்றார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி: வ.உ.சி முதலில் எழுதிய கட்டுரை கடவுளும் பக்தியும் ஆகும். வ.உ.சி என்றாலே நெற்றியில் திருநீறு அணிந்திருப்பவர்; திருக்குறளில் இடம்பெரும் கடவுள் வாழ்த்து அதிகாரம் திருவள்ளுவர் எழுதியதா? சொற்களோ பொருள் முறையோ ஐயமாக உள்ளது.

வான் சிறப்பு, நீத்தார் பிறப்பு, உரைப்பாயிரம், மெய் உணர்தல், துறவும் வள்ளுவர் எழுதியதாக இருக்காது என்று மறுக்கிறார்.

வழிவழியாக வரும் 3 அதிகாரத்தில் வ.உ.சிக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் எழுதிய திருக்குறளில் அதை நீக்க விரும்பவில்லை என்றார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பாரி நிலைய உரிமையாளர் செல்லப்பன் 60 ஆண்டு பேணி பாதுகாத்த வ.உ.சியின் கையெழுத்துப் பிரதியை அவரது மகன் முயற்சியில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.

வ.உ.சி ஆன்மிகவாதி, அரசியல்வாதி, பதிப்பாசிரியர், இதழ் ஆசிரியர், தொழிற்சங்கவாதி, கப்பல் வர்த்தகர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர் என்றார் தமிழன்பன்.

வ.உ.சி எழுதிய அமர்ஜோதி, மனம்போல வாழ்வு, அகமே புறம், வளமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம், மெய்யறிவு, மெய்யறம், தொல்காப்பியம் இளம்புராணம், சுயசரிதை, திருக்குறள், வ.உ.சி கட்டுரைகள் ஆகிய நூல்களை பாரி நிலையம் வெளியிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் செ. அமர்ஜோதி தெரிவித்தார்.

Thursday, December 11, 2008

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பரமக்குடியில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன

பரமக்குடியில் தியாகத்திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09 டிசம்பர் 2008 செவ்வாய்க்கிழமை மாலை கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் எஸ்.என்.எம். முஹம்மது யாக்கூப் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை செயலாளர் எஸ்.என்.ஏ. முஹம்மது ஈசா, மேல முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் கபூர், ரயில்வே பள்ளி தலைவர் ஆர் எஸ் ஒய். பஷீர் அஹ்மது, தெற்குப் பள்ளி தலைவர் முத்து நைனார், கொல்லம்பட்டரை ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது, பாரதி நகர் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஏ கமால், எஸ்.ஆர்.பட்டணம் ஜமாஅத் தலைவர் நைனா முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜவ்வாதுப் புலவர் மன்ற தலைவர் டபிள்யூ. நூருல் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹதிஸ் ஒப்பித்தல், திருக்குர்ஆன் மனனப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி,இறகுப் பந்து
போட்டி, இஸ்லாமியப் பாடல்கள் போட்டி உளிட்ட எட்டு போட்டிகள் பரமக்குடியில் உள்ள ஏழு மதரஸா மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டன. இதில் சுமார் 160 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி பரமக்குடி எஸ்.டி. கூரியர்ஸ் உரிமையாளர் காசிம் முஹம்மது, கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜி.எம். ஷேக் தாவுது, ரோட்டரி சங்க தலைவர் சாதிக் அலி,நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், அஹமது மீர் ஜவ்வாது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பரமக்குடி நகர் தலைவர் ஏ.பி. சீனி அலியார், கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளி தாளாளர் சாதிக் பாட்சா, கேஜே மேல்நிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம், கேஜே நர்சரி தொடக்கப்பள்ளி தாளாளர் முஹம்மது உமர், தொழிலதிபர் கான், சலாம் டிராவல்ஸ் அதிபர் அப்துல் சலாம், பரமக்குடி இஸ்லாமிய இளைஞர் சபையின் ஆலோசகர் வழக்கறிஞர் ஒலி முஹம்மது, புரபஷனல் கூரியர்ஸ் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஇ, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஇ, மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் மௌலவி வலியுல்லாஹ் நூரி, கீழப்பள்ளி இமாம் மௌலவி ஜலாலுதீன் மன்பஇ, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை
பேராசிரியர் முனைவர் எஸ். ஆபிதீன், ஹாஜி அலி பிர்தௌஸி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் சமூக அக்கறையுடன் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை ஜவ்வாதுப் புலவர் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெ. ஹிதாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஜவ்வாதுப் புலவர் மன்ற செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஏ. ஹிதாயத்துல்லாஹ் (9750105141) மற்றும் ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது அரிதானது. பெருநாளன்றே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சமுதாய மாணாக்கர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது அவாவினை ஜவ்வாதுப் புலவர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Monday, December 8, 2008

சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக "சாஃப்ட்வேர்'!

சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக "சாஃப்ட்வேர்'!


சென்னை, டிச. 8: தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கப் பிரத்யேக சாஃப்ட்வேரை மாநில போக்குவரத்து திட்ட பிரிவு (எஸ்.டி.பி.சி.) வடிவமைத்துள்ளது.

இந்த சாஃப்ட்வேரை, கூடுதல் டிஜிபி எஸ்.கே. டோக்ரா தனது சொந்த முயற்சியில் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழத்தில்தான் அதிகம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி கூறித்து டோக்ரா கூறியதாவது:

மகாராஷ்டிரத்திலும், தமிழகத்திலும்தான் லட்சக்கணக்கான வாகனங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

சாஃப்ட்வேரால் விபத்துகளை தடுக்க முடியுமா? "கடந்த 3 மாதங்களாக இந்தப் புதிய சாஃப்ட்வேரின் கீழ் அனைத்து மாவட்ட போக்குவரத்து காவல் நிலையப் பகுதிகளில் நடக்கும் விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை சேகரிக்கிறோம்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அன்றைய தினம் நடக்கும் விபத்து, அதில் தொடர்புடைய வாகனங்கள், விபத்து நடக்கும் நேரம் என பல விவரங்கள் குறித்து சாஃப்ட்வேர் மூலமாகப் பட்டியலாகப் பிரித்து விடுகிறோம்.

பின்னர் குறிப்பிட்ட காவல் நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட கால நேரத்தில் விபத்துகள் நடப்பதால் அங்கு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியை முடுக்கிவிட உத்தரவிடப்படுகிறது.

அதுபோல குறிப்பிட்ட நேரத்தில் அதிகமாக உள்ள வாகன நெரிசலையும், விபத்தில் தொடர்புடைய வாகனங்கள் பஸ்ஸô, வேனா அல்லது இரு சக்கர வாகனமா என்று கணக்கெடுத்து வாகன ஓட்டிகளின் உரிய ஆவணங்களையும் சோதனையிட உத்தரவிடுகிறோம்' என்றார் டோக்ரா.

32 பேரில் இருந்து 20 பேர் ஆக குறைப்பு: "இதற்காக புதிய நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்தப் புள்ளி விவரங்களை இணையதளத்தில் பார்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய சாஃப்ட்வேர் முறையால் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் 32 பேர் உயிரிழந்த நிலைமை மாறி, தற்போது 20 பேர் ஆக குறைந்துள்ளது.

நாட்டிலேயே, தமிழகத்தில்தான் இம்மாதிரியான சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி வருகிறோம். பிற மாநில காவல்துறையினரும் இம்மாதிரியான சாஃப்ட்வேரை பயன்படுத்த ஆவலாக உள்ளனர்' என்றார் அவர்.

Thursday, October 23, 2008

முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு

முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு



முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு


எதிர்வரும் ( 25 அக்டோபர் ) சனிக்கிழமை மாலை இரண்டு மணியளவில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில்


பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற நமது மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா


மடிக்கணினி ( லேப்டாப் ) இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு வழங்குதல்


'பச்சை இரத்தம்' ( இந்திய விடுதலைப்போரில் பங்கேற்ற இந்திய முஸ்லிம்கள் பற்றியது ) நூல் வெளியீடு உள்ளிட்டவை முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது.


இந்நூல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி பேராசிரியர்கள் ஆபிதீன் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.


இவர் ஏற்கனவே என்ன படிக்கலாம் ? , ராமர் பாலமா - ஆதாம் பாலமா ? என்பன போன்ற நூல்களை எழுதியுள்ளார்.


இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ஜில்லா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி,முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபாபுரம் பள்ளிவாசல் தலைவர் செய்யது இப்ராஹிம், கல்விக்குழுத்தலைவர் திவான் முஹம்மது, மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால்நாசர், தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.நெய்னா முஹம்மது, நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எம்.எஸ். லியாக்கத் அலி, வரிசை முஹம்மது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என். காதர்ஷா, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ, டாக்டர் குலாம், டாக்டர் ஷேக் முகைதீன் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்த இருக்கின்றனர்.


லெப்டினட் பேராசிரியர் ஆபிதீன் சிறப்புரை நிகழ்த்துகிறார். பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம் ஆய்வுரை நிகழ்த்துகிறார்.


நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், இஸ்லாமிக் பயிற்சி மைய முதல்வர் ஏ. சுல்தான் அலாவுதீன் சேட் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


மேலதிக விபரங்களுக்கு 94 880 23 199 அல்லது muduvaihidayath@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, October 7, 2008

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் ( State Bank Of India ) திங்கட்கிழமை ( 06 அக்டோபர் 2008 ) அன்று காலை முதல் பி.எஸ்.என்.எல். டவர் இணைப்பு தொடர்பு கிடைக்காததால் வங்கிப் பணிகள் முடங்கி விட்டன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடிக்க முடியாமலும், செலுத்த முடியாமலும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக கிளை மேலாளர் எஸ். முத்துராமன் அவர்கள் கூறுகையில் பி.எஸ்.என்.எல். இணைப்பு கிடைக்காததால் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய இயலவில்லை எனத் தெரிவித்தார். தொலைத்தொடர்பு ஊழியர்கள் இணைப்பு கிடைக்க பெரிதும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு பெரிதும் வருந்துவதாகக் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள் முதுகுளத்தூர் மட்டுமன்றி முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் வந்து காலை முதல் காத்திருக்கின்றனர். கடும் வெயில் மற்றும் மின்வெட்டு இவற்றுக்கிடையே தாங்கள் போட்ட பணத்தை எடுக்க தலைவிதி எனக் காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாக பெண்கள் மற்றும் முதியோர் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழாவண்ணம் தொலைத்தொடர்பு மற்றும் வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, September 25, 2008

முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரியில் ரத்ததான முகாம்

ரத்த தான முகாம்

ராமநாதபுரம், செப். 24: முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடந்தது.

கீழத்தூவல் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம், முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு முதல்வர் எஸ். கோவிந்தராஜன் தலைமையும், தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் முன்னிலையும் வகித்தனர். திட்ட அலுவலர் கே. மலர்விழி வரவேற்றார். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் சகாய் ஸ்டீபன்ராஜ், மருத்துவர் ராஜரெத்தினம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். பேராசிரியர் எஸ். மாடசாமி நன்றி கூறினார்.

Wednesday, September 24, 2008

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி: செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி: செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

www.muduvaivision.com


ராமநாதபுரம், செப். 23: தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.9.08 என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வெளியான செய்திக் குறிப்பு:

இயக்குநர் மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தில், இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்தியக் காவல் பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்வு எழுத முழுநேரம், பகுதி நேரம் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பினரைச் சேர்ந்தோர் பட்டப்படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, நவம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கு, சென்னை அண்ணா நகரிலுள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தின் முதல்வருக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் 30.9.08.

இதற்கான நுழைவுத் தேர்வு, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், சிதம்பரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள பயிற்சி மையத்தின் இணையதளம் www.civil sercice coaching.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி


ராமநாதபுரம், செப். 23: பரமக்குடியில் மாணவர் இறந்தது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை முஸ்லிம்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.

பரமக்குடியில் செப். 18-ம் தேதி ராஜா மஸ்தான் (15) என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இந்நிலையில், அவரைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, பரமக்குடியில் முஸ்லிம்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

பின்னர், வட்டாட்சியர் அண்ணாமலையிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், இறந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

முன்னதாக, பேரணியில் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான், பேச்சாளர் பாளை. ரபீக், மாவட்ட ஐக்கிய ஜமாஅத் செயலர் முகம்மது ஜமால், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் ஆரிப்கான், மனித நீதிப் பாசறை மாவட்டச் செயலர் ஜெமீல், உலமாக்கள் சபை மாவட்டத் தலைவர் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் பஜ்ருதீன், எமனேசுவரம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், நூருல்அமீன், வழக்கறிஞர் கமால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பேரணிக்கு மாவட்ட எஸ்.பி. கே.ஏ. செந்தில்வேலன் மேற்பார்வையில், டி.எஸ்.பி. பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பரமக்குடியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tuesday, September 23, 2008

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை


ராமநாதபுரம்,செப்.24-

பரமக்குடி மாணவன் இறந்த சம்பவத்தில் குற்ற வா ளியை உடனே கைது செய்யக்கோரி ராமநாத புரம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அதி காரிகள் மாணவர்களி டம் சமரச பேச்சு வார்த் தையில் ஈடுபட்டனர்.

மாணவன் சாவு

பரமக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் ராஜாமஸ்தான் (வயது 15) மர்மமான முறை யில் இறந்து கிடந்தான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பலியான மாணவன் தொடர்பான வழக் கில் உண்மை குற்ற வாளிகளை கைது செய்யக்கோரி நேற்று ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவ -மாணவிகள் திடீர் ஸ்டிரைக் கில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாண விகள் அனைவரும் வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் பகுதிக்கு வந் தனர்.

மறியல்

அங்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் அனைவரும் கோஷமிட்ட னர். பின்பு சாலை மறியல் செய் வதென கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இது பற்றி தகவலறிந்ததும் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் வரு வாய் துறை அதிகாரிகள் கல் லூரிக்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் தரப்பில் குற்றவாளிகளை உட னடியாக கைது செய்ய வேண் டும், எப்.ஐ.ஆர். நகல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது குற்ற வாளிகளை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. எப்.ஐ. ஆர், நகல் புகார் மனுதார ரிடமே வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் விளக்கி கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,
ஆர்ப்பாட்டம் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்


பரமக்குடி,செப்.24-

பரமக்குடி மாணவன் மர்ம சாவு சம்பவத்தையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

பரமக்குடி பள்ளி மாணவன் ராஜா மஸ்தான் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம் பவத்துக்கு கண்டனம் தெரி வித்தும், சம்பந்தப்பட்ட குற்ற வாளி மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பரமக் குடியில் ஆர்ப்பாட்டம் மற் றும் கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று இஸ்லா மிய அமைப்புகள் அறிவித்தி ருந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட ஐக்கிய ஜமாத், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழ கம், முஸ்லிம் லீக், தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை, தேசிய லீக், உலமாக்கள் சபை ஆகிய அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து ஊர் வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் தரைப்பாலம், சின்னக்கடை, கீழ பள்ளி வாசல் தெரு, சுண்ணாம்பு காரத் தெரு, பஸ் நிலையம், ஆர்ச், காந்தி சிலை, உழவர் சந்தை, ஐந்துமுனை பகுதி, இளையான்குடி ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழி யாக பரமக்குடி தாலுகா அலு வலகத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டம்

அதனை தொடர்ந்து பர மக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை 2 நாட்களுக் குள் கைது செய்வோம் என்று கூறி இது வரை நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரை கண்டிக்கிறோம். இறந்த மாணவன் ராஜா மஸ்தான் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

மேலும் அவரது குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்ப வம் குறித்து வழக்கு பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றவாளியை கைது செய்யும் வரை இறந்த மாண வனின் உடலை வாங்க மாட் டோம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் பரமக்குடி தாசில்தார் அண்ணாமலையி டம் மனு கொடுக்கப்பட்டது.

பாதுகாப்பு

ஆர்ப்பாட்டத்தில் உலமாக் கள் சபை சார்பில் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் சார்பில் தசுருதீன், த.மு.மு.க. சார்பில் சலிமுல்லாகான், பாளை ரபீக், மனித நீதி பாசறை சார்பில் ஜமீல், மாவட்ட ஐக் கிய ஜமாத் சார்பில் முகமது ஜமால், தவ் ஹீது ஜமாத் சார் பில் ஆரிப், தேசிய லீக் சார் பில் நூருல் ஆலிம், ராமநாத புரம் நகரசபை உறுப்பினர் ராஜாஉசேன், எமனேசுவரம் ஜமாத் சார்பில் ஆலம், பரமக் குடி நகரசபை கவுன்சிலர் அப்துல் மாலிக், நூருல் அமீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் துரைசாமி ஆகியோர் பரமக்குடியில் முகாமிட்டு இருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலை மையில் 13 இன்ஸ்பெக்டர் கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.

விடுமுÛ
ஆர்ப்பாட்டத்தையொட்டி பரமக்குடி நகரில் முஸ்லிம்களின் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. மேலும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, கீழ முஸ்லிம் நர்சரி பள்ளி, மேல முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, எமனேசுவரம் ஜவ்வாது புல வர் மெட்ரிக் பள்ளி உள்பட இஸ்லாமிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந் தது.

Sunday, September 21, 2008

பரமக்குடியில் தொடர்ந்து பதட்டம்: இறந்த பள்ளி மாணவன் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுப்பு

பரமக்குடியில் தொடர்ந்து பதட்டம்: இறந்த பள்ளி மாணவன் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுப்பு

பரமக்குடி செப் 22.

பரமக்குடியில் மர்மமாக இறந்த பள்ளி மாணவனின் உடலை 2 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்து விட்டன. ஆகையால், மாணவனின் உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி பகுதி எமனேசுவரத்தை சேர்ந்தவர் ராஜா மஸ்தான்(15).இவன் பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த 18ம் தேதி பள்ளிக்கு தேர்வு எழுத சென்றவன் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் அவனது உடல் நேற்று காலை தண்றாதேவிப்பட்டிணம் வைகையாற்றில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தனர்.பின்பு,மாணவனின் உறவினர்களும் முஸ்லீம் அமைப்புகளும் மாணவன் ராஜா மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளான் என்றும் உண்மை குற்றவாளியை கைது செய்யக் கோரியும் தர்ணா போராட்டம் செய்தனர்.பின்பு அவர்கள் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து சென்றுவிட்டனர்.உடனே காவல் துறையினர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குளிர்சாதனபெட்டி வரவழைக்கப்பெற்று அதில் மாணவனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக இறந்த மாணவன் ராஜா மஸ்தான் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.இதைத் தொடர்ந்து பரமக்குடி மேலப் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாத் த.மு.மு.க,தவ்ஹீத் ஜமாத்,மனித நீதி பாசறை,தேசிய லீக்,உலமாக்கள் சபை ஆகிய அமைப்புகளில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

இதில் இன்று(22ம் தேதி)மாலை 5 மணிக்குள் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யாமலும் குற்றவாளியை கைது செய்யாமல் இருந்தாலும் 23 ம் தேதி காலை 10 மணிக்கு எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து பேரணியாக வந்து தாலுகா ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்துவது என்றும் இதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பங்கேற்க அழைப்பது என்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி. ஆகியோர் நேரடி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இச்சம்பவத்தால் பரமக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்

முதுகுளத்தூர் கலவரம் - தினகரன்

www.muduvaivision.com


தொகுப்பும் பதிப்பும் : கா. இளம்பரிதி
யாழ் மை 134 மூன்றாம் தளம்
தம்பு செட்டித் தெரு
சென்னை 600 001
பக்கங்கள் : 120
விலை : ரூ 70

முதுகுளத்தூர் கலவரம் குறித்து முக்கிய வரலாற்றுப் பதிவு இது. உதடசைந்தால் உயிர் போய்விடும் என்று உலகமே பயந்த காலத்தில், இந்த நூலின் மூலம் முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியை அன்றைக்கே தைரியமாகச் சொன்னவர் தினகரன்.

தலித்களுக்கு ஆதரவாக இந்த நூலை எழுதியுள்ளதன் மூலம் சாதி கடந்த மனசாட்சியாகத் திகழ்கிறார். அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம். அவர் நடத்திய பத்திரிகையை மூட நேர்ந்தது மட்டுமல்லாமல், சொந்தச் சாதியினராலேயே படுகொலை செய்யப்பட்டார். 1958ல் வெளிவந்த இந்நூலைத் தேடிக் கண்டுபிடித்து, மறுபதிப்பு செய்துள்ளனர் பதிப்பாளர் இளம்பரிதியும், பதிப்பாசிரியர் அ.ஜெகநாதனும்.

நன்றி ஆனந்த விகடன்
18.04.2007

Thursday, September 18, 2008

முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்

முதுகுளத்தூர் குறித்த செய்திகள் அறிய உதவும் மேலும் ஒரு இணையத்தளம்


www.muduvaivision.com

Thursday, September 11, 2008

திருமண உதவி தொகை பெறுவது எப்படி?

திருமண உதவி தொகை பெறுவது எப்படி?
கலெக்டர் கிர்லோஷ்குமார் விளக்கம்


ராமநாதபுரம்,செப்.12-

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறு வது எப்படி? என்று கலெக்டர் கிர்லோஷ் குமார் விளக்கம் அளித் துள்ளார்.

திருமண உதவி தொகை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் ஒரு அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் நோக்கமே ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் கல்வி நிலையை உயர்த்துதல் ஆகும். இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பொற மணப்பெண் 10ம் வகுப்பு படித்திருக்க வேண் டும்.

18 முதல் 30 வயதுக்குள்ளும், பெற்றோரது ஆண்டு வருமா னம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகா மலும் இருக்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் உதவி தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங் களை திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன்பும், அல் லது திருமணத்துக்கு முதல் நாள் வரையும் விண்ணப்பங் களை அளிக்கலாம்.

சான்றுகள்

விண்ணப்பத்தின் போது மணமகன், மணமகள் இரு வருக்கும் முதல் திருமணம் என்பதற்கான சான்று, மண மகளின் கல்வி தகுதி, மாற்று சான்றிதழ், சாதி, இருப்பிட, வருமான சான்றுகள், மண மகனின் வயது அல்லது கல்வி சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். இவற்றுடன் பெற்றோர் மற் றும் மணமக்கள் புகைப் படம் ஆகியவற்றை சேர்த்து அந் தந்த வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் திருமணத் துக்கு முன்பு சமர்ப்பிக்க வேண் டும்.

குடும்ப தலைவர் இல்லை யெனில் விண்ணப்பத்துடன் கணவனின் இறப்பு சான்று அல்லது கணவனால் கைவி டப்பட்டதற்கான சான்று அளிக்கும் பட்சத்தில் தாயார் பெயரில் காசோலை, வரை வோலை வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் வெளி நாட்டில் வேலைபார்த்தால் அந்த மனுக்கள் நிராகரிக்கப் படும். எனவே தகுதியுள்ள ஏழை பெண்கள் உரிய நேரத் தில் அனைத்து சான்றிதழ்க ளுடன் விண்ணப்பித்து பய னடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Wednesday, September 10, 2008

207 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கீடு

207 பள்ளிவாசல்களுக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கீடு
கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்


ராமநாதபுரம்,செப்.10-

ராமநாதபுரம் மாவட்டத் தில் ரம்ஜான் பண்டிகை யையொட்டி 207 பள்ளி வாசல்களுக்கு 61/2 லட்சம் கிலோ அரிசி ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித்தார்.

ரம்ஜான் பண்டிகை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தினத்தந்தி நிருபரிடம் கூறிய தாவது:- ராமநாதபுரம் மாவட் டத்தில் ரம்ஜான் பண்டி கையையொட்டி பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக சலுகை விலையில் பச்சரிசி ஒதுக்கீது செய்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் 7 தாலுகாக்களுக்கு உட்பட்ட 207 பள்ளிவாசல்களுக்கு 6 லட்சத்து 46 ஆயிரத்து 950 கிலோ பச்சரிசி வழங்கப்பட் டுள்ளது.

ராமநாதபுரம் தாலுகாவில் 85 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 650 கிலோவும், கடலாடி தாலுகா வில் 3 பள்ளிவாசல்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 850 கிலோவும், திருவாடானை தாலுகாவில் உள்ள 34 பள்ளி வாசல்களுக்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட் டுள்ளது.

பரமக்குடி

இதேபோல பரமக்குடி தாலுகாவில் 22 பள்ளிவாசல் களுக்கு 61 ஆயிரத்து 350 கிலோவும், முதுகுளத்தூர் தாலுகாவில் 18 பள்ளி வாசல் களுக்கு 1 லட்சத்து 42 ஆயி ரத்து 800 கிலோவும், கமுதி தாலுகாவில் 13 பள்ளி வாசல் களுக்கு 24 ஆயிரத்து 150 கிலோவும், ராமேசுவரம் தாலுகாவில் 5 பள்ளி வாசல் களுக்கு 8 ஆயிரத்து 550 கிலோவும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tuesday, September 9, 2008

10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா

10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா

கமுதி, செப். 8: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு, கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவிற்கு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ். சாகுல்ஹமீது தலைமை வகித்தார். சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர். சிவலிங்கம் வரவேற்றார்.

2007-2008-ம் ஆண்டில், கமுதி வட்டார அளவில் பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் சாதனை புரிந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான எம். ஜெரினா பேகம் (கமுதி கலா விருத்தி உயர்நிலைப் பள்ளி), சுந்தரவடிவேல் (நீராவி தேவாங்கர் மேனிலைப் பள்ளி), அனிதா (கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், வட்டார நிர்வாகிகள் எஸ். நாகேந்திரன், ஏ.கே. சாகுல்ஹமீது, ரவிச்சந்திரன், ஞானசங்கர், பொன்ராஜ், வள்ளியம்மாள், இளமுருகன், மாரிப்பாண்டி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வட்டாரச் செயலர் எஸ். முத்து நன்றி கூறினார்.

Sunday, September 7, 2008

இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி

இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்:சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவல்


சென்னை, செப்.7-

சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிரான அமைப்பு

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் `பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்ïஸ்' (எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சுவாமி பூமானந்தாவை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு உள்ள இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சென்னை கிளை தொடக்கம்

மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது, தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரம் இமேஜ் கலையரங்கில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக நாடுகள் பயப்படும் அளவுக்கு இந்திய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்கநெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்கநெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.

டெல்லியில் மாநாடு

இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

ரூ.64 லட்சம் கோடி

சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம் ஆகும். அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வங்கியில் போட்டாலே வட்டியே பல கோடி வரும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் செலுத்த தேவையில்லை. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும்.

இவ்வாறு சுவாமி பூமானந்தா கூறினார்.

ஊழலை ஒழிக்க முடியும்

மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறியதாவது:-

ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். முடியும் என்றால் முடியும். முடியாது என்று நினைத்தால் முடியாது. ஊழலை ஒழிப்பதற்கு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியல் ஊழல்தான்.

தேர்தல் நடைமுறையை திருத்தி அமைக்காவிட்டால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இந்தியாவில் 900-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. வருமான வரிவிலக்கு பெறுவதற்காக லெட்டர்பேட் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள்.

இந்தியர்கள் பட்டியல்

சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான்.

இவ்வாறு விட்டல் கூறினார்.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் கூறும்போது, "டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை தினசரி சுமார் 81/2 லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரெயில் நிலையங்களையும், ரெயில் வளாகத்தையும் தூய்மையாக வைத்திருப்பது பற்றி இந்த அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

Monday, September 1, 2008

கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்

கடலாடியில் ஐம்பெரும் விழா மாணவ_மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினர்

கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ராமநாதபுரம் நேரு யுவகேந்திரா இணைந்து சுதந்திர தின விழா,தேசிய விழிப்புணர்வு விழா, மத நல்லிணக்க விழா, இளைஞர் எழுச்சி விழாஆகியவற்றை கொண்டாடும் நோக்கமாக ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.நகர் பிரமுகர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர் தேவர் உறவின்முறை தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்குழு உறுப்பினர் சி.பி.நாகராஜன் வரவேற்புரையாற்றினார்.தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் சுவாமிநாதன்,கடலாடி ஒன்றிய குழு தலைவர் த.ராஜசேகர்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் என்.கே.முனியசாமிபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்க செயலாளர் கவிஞர் செ.செந்தில்,தேசிய வலிமை மாத இதழ் ஆலோசகர் கோச்சடை முத்துராமலிங்கம்,நேதாஜி தேசிய இயக்க செயலாளர் பொறியாளர் சு.க.கமல் ஆனந்த்,சுதந்திர போராட்ட தியாகி முனியசாமி,முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்,காங்கிரஸ் பிரமுகர் ரு.முத்துராமலிங்கம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யம் பெருமாள்,கடலாடி வர்த்தக சங்க தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ராமலிங்கம்,த.சக்திவேல்,சி.பி.எம்.தாலுகா செயலாளர் வி.மயில்வாகணன்,முன்னால் இளாஞர் நற்பணி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மன்ற செயலாளர் முகாரா என்ற ராமர் தொடக்கம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2007_2008ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அரியநாச்சி,10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சசிரேகா மற்றும் பேச்சுப்போட்டி,கவிதை,கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,காமராஜர் நர்சரி பள்ளி,சரஸ்வதி வித்யாலயா மாணவ_மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏழை எளிய மாணவ_மாணவிகளுக்கு மன்றத்தின் சார்பாக ஈலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவின்போது சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் ஆண்களா? பெண்களா என்ற தலைப்பில் சிந்தறை பட்டிமன்றம் நடைபெற்றது.ஆண்களே என்ற தலைப்பில் ஜாஹிர்உசேன்,கார்த்திகேயனும், பெண்களே என்ற தலைப்பில் துரைப்பாண்டியன்,காஜாமுகைதீன் ஆகியோர் வாதாடியதில் நடுவர் லட்சுமணன் ஆண்களே சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.

பல மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திராளாக கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் மன்ற நிராவாக குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றியுரை நிகழ்த்தினார்.

முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே பொது இடத்தில் தகராறு ஒருவர் கைது

முதுகுளத்தூர் அருகே பொதுமக்கள் கூடக்கூடிய இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசிய ஒருவரை போலூலீசார் கைது செய்தனர்.

முதுகளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்நதவர் கருப்பையாமகன் கருப்புச்சாமி ஆவார்.இவர் புளியங்குடி கிராமத்தில் பொதுமக்கள் நிற்கக்கூடிய இடத்தில் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் அதே கிராமத்தை சேர்ந்த பழனி மகன் வேல்ச்சாமி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புச்சாமியை கைது செய்தனர்.

Sunday, August 31, 2008

அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்

அச்சங்குளம் நூற்பாலையை விரைவில் திறக்க நடவடிக்கை : முருகவேல் எம்.எல்.ஏ. தகவல்

கமுதி அருகே அச்சங் குளத்தில் மூடிக்கிடக்கும் நூற்பாலையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக முருக வேல் எம்.எல்.ஏ., தெரி வித்தார்.

நூற்பாலை

கமுதி அருகே உள்ள அச் சங்குளத்தில் அரசு சார்பில் கூட்டுறவு நூற்பு மில் எம்.ஜி. ஆர். முதல் அமைச்சராக இருந்த போது மத்திய மந்திரி யாக இருந்த மரகதம் சந்திர சேகர் திறந்து வைத்தார்.

இந்த நூற்பாலை மூலம் 500 பேருக்கு நேரடியாவும், 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. நல்ல லாபத்துடன் இயங்கி வந்த இந்த மில் நாள டைவில் நிர்வாகத்தில் ஏற் பட்ட குளறுபடி காரண மாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மூடப்பட்டது.

நடவடிக்கை

இந்நிலையில் மூடப்பட்ட அச்சங்குளம் கூட்டுறவு நூற் பாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அங்கு பணியாற் றிய ஊழியர்கள் முதல் அமைச் சர் கருணாநிதி மற்றும் சட்ட மன்ற உறுதிமொழி குழுவினரி டம் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து சட்டமன்ற உறுதிமொழி குழுவில் இடம் பெற்றிருந்த முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல் தமி ழக கைத்தறி துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

உடனே இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நூற்பாலையை விரைவில் திறக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள் ளதாக முருகவேல் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

Thursday, August 28, 2008

இளைஞர் நற்பணிமன்ற விழா

இளைஞர் நற்பணிமன்ற விழா



கடலாடி, ஆக. 28: கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றமும், நேரு யுவகேந்திராவும் இணைந்து சுதந்திர தினவிழா, தேசிய விழிப்புணர்வு விழா, சாதி,மத நல்லிணக்க விழா, இளையோர் எழுச்சி விழா, நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற 12-ம் ஆண்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மன்றத் தலைவர் எல். விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ம. பாலசுப்பிரமணியன், கடலாடி மறவர் சமூக உறவின்முறை தலைவர் எம். மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி. நாகராஜன் வரவேற்றார்.

விழாவில் கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் த. ராஜசேகர், "தேசிய வலிமை' மாத இதழ் ஆசிரியர் வே. சுவாமிநாதன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் என்.கே. முனியசாமி பாண்டியன், நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்கச் செயலர் வத்தலகுண்டு கவிஞர் செ. செந்தில், தாலுகா மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் வி. மயில்வாகனன், நேதாஜி தேசிய இயக்கச் செயலர் பொறியாளர் சு.க. கமல் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

கவிஞர் முகாரா "தொடக்கம்' எனும் தலைப்பில் கவிதை வாசித்தார். சிக்கனத்தை கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி எம். சசிரேகா (10-ம் வகுப்பு), கே. அரியநாச்சி (பிளஸ் 2) ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பத்திர எழுத்தர் க. முத்துராமலிங்கம், முன்னாள் ராணுவவீரர் எம். மீனாட்சி சுந்தரம், ஊராட்சி முன்னாள் தலைவர் சி.அ.ச. அய்யம்பெருமாள் நாடார், நகர் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ஆர்.எஸ். ராமலிங்கம், காமராஜர் நர்சரி பள்ளித் தாளாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ப. பாலமுருகன் நன்றி கூறினார்.

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு



கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.

Friday, August 22, 2008

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்


சிதம்பரம், ஆக. 21: பாலிடெக்னிக்கில் பயிலும் ஏழை மாணவரது படிப்பு செலவுக்கு சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவர்கள் வசூலித்த ரூ.3400-ஐ அளித்துள்ளனர்.

சிதம்பரம் குஞ்சமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆர்.கலியபெருமாள் மகன் கே.ராஜா. இந்த ஈரோடு நந்தா பாலிடெக்னிக்கில் கல்வி பயின்று வருகிறார்.

இவரின் படிப்புக்காக, சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் ரூ.3400-ஐ வசூலித்தனர்.

இந்த உதவித் தொகையை அவரது பெற்றோரிடம் பள்ளித் தாளாளர் இரா.செந்தில்குமார் முன்னிலையில் தமிழாசிரியர் கே.நடனகுஞ்சிதபாதம் திங்கள்கிழமை அளித்தார்.

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


நாகப்பட்டினம், ஆக. 21: தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகைப் பெற தகுதியான கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் 2008-09-ம் ஆண்டுக்குக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று; பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்; எந்த உதவித் தொகையும் பெறாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு, முதலாம் ஆண்டு கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், டிப்ளமோ முடித்து 2-ம் ஆண்டு பொறியியல் பயிலுபவர்கள், பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

நிகழாண்டில், 400 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

முதலாம் ஆண்டு பட்டயப்படிப்புப் பயிலுபவர்களுக்கு ரூ. 4 ஆயிரம், முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்புக்கு ரூ. 4,500, முதலாம் ஆண்டு தொழில் நுட்பப் படிப்புக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதிகள்: சுமார் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

உறைமேலிட்ட கவரில் சுய முகவரியைத் தெளிவாக எழுதி (உறை அளவு 22.5 செ.மீ 1 செ.மீ), ரூ. 10-க்கான தபால் தலை ஒட்டி, "கெüரவச் செயலர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராஜா அண்ணாமலை பில்டிங், இணைப்புக் கட்டடம் 2-வது தளம், 18/3 ருக்மணி லெட்சுமிபதி சாலை, எக்மோர், சென்னை-8' என்ற முகவரிக்கு வரும் அக். 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு


புதுக்கோட்டை, ஆக. 21: ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி என்றார் ஜெஜெ கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றியடைந்து பயிற்சி பெறுபவருமான க. விஜயேந்திரபாண்டியன்.

புதுகை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

கடும் உழைப்புக்குப் பலன் நிச்சயம். மகிழ்ச்சி, ஆர்வம், ஈடுபாடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு படித்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.

ஐஏஎஸ் பதவி என்பது சாதாரணமானவர்கள் நினைத்தே பார்க்க முடியாதது, அது மேட்டுக் குடியினருக்கு மட்டுமே சொந்தம் என்பதெல்லாம் வெறும் கற்பனை.

ஐஏஎஸ் அகாதமியில் தற்போது பயிற்சியில் என்னுடன் இருக்கும் பெரும்பாலானவர்கள் சாதாரண அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த முதல் தலைமுறையினர். இவர்கள் உத்வேகத்துடன் படித்ததால்தான் வெற்றி பெற்றனர்.

கடின உழைப்பால் வெற்றி நேருக்கு நேராக கிடைக்கும். அந்த வெற்றியைச் சுவைத்துவிட்டால் பின் திரும்பிப் பார்க்கும் எண்ணம் வராது.

மொழி இந்தப் படிப்புக்குத் தடை இல்லை. தாய்மொழியில் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தற்போது அதிகம்.

முதலில் நம்மை நாம் மதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நடை, உடை பாவனைகள் மாறும். ஒரு அதிகாரி என்பதை மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத பரந்து விரிந்த களம் உங்கள் முன் உள்ளது. பணம் சேர்க்க எத்தனையோ படிப்புகள் உள்ளன. ஆனால் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமிருந்தால் மட்டுமே இதில் இயல்பாகவும், எளிதாகவும் வெற்றி பெறலாம்.

பணம் என்றும் நம்மை வழி நடத்தும் கருவியாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் முறை தேர்ச்சி பெற்று நேர்காணலில் 7 மதிப்பெண் குறைந்ததால் தோல்வியடைந்தேன்.

ஆனால், அடுத்த முயற்சியில் ஐஆர்எஸ் பதவி கிடைத்தது. ஐஏஎஸ் என் லட்சியம் என்பதால் மீண்டும் முயற்சி செய்து இந்த ஆண்டு வெற்றி பெற்றேன். தன்னம்பிக்கையுடன் ஒரே சிந்தனையில் முயற்சி செய்ததால் இதை அடைய முடிந்தது.

படிக்க மனம் இருந்தால் போதும் உங்கள் தேடுதல் நிறைவேறும். மாணவர்கள் கூச்சத்தை தவிர்க்க வேண்டும், கூச்சமில்லாமல் இருப்பது தற்போது தனி திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விடா முயற்சியே ஐஏஎஸ் கனவை நனவாக்கும் என்றார் விஜயேந்திரபாண்டியன்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாக அறங்காவலர் கவிதாசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

முதல்வர் ஜெ. பரசுராமன் வரவேற்றார். பிபிஎம் இயக்குநர் சோலையப்பன் நன்றி கூறினார்.

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்


நாகர்கோவில், ஆக. 21: சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. பால்சுதந்திரதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் மையம், குட்வில் கம்யூனிகேஷன்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கிவ் லைப் சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம் சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

மொத்தம் 21.09 கி.மீ. தொலைவு கொண்ட இப் போட்டியில் இருபாலரும் பங்கேற்கலாம். முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், 2-வது பரிசாக ரூ. 5 லட்சமும், 3-வது பரிசாக ரூ. 2 லட்சமும், 4-வது பரிசாக ரூ. 1 லட்சமும், 5-வது பரிசாக ரூ. 50 ஆயிரமும், 6-வது பரிசாக ரூ. 25 ஆயிரமும், 7-வது பரிசாக ரூ. 15 ஆயிரமும், 8-வது பரிசாக ரூ. 10 ஆயிரமும், 9-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும், 10-வது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 11 முதல் 20-வது இடம் வரை பெறுவோருக்கு ரூ. ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இருபாலருக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். முதல் 20 இடங்களைப் பெறும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாரத்தான் ஓட்டத்தில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ. 50. பள்ளி மாணவர்களுக்கு இலவசம். நிரப்பப்பட்ட படிவங்களை குட்வில் கம்யூனிகேஷன்ஸ், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதுகுறித்த கூடுதல் தகவல்களை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடர்பு கொண்டு அறியலாம் என்றார் அவர்.

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

திருநெல்வேலி, ஆக. 21: போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம் நடத்தப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பி.ஆர். பிந்துமாதவன் தெரிவித்தார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:

நாங்கள் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைகள் தவிர இதர வேலைகள் அனைத்துக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பி வருகிறோம்.

இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6,800 பேரை வேலைக்காக பல்வேறு நாடுகளுக்கு தேர்வு செய்து அனுப்பி இருக்கிறோம். இந்தாண்டு இது வரை 300 பேரை தேர்வு செய்து அனுப்பி உள்ளோம். 340 பேரை அனுப்பும் தருவாயில் இருக்கிறோம்.

ஒமன், துபாய், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற அரேபிய நாடுகளுக்குத் தான் அதிகமாக ஆள்களை அனுப்பி வருகிறோம்.

இது தவிர சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஆள்களை அனுப்பி வருகிறோம். இதில் அமெரிக்க நாட்டுக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம்.

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் எங்களிடம் கேட்பதை பொருத்து தான், ஆள்களை தேர்வு செய்து அனுப்புகிறோம்.

அந்த நிறுவனங்கள் ஒருவரின் அனுபவத்தையும், திறமையையும் பொருத்து ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. இதில் ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணமாக நாங்கள் வசூல் செய்கிறோம்.

ஆனால் இதற்கு தனியார் ஏஜென்சிகள் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றன.

பயணக் கட்டணம், உணவு வசதி, தங்கும் வசதி, என்.ஆர்.ஐ இன்சூரன்ஸ் போன்ற அனைத்து சலுகைகளும் எங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகிறவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள அயல்நாடு செல்வோர் காப்பாளர் மையத்தில் பதியாமலேயே தனியார் ஏஜென்சிகள் பல வெளிநாடுகளுக்கு பல்வேறு விதிமுறைகளை மீறி ஆள்களை அனுப்புகின்றனர். இப்படிப்பட்ட ஏஜென்சிகள் மூலம் அழைத்து செல்லப்படுவர்கள் தான், வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட ஏஜென்சிகளின் ஏமாற்றுவேலைகளை கட்டுபடுத்ததான், நாங்கள் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெளிநாட்டுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம்களை நடத்துகிறோம். இது வரை 13 முகாம்கள் நடத்தி இருக்கிறோம்.

மேலும் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோர், எங்களது நிறுவனத்தில் தனியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒமன் நாட்டில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்துக்கு கொத்தனார், டைல்ஸ், மார்பிள், பிளாக் ஒர்க்ஸ் வேலை செய்வோர், பிளாஸ்டரிங், கார்பெண்டர், பார்பெண்டர், எலக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், என்ஜினீயர்கள் ஆகியோர் சுமார் 1,000 பேர் தேவைப்படுகிறார்கள். இதற்காக பாளையங்கோட்டையில் முகாம் நடந்தது.

மேலும், இந்தப் பணியிடங்களுக்கு இம் மாதம் 23-ம் தேதி ராமநாதபுரம், 24-ம் தேதி திருச்சி, 25-ம் தேதி ஆகிய இடங்களில் நடத்த உள்ளோம். இதேபோல பல இடங்களில் முகாம் நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றார் பிந்துமாதவன்.

Thursday, August 21, 2008

கடலாடி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்

கடலாடி பகுதியில் இலவச பாஸ் இருந்தும் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்
போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு முடிவு


சாயல்குடி,ஆக.21-

கடலாடி தாலுகா சிக்கல் பகுதியில் இலவச பாஸ் இருந்து பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி அறி வித்துள்ளது.

பஸ் பாஸ்

கடலாடி தாலுகா செயலா ளர் மயில்வாகனன், மாவட்ட குழு உறுப்பினர் பச்சமால் ஆகியோர் கலெக்டர் கிர் லோஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:- கடலாடி தாலுகா சிக்கல் பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் சிக்கல், வாலிநோக்கம், மேலக் கிடாரம், மாரிïர் ஆகிய ஊர் களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசு சார் பில் இலவச பஸ் பாஸ் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பள்ளி கள் உள்ள பகுதியில் அரசு டவுன் பஸ்கள் போதிய அளவு இல்லை. மேலும் பள்ளி நேரத்தில் டவுன் பஸ் இல்லாததால் மாணவர்கள் இலவச பாஸ் வைத்திருந்தும் அவை பயனில்லாமல் உள் ளது. இதனால் அவர்கள் தனியார் பஸ்சிலும், பிற ஊர்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்துகளிலும் டிக் கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

போராட்டம்

ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் நடந்து தான் பள்ளி சென்று வருகின் றனர். எனவே சிக்கல் பகுதி ஊர்களை சேர்ந்த மாண வர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் மாண வர்களை திரட்டி மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, August 20, 2008

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜனாப் அலாவுதீன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 20.08.2008 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரது ஜனாஸா பரமக்குடி கீழமுஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவர் முதுவை ஹிதாயத்தின் மைத்துனரும், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஹிதாயத்துல்லாஹ்வின் தகப்பனார் ஆவார். இவரது தொடர்பு எண் 9750105141

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜனாப் அலாவுதீன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 20.08.2008 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னாரது ஜனாஸா பரமக்குடி கீழமுஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவர் முதுவை ஹிதாயத்தின் மைத்துனரும், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஹிதாயத்துல்லாஹ்வின் தகப்பனார் ஆவார். இவரது தொடர்பு எண் 9750105141

Monday, August 18, 2008

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

அபிராமம், முதுகுளத்தூர் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


முதுகுளத்தூர், ஆக. 17: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், அபிராமம் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, நர்சரி பள்ளி ஆகியவற்றில் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ. ஷாஜகான் தலைமையில், கல்விக்குழுத் தலைவர் எஸ். திவான் முன்னிலையில், தாளாளர்கள் எஸ். கமால்நாசர், சீனி முகம்மது ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.

தலைமை ஆசிரியர்கள் ஓ.ஏ. முகம்மது சுலைமான், காதர்சா, விக்டோரியா உள்ளிட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நர்சரி பள்ளி, கண்ணா நர்சரி பள்ளி, ஊ.ஒ.பள்ளி, அரசுத் தொழிற்பயிற்சி நிலையம், சோணை-மீனாள் கல்லூரி ஆகியவற்றில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூர் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் பாக்கியநாதன் தலைமையில், தாளாளர் எஸ். அப்துல்காதர் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ். பசீர் அகம்மது தலைமையில், தாளாளர் ஏ. முகம்மது இத்ரீஸ் கொடி ஏற்றி வைத்தார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரியர், ஆசிரியைகள் பலரும் பேசினர். சாரணர் மாணவர்கள் 8 பேருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

அபிராமம் வி.என்.எஸ்.உயர்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி, பேட்டை நடுநிலைப் பள்ளி, நத்தம் துவக்கப் பள்ளி, ஊ.ஒ.பள்ளி ஆகியவற்றில் கொடி ஏற்றப்பட்டது.

வலையபூக்குளம் கே.வி.சாலா நடுநிலைப் பள்ளி, நீராவி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, மண்டலமாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, பம்மனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி, பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி ஆகியவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ராமசாமிபட்டி உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஊராட்சித் தலைவர் பத்மாவதி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சி. சோலையப்பன், பிரமுகர்கள் ஏ. பாம்புலு, சி. மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இடைச்சூரணி ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துமுருகன் தலைமையில், ஊராட்சித் தலைவர் காளிமுத்துவும், பாப்பணம் ஊ.ஒ.பள்ளியில் தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமையில், ஊராட்சித் தலைவர் மாரியும் கொடி ஏற்றினர்.

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா - பிரதமர், ஜனாதிபதி பங்கேற்கிறார்கள்


சென்னை, ஆக.18-

வெளிநாடு வாழ் இந்தியர் தினவிழா முதன் முதலாக சென்னையில் 2009 ஜனவரியில் நடக்கிறது. இதில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் விழா

ஒரு வெளிநாட்டினராக தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மாகாந்தி 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நாடு திரும்பினார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9-ந் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கப்பூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

7-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின விழாவை முதன் முதலாக சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த விழா 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு விழாவை முறைப்படி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இணையதளம்

9-ந் தேதி நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கலந்து கொள்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் சிறந்த பங்காற்றிய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கி கவுரவிக்கிறார். வெளிநாடுவாழ் இந்தியர் நல அமைச்சகத்துடன், தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறது.

கண்காட்சிகளும், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்களும் நடத்தப்பட உள்ளன. விழாவில் பங்கேற்கும் உயர்நிலை குழுவினரை திருப்பதி, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பிரத்யேகமாக இணையதளம் ஒன்று(ஷ்ஷ்ஷ்.ஜீதீதீவீஸீபீவீணீ.ஷீக்ஷீரீ) வரும் 21-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. விழா குறித்த அனைத்து தகவல்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432782&disdate=8/18/2008&advt=2

Saturday, August 16, 2008

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு


சென்னை, ஆக.16-

ஒவ்வொரு ஊர்களுக்கும் உரிய தபால் நிலைய பின்கோடு எண்களை மாற்றி, `பேல்' என்ற புதிய குறியீட்டை பயன்படுத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

பின்கோடு நம்பர்

தபால்களை பட்டுவாடா செய்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் நாட்டின் பகுதிகளை அஞ்சல்துறை குறியீடுகளாக வைத்துள்ளது. 6 எண்கள் கொண்ட இந்த குறியீடுகள் போஸ்டல் இன்டக்ஸ் நம்பர் (பின்) அதாவது பின்கோடு நம்பர்கள் என்றழைக்கப்படுகின்றன.

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ கடிதம் எழுதும் போதும், வேலைக்காக விண்ணப்பிக்கும் போதும், மற்றவரிடம் ஒரு விலாசத்தை கொடுக்கும் போதும் `பின்கோடு' எண்களை எழுதுவது என்பது தற்போது அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 1972-ம் ஆண்டு `பின்கோடு' நம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

8 பிரிவுகள்

பின்கோடு எண்கள் குறியீட்டின் முதல் எண்ணை வைத்து இந்தியாவை தபால்துறை மொத்தம் 8 பிரிவுகளாக பிரித்துள்ளது.

1) டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகார். 2) உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட். 3) ராஜஸ்தான், குஜராத், டாமன், டைï 4) சத்தீஸ்கர், மராட்டியம், மத்தியபிரதேசம், கோவா. 5) ஆந்திரபிரதேசம், கர்நாடகா. 6) கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவுகள். 7)மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், சிக்கிம், அருணாசலபிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள். 8) பீகார், ஜார்கண்ட்.

6 எண்கள்

பின்கோடு எண்களில் உள்ள மொத்தம் 6 எண்களில் முதல் எண் இந்தியாவில் உள்ள மண்டலம், அடுத்து உள்ள எண் துணை மண்டலத்தையும், அதைத் தொடர்ந்து உள்ள எண் அந்த மண்டலத்தில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்டத்தையும், அதற்கு அடுத்துள்ள 3 எண்கள் அங்குள்ள தபால் நிலையங்களையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சென்னையில் `600001' என்ற பின்கோடு எண்கள் பூக்கடை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, மண்ணடி, முத்தையால்பேட்டை, ஏழுகிணறு ஆகிய தபால் நிலையங்களையும், `600002' என்பது, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களையும் குறிப்பதாக உள்ளது.

எளிதாக அறியலாம்

இந்த நிலையில், பின்கோடு நம்பர்களை பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை கணக்கில் கொண்டு இந்திய அஞ்சல்துறை `போஸ்டல் அட்ரஸ் லொகேட்டர்' (பேல்) என்ற தபால் விலாச குறியீடுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பின்கோடு நம்பர்களை பொறுத்தவரை தபால் நிலையத்தை வைத்தே அந்த பகுதி, பின்கோடு எண்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் `பேல்' குறியீடுகள் அதில் இருந்து மாறுபட்டு, ஒவ்வொரு இடத்தையும் ஒரு குறியீட்டால் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு மாவட்டம் என்பது நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பின்கோடு எண்களை பொறுத்தவரை, மாவட்டம் என்பதற்கு குறியீடுகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள தபால் விலாச குறியீடுகளில் (பேல்) கிராமம், டவுண், இடம், கட்டிடம், தெரு, சாலை, பகுதி, நகரம் என அனைத்தும் குறிக்கப்படும். இதனால் குறியீடுகளில் இருக்கும் எண்கள் மூலமாகவே இருக்கும் இடத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

2, 3 மாதங்களில் அமல்

தபால்காரர்கள் கடிதங்களை கொண்டு செல்வதற்கான முகவரியை அறிந்து கொள்ள இந்த புதிய முறை வசதியாகவும், சுலபமானதாகவும் இருக்கும். கடிதங்களை பின்கோடு எண்களை பார்த்து குறிப்பிட்ட தபால் நிலையத்திற்கு அனுப்பி அங்கிருந்து சென்று சேரவேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்ப்பதை விட, `பேல்' முறை மிகவும் எளிதானது என்று அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ``இந்த புதிய தபால் விலாச குறியீடுகள் இந்திய அஞ்சல்துறையில் அறிவுசார் சொத்துரிமை. இதை இந்திய அஞ்சல்துறையின் அனுமதியின்றி மற்ற நாடுகளின் தபால்துறை பயன்படுத்த முடியாது. தபால் துறை மிகப்பெரிய மாற்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக ஒருங்கிணைந்த தபால் துறை சாப்ட்வேர்கள், ஒன்றிணைக்கப்பட்ட தபால் நிலையங்கள், ஜி.பி.எஸ். வசதி கொண்ட மெயில் வேன்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. இன்னும் 2, 3 மாதங்களில் தபால் விலாச குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432360&disdate=8/16/2008

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி

கலாசாரம் பற்றிய குறும்படப் போட்டி



மதுரை, ஆக. 15: தானம் அறக்கட்டளையின் வளர்ச்சித் தொடர்பு மையம் சார்பில் "கலாசாரமும் பாரம்பரியமும்' எனும் தலைப்பில் குறும்பட போட்டி நடைபெற உள்ளது.

பாரம்பரியக் கலைகள், கலாசாரங்கள், நிர்வாக முறைகள், பழங்குடிகளின் நாகரிகங்கள், தொழில் நுட்பங்கள், விழாக்கள், வரலாறு மற்றும் தொல் சமூக நிகழ்வுகள் தொடர்பாக குறும்படங்கள் அமைந்திருப்பது அவசியம்.

உலக மொழிகளில் தயாரிக்கப்பட்டிருப்பினும் துணைத் தலைப்புகள் அல்லது உரையாடல்களின் எழுத்து வடிவம் ஆங்கிலத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். குறும்படம் கடந்த 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இயக்குநரின் சுய சிந்தனையில் உருவாகியிருத்தல் அவசியம். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பில் உறுதுணையாய் இருந்த நிறுவனங்கள் இப்போட்டியில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றவர்களாவர். விசிடி, டிவிடி அல்லது விஎச்எஸ் வடிவத்தில் குறும்படங்களை அனுப்பலாம். படத்தின் மூலப் பிரதியை அனுப்புதல் கூடாது. விண்ணப்பங்கள் மற்றும் விளக்க அறிக்கையை ஜ்ஜ்ஜ்.க்ட்ஹய்.ர்ழ்ஞ்/க்ச்ச் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்வியாளர்கள், இதழாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் தீர்ப்பே இறுதியானது.

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 15.

மேலும் விவரங்களுக்கு தானம் அறக்கட்டளை, வளர்ச்சித் தொடர்பு மையம், 7-இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை-625 016 (தொலைபேசி எண் 0452- 4353983) எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080816000945&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/16/2008&dName=U%D5%FBW&Dist=4

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்


புதுதில்லி, ஆக. 15: சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திடீரென தனது சிறுவயது கால ஞாபகம் வரவே தான் வாழ்ந்த கிராமத்தின் நினைவில் ஆழ்ந்தார். இரவு நேரத்தில் பள்ளிப்பாடங்களை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்ததாகவும் தெரிவித்தார்.

சிறுவயதில் தான் பட்ட சிரமங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அவர் கூறியதாவது:

பிரிவினைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தது எனது பட்டிக்காட்டு கிராமம். 10 வயதாகும் வரை நான் பட்ட சிரமங்கள் ஏராளம். எனது கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, குடிநீர் வசதி இல்லை, டாக்டர் இல்லை, சாலைகள் இல்லை, தொலைபேசி வசதி இல்லை. இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் கிடைக்கும் அரைகுறை வெளிச்சத்தில் எனது பாடங்களை படிப்பேன். ஆனால் நாடு விடுதலை பெற்றபிறகு கிராமப்புறங்களில் கணிசமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இன்னும் பல இடங்களில், நான் சிறு வயதில் பட்டது போன்ற சிரமங்களை, எத்தனையோ பேர் அனுபவிக்கின்றனர். அதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றவுடன் இந்த நிலைமையை மாற்ற முற்பட்டது. பாரத் நிர்மாண் போன்ற நல்ல பல திட்டங்களை மேற்கொண்டது.

கிராமங்களை புனரமைக்கும் நோக்கில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

கிராமப்புற இந்தியாவின் தோற்றத்தை முழுமையாக மாற்றுவதே இந்த அரசின் லட்சியம். இதை கட்டாயம் நிறைவேற்றிக் காட்டுவோம். கடந்த 4 ஆண்டுகளில் பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளோம்.

இந்த அரசின் முயற்சிகளால் புதுமைமிக்க வளமான இந்தியா உருவாகப் போவது உறுதி என்றார் மன்மோகன் சிங்.

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்




* கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு கவனம்

* 6000 புதிய உயர்தர மாதிரி பள்ளிகள் அமைப்பு

* ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தது ஒரு பள்ளி

* பின்தங்கிய மாவட்டங்களில் 30 புதிய பல்கலைக்கழகங்கள், 8 புதிய இந்திய தொழில்நுட்பப் பயிலகங்கள், 7 புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 10 புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப பயிலகங்கள், 5 புதிய இந்திய அறிவியல் கழகங்கள், இரண்டு திட்டமிடல் மற்றும் கட்டடக் கலைப் பள்ளிகள், 10 தேசிய தொழில்நுட்ப பயிலகங்கள் மற்றும் 1000 புதிய பாலிடெக்னிக்குகள் அமைக்கப்படுகின்றன.

* வேளாண்துறைக்கு அளிக்கப்பட்ட கடனுதவி கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 81 ஆயிரம் கோடியிலிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

நிலவுக்கு இந்த ஆண்டில் இந்தியாவின் விண்வெளி ஓடம் "சந்திராயன்'

* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உறுதிமிக்க நடவடிக்கைகள்.

* அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக வளர்ந்த நாடுகளுடன் பேச்சு

* தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், குடிமக்கள் அமைப்புகள், சமூக, மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.

* ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த தொடர்ந்து அயராது முயற்சி

* தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் இந்தியா, பாகிஸ்தான் மக்களின் விரோதிகள்.

Friday, August 15, 2008

முதுகுளத்தூரில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் பஸ் நிலை யத்தில் முருகவேல் எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றினார். இதில் நல்லாசிரியர் அப்துல் காதர், பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி, அரசு மேல்நி லைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி ஆகிய வற்றை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண் டனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமு தேசியக் கொடி ஏற்றி னார். இதில் நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் சுகுமாறன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் ïனியன் அலுவலகத்தில் ïனியன் தலைவர் ஈஸ்வரி கருப்பையா தேசியக்கொடி ஏற்றினார். இதில் ஆணையாளர்கள் ஆதி மூலம், சுப்பிரமணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண் டனர். இதே போல பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதி காரி முனியாண்டி முன்னி லையில் பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் கொடி ஏற்றினார். இதில் துணை தலைவர் ஷாஜ கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு


சென்னை, ஆக. 14: ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 267.62 கோடி இழப்பீடாக வழங்கப்பட உள்ளது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமே பயனடைந்து வந்த இத்திட்டத்தில், பயிர்க்கடன் பெறாத விவசாயிகளையும் சேர்த்து அவர்கள் செலுத்தும் பிரிமீயம் தொகையில் 50 சதத்தை மானியமாக வழங்கிட 2006-07-ல் ரூ.8 கோடியும், 2007-08-ல் ரூ.15 கோடியும், 2008-09-ல் ரூ.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 2005-ல் 1 லட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2006-ல் 3 லட்சமாகவும், 2007-ல் 5.5 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை ரூ. 267.62 கோடி என இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 150.53 கோடியும், சிவகங்கை விவசாயிகளுக்கு ரூ. 57.73 கோடியும், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 27.96 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டு தொகையில் 50 சதம் மாநில அரசும், 50 சதம் மத்திய அரசும் ஏற்கின்றன. இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிட்டு அரசியல் லாபம் பெற முயற்சிப்பதற்கு, செவிசாய்க்காமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

""சுதந்திரம் காத்திடுவோம்''

""சுதந்திரம் காத்திடுவோம்''

வீ. சுந்தரமகாலிங்கம்



இப்போது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு,

அப்துல் கலாம் கண்ட கனவு

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில்

இந்தியா வல்லரசு ஆகணுமாம்!

நல்லரசாகவும் நிலவ வேண்டும்!

கொஞ்சம் எனக்குச் சந்தேகம்

அதற்குள் இந்திய தேசம்

மக்கள் தொகையில் முதன்மையாகலாம்!

(இ)லஞ்சம் பெறுவதிலோ உலகில்

கஞ்சத்தனமே இல்லாமல் அஞ்சாம்

இடமாகலாம்! நினைப்பது ஒன்றும்

நடப்பது வேரொன்றும் என்பதாம்

இதுதானோ! வேலை தேடுவோர் பட்டியலில்

இரண்டு கோடியாம்! வறுமைக்

கோட்டின்கீழ் முப்பது கோடியாம். இன்று!

நாட்டில் எங்கும் தீவிரவாதிகளின்

நடமாட்டம்! குண்டுகள் வெடித்துக்

கொண்டாட்டம் கண்டும், மக்கள்,

பயந்து கொண்டும் வாழ்கிறார்!

பயனுள்ள செயல்கள் எல்லாம் தயங்காமல் செயல்பட வேண்டும்

இந்தியா எதிலும் முந்திச் செல்ல

அணுசக்தி, ஒப்பந்தம் நிறைவேற்றிட

அணுகியதில், பாராளுமன்றம் நம்பிக்கை

வோட்டில் பெற்றதாம் வெற்றி!

கோடி கோடியாய்ப் பெற்றனராம் வோட்டுப் போட!

மூடிமூடி வைத்தாலும் மறைக்க முடியுமா?

விலைவாசியோ வானளவு உயர்ந்திட

மலைப்பாக இருக்கிறார் மக்கள்!

நிலையாக விலைவாசி நின்றிட

அலையாக ஆட்சியர் இயங்கிட

கலையாத ஆட்சி நிறுவிட

விலைபோகாமல் தேர்தலில் வென்றிட

தலையாய சேவைகள் செய்திடுவீர்!

உலைபோல உழைத்திடுவோம்! செதுக்கிய

சிலையான சுதந்திரத்தைக் காத்திடுவோம்!

சுதந்திரமே உன்னால்...!

சுதந்திரமே உன்னால்...!


சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி
என்று வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

நன்றி:முத்துக்கமலம்.

http://thamizheamude.blogspot.com/

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

கறுப்புக் கொடி ஏற்றுவதாக அறிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று அறிவித்துள்ளவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. வேல்ச்சாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

சுதந்திரதின நாளில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்று கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்செல்வனூர் ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.), முதுகுளத்தூர் அருகே பொந்தம்புளி கிராமத்தினரும் அறிவித்துள்ளனர்.

சுதந்திரதின நாளில் கறுப்புக் கொடி ஏற்றுவோம் என்பவர்கள் தேசத் துரோகிகள். இவர்களை குண்டர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்

ராமநாதபுரம், ஆக. 14: ஒரு சிலிண்டர் இணைப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு இல்லாத அனைத்துப் புதிய குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக ஒரு லிட்டர் மண்ணெண்ணை பெற்றுக் கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட், செப்டம்பர் 2008 ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் 2 லிட்டர் மண்ணெண்ணையுடன் கூடுதலாக ஒரு லிட்டர் சேர்த்து 3 லிட்டர் வீதம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்



ராமநாதபுரம், ஆக. 14: அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம், ரா.சந்திரசேகரன் ஆகியோர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அணுக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அவசியத்தையும், அவசரத்தையும் தெரிந்து கொள்ளும் அவர்கள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அந்தக் காரியத்தை செய்து கொடுப்பதற்காக உங்களிடம் லஞ்சம் கேட்பார்கள். இதற்கு நீங்கள் லஞ்சம் தரவேண்டியதில்லை. எனவே அவர்களைப் பற்றிய புகார்களை நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் ராமநாதபுரம் பாரதிநகர் ஓம்சக்தி கோயில் அருகில் கதவு எண் 2/1873 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உங்களுடைய வேலையை முடிக்காமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்தாலும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

முக்கியமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தாலும் அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ சொத்து வாங்கி இருந்தாலும் தெரிவிக்கலாம். சொத்து விபரம் (நிலம், வீடு, வீட்டுமனை, வங்கி சேமிப்பு, வாகனங்கள், டெபாசிட், லாக்கர், பாலிசிகள், தங்கம், வெள்ளி முதலிய ஆபரணங்கள், ரொக்கம் முதலியன) பற்றியும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து தபால் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு அலுவலக தொலைபேசி எண் 04567-230026 அல்லது இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம் (9443503477), ரா.சந்திரசேகரன் (9442268400) என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

அரசு தொழிற் பயிற்சிப் பள்ளியில் இலவச குறுகிய கால பயிற்சிகள்

ராமநாதபுரம், ஆக. 14: பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சிப் பள்ளியில் இலவசமாக குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முடிவில் அவர்கள் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் முதல்வர் க.மணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 45 நாட்கள் தினசரி மாலை 5 மணி முதல் 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முகாம் இம்மாதம் 18 ஆம் தேதி துவங்குகிறது.

வயது 14 முதல் 40 வரையும், 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வீட்டு வயரிங், கடைசலர், கியாஸ் வெல்டிங், ஆர்க் வெல்டிங், வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ்-1, பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், தொழிற்சாலைகளில் சான்றிதழ் இல்லாமல் வேலை செய்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் முதல்வர் சு.மணி தெரிவித்தார்.

முதுகுளத்தூரில் ரகளை: இளைஞர் கைது

முதுகுளத்தூரில் ரகளை: இளைஞர் கைது



முதுகுளத்தூர், ஆக. 14: முதுகுளத்தூரில் புதன்கிழமை ரகளை செய்த இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.

காக்கூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் துகுளத்தூர் பஸ் நிலையம் அருகே ரகளையில் ஈடுபட்டு. பொது மக்களுக்கு இடையூறு செய்தாராம். ரோந்து சுற்றிவந்த காவல் ஆய்வாளர் பாலமுருகன், தலைமைக் காவலர்கள் ஐந்துகாயம், செல்வராஜ் ஆகியோர் மணிகண்டனை கைது செய்தனர்.

Thursday, August 14, 2008

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது


முதுகுளத்தூர்,ஆக.15-

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட் டம் நடத்தப்போவதாக அறிவித்த தியாகியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தியாகி மனைவி

கடலாடி தாலுகா ஆப்ப னூர் கிராமத்தை சேர்ந்தவர் நீல மேகத்தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவ ரது மனைவி ராமு அம்மா ளுக்கு அரசு சார்பில் ஆப்ப னூரில் 5 செண்டு நிலம் வழங் கப்பட்டது.

ஆனால் இந்த இடத்தை அரசு சார்பில் ஊரணி வெட் டுவதற்காக ஒதுக்கியுள்ளனர். இந்த இடத்திற்கு பதிலாக அவருக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இது வரை வேறு இடம் ஒதுக்கி வழங்கப்படவில்லையாம்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் அவர் சுதந்திர தினத்தன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தனது குடும் பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அறிவித் திருந்தார். இதுகுறித்து கட லாடி கிராம நிர் வாக அதிகாரி முத்துவேல் போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கட லாடி போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ் பெக்டர் சிவஞானமூர்த்தி மற் றும் போலீசார் தேச விரோத செயல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராமு அம் மாள், அவரது மகன் கணே சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத் தனர்.

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி


தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்


ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் மாவட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்கா ளர் பட்டியல் குளறுபடியாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பலர் அலைக்கழிக்க வைக்கப்படுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை ஜூலை 24 முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அந்தந்த

வாக்குச்சாவடிகளில் பெறவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி, அங்கு பொதுமக்களிடம் பூர்த்தி செய்து பெறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, மாவட்ட நிர்வாகமும், பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றால் எந்த பட்டியலும் வைக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலை பார்த்தால் மட்டுமே தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். வாக்காளர் பட்டியலை அலுவலர்கள் காட்ட மறுப்பதாக பல இடங்களில் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதனால், வாக்குச்சாவடி மையங்கள் அல்லது சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு, குடிபெயர்ப்பு மற்றும் நீக்கம் உள்பட விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. விண்ணப்பங்கள் ஸ்டாக் இல்லை. ஜெராக்ஸ் கடையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் கூறி பொதுமக்களை அனுப்பி வைக்கின்றனர். ராமநாதபுரம் சபாநடேசய்யர் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் முதல் பல வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பம் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதுபோன்ற தவறுகளை சில அரசு அலுவலர்கள் தொடர்ந்து செய்து வருவ தால் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை தெரிந்து கொள்ள முடி யாமல் மக்கள் தினமும் ஏமாற்றம் அடைகின்றனர்.

கடந்த வாரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது நிறைய குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினால் வாக்காளர் பட்டியலின் குளறுபடி வெளிச்சத்திற்கு வரும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

சாயல்குடி அருகே நரிப்பையூர் பகுதியில் வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் மக்கள் நலத் திட்டப்பணிகளை ஜப்பான் தொண்டு நிறுவன அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.

முதுகுளத்தூர் வட்டார வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவன சார்பில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களில், பொது மக்களுக்காகப் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றி வருகின்றனர்.

குறிப்பாகக் குடிநீர் வசதி, ஊருணிகள் வெட்டிதல், சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து வருகின்றனர்.

சாயல்குடி மையத்தைச் சேர்ந்த நரிப்பையூரில் நடைபெற்றுள்ள மக்கள் நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட, ஜப்பான் நாட்டு தொண்டு நிறுவன அலுவலர்கள் சிகோ அகியோமா, டுமாகோ ஐடேகா ஆகியோர் தலைமையில் 20 பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜே. ஜெசுகரன் தலைமையில் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளிட பலரும் வரவேற்றனர்.

ஜப்பான் குழுவினர், நலத் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு பாராட்டினர்.

மேலும் நரிப்பையூர் ஜனசக்தி மகளிர் கூட்டமைப்பு பயிற்சி அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் ஜப்பான் குழுவினர் கண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜெசுகரன் தலைமயில், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் யோவான், இளங்கோவன், பால் முத்தையா மற்றும் திட்டப்பணியாளர்கள் பலரும் செய்திருந்தனர்.

Monday, August 11, 2008

முதுகுளத்தூரில் செல்போனை திருடியதாக கூறியதால் நண்பர்கள் இடையே தகராறு

முதுகுளத்தூரில் செல்போனை திருடியதாக கூறியதால் நண்பர்கள் இடையே தகராறு
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


முதுகுளத்தூர்,ஆக.11-

முதுகுளத்தூரில் நண்ப னின் செல்போனை திருடி விட்டதாக கூறிய தால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நண்பர்கள்

ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த கார்மேகம் என் பவரது மகன் முத்துப்பாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் விநாயகம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் விடுமுறை யில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் விநாயகம் முதுகுளத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி அவரும், அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி மற்றும் பாலா என்ற பாலகிருஷ்ணன், மங்கள விஜயன் ஆகியோர் ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு ஒரு ஆட் டோவில் சென்றனர்.

தகராறு

அங்கு விநாயகம் மட்டும் தனது மாமியார் வீட்டில் இறங்கி கொண்டு தனது நண் பர்களை கடையில் சாப்பிட கூறி அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பினாராம். இதைத் தொடர்ந்து சாப்பிட சென்ற இடத்தில் நண்பர்க ளிடையே தகராறு ஏற்பட் டது. அப்போது விநாயகத் தின் செல்போனை முத்துப் பாண்டி திருடி விட்டதாக மங்கள விஜயன் புகார் கூறி னாராம். இதனால் அவர்க ளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த மங் கள விஜயன் அருகில் கிடந்த கார் லீவரை எடுத்து முத்துப் பாண்டியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து பால கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துப்பாண்டியை குத்த முயன்றாராம்.

கைது

உடனே சுதாரித்துக் கொண்ட முத்துப்பாண்டி யன் படுகாயத்துடன் தப்பி ஓடி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மங்கள விஜயன், பாலகிருஷ் ணன் ஆகியோரை கைது செய்தனர். சிகிச்சைக்காக முத்துப்பாண்டியை முதுகு ளத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

Sunday, August 10, 2008

முதுகுளத்தூர் மவ்லவி அப்துல் காதர் ஆலிம் இல்லத் திருமணம்! பேராசிரியர் கே.எம்.கே. தலைமையில் நடக்கிறது !!




துபாய் அமீன் சகோதரர் திருமணம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

www.mudukulathur.com


மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிமின் புதல்வரும்,துபாய் அமீன் சகோதரரும், முதுகுளத்தூர் திடல் மன்சூர் அஹமது சேட் ( முதுவை ரோஸ் லேடிஸ் கார்னர் ஹபிபுல்லாஹ் சகோதரர் ) மைத்துனருமான

ஏ. ரஸீன் அஹமது பி.இ. ( பொறியாளர், Bemaco - கத்தார் ) மணமகனுக்கும்

ஸ்ரீ வில்லிபுத்தூர் என்.ஜி.என். காஜா மைதீன் அவர்களின் மகளுக்கும் திருமணம் இன்ஷா அல்லாஹ் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏ.எம். முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில் 20.08.2008 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இத்திருமண விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ. அவர்கள் தலைமை தாங்க இருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்,இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி, டாக்டர் ஏ. அமீர்ஜஹான், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மன்பஈ. முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பஈ, முஸ்லிம் லீக் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மணமக்கள் ஹக்கில் அனைவரும் துஆ செய்ய அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், 41 அமெரிக்கன் மிஷன் சர்ச் தெரு, மதுரை 625 001
தொலைபேசி : 0452 - 2337990 / 98 421 58 543

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

சாலை வசதி செய்துதராத தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு; இராமநாதபும் மாவட்டம் முதுளத்தூர் வட்டம் ஏனாதி ஊராட்சியை சேர்ந்தது பொந்தம்புளி கிராமம் இங்கு 100 குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த கிராம மக்களின் பிரதானதொழில் விவசாயம் ஆகும். இதனால் ஊர் மக்கள் கிராமத்திலேயே உள்ளனர். ஆனால் இவர்களால் எங்குமே வெளியில் செல்ல முடிவதிலை. காரணம் சாலை வசதி இல்லாததே இக்கிராம மக்களும் அனைத்து அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் சாலை வசதி கோரி மனு கொடுத்தும் பயனில்லை. ஒரு ஊரே எந்தவித வசதியும் இன்றி தீவு போல் காட்சியளிக்கின்றது. அரசும், அதிகாரிகளும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தலைவர் தங்கமுத்து தலைமையில் வருகிற ஆகஸ்ட் 15_ந் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்ற உள்ளனர்.

மேலும் தங்கள்ளது குடும்ப அட்டைகளையும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்க கிராம மக்கள் முடிவுசெய்துள்ளனர்.

Saturday, August 9, 2008

முதுகுளத்தூர் அருகே வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்தந்தை புகார்

முதுகுளத்தூர் அருகே வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்தந்தை புகார்

முதுகுளத்தூர், ஆக.9-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட முத்து விசயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. அவரது மகன் மார்ட்டின் (வயது 25). திருமணமாகாத இவர் சண்டிகாரில் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ் காரராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு தனது தாயாருக்கு உடல்நிலைசரி இல்லை என்று மேல் அதிகாரியிடம் விடுமுறைக்கான கடிதம் கொடுத்து ஊருக்கு செல்வதாக கூறினார்.

நேற்று சண்டிகாரில் இருந்து அந்தோணிக்கு ஒரு தந்தி வந்தது. அதில் உங்கள் மகனை உடனே பணிக்கு அனுப்புங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது தான் மார்ட்டின் சண்டிகாரில் இல்லாத விசயம் அந்தோணிக்கு தெரியவந்தது.

ஆனால் மார்ட்டின் இதுநாள்வரை ஊருக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அந்தோணி கீழத்தூவல் போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில், மாயமான தனது மகன் மார்ட்டினை கண்டு பிடித்து தரும்படி கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டின் என்ன ஆனார்ப எங்கு சென்றார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெசுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி

மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெசுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி
அந்தந்த ïனியன் அலுவலகங்களில் நடக்கிறது


ராமநாதபுரம்,ஆக.9-

சுய உதவி குழுக்களை தரம் பிரிக்கும் பணி அந் தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வருகிறது.

வங்கி கடன்

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள சுய உதவி குழுக்க ளுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கவும், பயிற் சிகள் வழங்கவும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வச திகள் ஏற்படுத்தி கொடுக்க வும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட கண்காட்சி கள் நடத்தவும் பொன் விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராமநாத புரம் மாவட்டத் தில் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்க குழுக் களை தரம் பிரிக்கும் பணி அந்தந்த ïனியன் அலுவல கங்களில் நடைபெற்று வரு கிறது.

ïனியன் வாரியாக

வருகிற 12-ந்தேதி மண்டபத் திலும், 13-ந்தேதி கடலாடியி லும், 14-ந்தேதி நயினார் கோவிலும், 20-ந்தேதி முது கு ளத்தூரிலும், 21-ந்தேதி பரமக் குடியிலும், 22-ந்தேதி திருப்புல் லாணியிலும், 26-ந்தேதி ஆர். எஸ்.மங்கலத்திலும், 27-ந் தேதி போகலூரிலும் நடை பெறு கிறது. இதுவரையிலும் தரம் பிரிக்கப்படாத அனைத்து சுய உதவி குழுக்களும் சம்பந்தப் பட்ட நாளில் அந்தந்த ïனி யன் அலுவலகங்களில் நடை பெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ் குமார் தெரிவித் தார்.

ஒரு சிலிண்டர் பெறும் பயணாளிகளுக்கு தலா ரூ.30 மானியம் ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ஒரு சிலிண்டர் பெறும் பயணாளிகளுக்கு தலா ரூ.30 மானியம் ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம் ஆக 9.

தமிழக அரசு 01.07.08 முதல் ஒரு உருளை(சிலிண்டர்)எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு எரிவாயு உருளை விற்பனை விலையில் ஒரு உருளைக்கு ரூ.30/_மானியமாக வழங்க அரசானைண பிரப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 08ம் மாதத்தில் ஒரு உருளை பெறும் பெறும் பயனாளிகளுக்கு ரூ.8,57,340/_மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 08ம் மாதத்திற்கும் ஒரு உருளை பெறும் பயனாளிகள் ரூ.30/_மானியம் பெற்றுக்கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் ஆக 9.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2008 மாதத்திற்க்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.8.08 அன்று

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக்கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் தெரிவிக்கிறார்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி விழாவில் இலவச மிதிவண்டி வழங்கல்

321 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் அமைச்சர் சுப.தங்கவேலன் வழங்கினார்

ராமநாதபுரம் ஆக 9.,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மேல்நிலை வகுப்பு பயிலும் 321 மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகளை குடிசை மாற்று மற்றும் இடவசதிக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் சுப.தங்கவேலனஅ வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிர்லோஷ்குமார் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அமைச்சர் பேசும்போது

தெரிவித்ததாவது: தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகள் இலவச பேருந்து அனுமதி அட்டை போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.தற்போது மிதி வண்டிகள் இலவசமாக மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கல்வித்துறையின் வளர்ச்சிக்காக மாணவர்களின் நலன் கருதி அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு முன்னேற்றத்திட்டங்களுள் ஒன்றாக இத்திட்டம் அமைந்துள்ளது.

மாணவர்களை மென்மேலும் ஊக்குவிக்க கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1000மாணவர்களுக்கு மடி கணினிகளை அரசு வழங்கியுள்ளது.மேலும் எல்காட் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் கணினி கருவிகள் மாணவர்களுக்கு வழங்கவும் அரசு அறிவித்துள்ளது என்றார்.

விழாவில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.முருகவேல் முன்னிலையுரையாற்றினார்.அபிராமம் பேரூராட்சி தலைவர் கணேசன்,முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஏ.எம்.முகமது இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள்.

Friday, August 8, 2008

மாவட்ட யோகாசன போட்டி ஆக.16ல் நடக்கிறது

மாவட்ட யோகாசன போட்டி ஆக.16ல் நடக்கிறது

ராமநாதபுரம், ஆக.8: மாவட்ட அளவிலான யோகாசனப்போட்டி ஆக.16ம் தேதியன்று ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டரங்கில் நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட யோகாசன சங்க பயிற்சியாளர் காசிநாததுரை கூறியதாவது: மாவட்ட அளவிலான யோகாசன போட்டி வரும் 16ம் தேதி துவங்குகிறது. மாவட்ட யோகாசன சங்கமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் இப்போட்டி ராமநாதபுரம் சீதக்காதிசேதுபதி விளையாட்டரங்கில் நடக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்கலாம். 5 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

போட்டி விபரம் அறிய 9865506506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.