Wednesday, January 14, 2009

பணம் இரட்டிப்பு மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்டோர் புகார் செய்யலாம்

பணம் இரட்டிப்பு மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்டோர் புகார் செய்யலாம்

சென்னை, ஜன. 13: பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்த கும்பலால் பாதிக்கப்பட்டோர் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம்.

திருச்சி ரெங்கா நகரைச் சேர்ந்தவர் அனுராதா (28). இவரது கணவர் ரவிச்சந்திரன் (29). இத்தம்பதியுடன் திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா (33) மற்றும் மதுரவாயல் முஸ்தபா (33) உள்ளிட்டோர் சேர்ந்து தமிழகத்தில் பலரிடம் பணத்தைப் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இவர்கள் மீது மயிலாப்பூர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீஸôர் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இக் கும்பலால் பாதிக்கப்பட்டோர் தகுந்த ஆதாரங்களுடன் "காவல்துறை கண்காணிப்பாளர், சிட்கோ எலக்ட்கானிக்ஸ் வளாகம், பிளாக்-3, அறை எண்- 18, முதல் மாடி, சிபிசிஐடி அலுவலகம், கிண்டி' என்ற முகவரிக்கு புகார் மனு அளிக்கலாம். தொலை பேசி எண்- 22502500.