Sunday, July 20, 2008

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

தண்ணீர் சிக்கனம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

சென்னை, ஜூலை 19: தண்ணீர் பயன்பாடு பற்றி பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ஹென்கெல் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுச் சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

10, 11, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில் தண்ணீரின் பயன்பாடு குறித்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி இதற்கு அனுப்பலாம்.

தண்ணீர் சிக்கனம், மறுசுழற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவது இதன் நோக்கம்.
2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுதி Henkel.Ecopetition@in.henkel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு henkel.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது

முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது


ராமநாதபுரம், ஜுலை.20-

ராமநாதபுரம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத் திற்கு ரூ.2 லட்சத்தை நன்கொடையாளர்கள் கலெக்டரிடம் வழங்கி னர்.

சங்க கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கூட்டம் கலெக்டர் கிர் லோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணை தலை வர் மகளிர் திட்ட அலுவலர் டிïர்சியஸ், அமைப்பாளர் மாவட்ட பிற்பட்ட நல அலு வலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவு ரவ செயலாளர் முகமது ஜலீல், இணை செயலாளர்கள் டாக் டர் பாத்திமா சின்னதுரை, தொழில் அதிபர் குர்ரத் ஜமீலா, உறுப்பினர்கள் கீழக் கரை மரியம் ஹபீப், ராமநா தபுரம் டாகடர் சபீக்கா சாதிக், கீழக்கரை தாசிம்பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூது ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் கிர் லோஷ்குமார் பேசியதாவது:- சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு உதவும் பொருட்டு மாவட் டங்களில் தனி சங்கம் ஏற்ப டுத்த அரசு உத்தரவிட்டுள் ளது. நன்கொடை யாளர் கள் மூலம் பெறப்படும் நன் கொடையால் நிதி ஆதாரத் தினை இந்த சங்கம் ஏற்படுத் தும். சங்கத்திற்காக திரட்டப் படும் நிதி ஆதாரத்திற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் விதவை களுக்கு மாதாந்திர உதவி தொகை அளித்தல், கைவினை பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல், சிறுதொழில் தொடங்க உதவி, மருத்துவ உதவிகள் போன்றவை மேற் கொள்ளப்படும்.

ரூ.2 லட்சம்

18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண்கள் இந்த சங் கத்தில் உறுப்பினராக சேர லாம். பேட்ரன் உறுப்பினர் களுக்கு ரூ.5 ஆயிரம், ஆயுட் கால உறுப்பினர்களுக்கு ரூ.ஆயிரம், சாதாரண உறுப் பினர் களுக்கு ரூ.500 என்ற அளவில் கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் பேட்ரன் உறுப்பினர்களாகவும், 4 பேர் ஆயுட்கால உறுப்பினர் களா கவும் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசி னார். கூட்டத்தில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஷாஜ கான், கீழக்கரை தெற்குதெரு ஜமாத் லாகீதுகான், சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக் தாவூது ஆகி யோர் கலந்து கொண்டு பேசி னர். சீதக்காதி அறக்கட்டளை சார்பில் தொழில் அதிபர் குர் ரத் ஜமீலா, சேது என்ஜினீய ரிங் கல்லூரி தாளாளர் முக மது ஜலீல் ஆகியோர் முஸ் லிம் மகளிர் உதவும் சங்கத் திற்கு தலா ரூ.1 லட்சத்துக் கான காசோலையை கலெக் டர் கிர்லோஷ்குமாரிடம் வழங்கினர்.

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழா

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழா
பூக்குழி இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக் தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செல்லியம்மன் கோவில்

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்குவது செல்லியம்மன் கோவில். இந்த கோவிலின் 32வது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 10-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங் கியது. இதைத்தொடர்ந்து 300க்கும் அதிக மான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த னர்.

10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி அம் மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

பூக்குழி

விழாவின் முக்கிய நாளான நேற்று பக் தர்கள் விநாயகர் ஆலயத்தில் இருந்து பூ தட்டுடன் ஊர்வலமாக புறப்பட்டு செல்லி யம்மன் கோவிலை வந்தடைந்தனர். ஏராள மான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தது டன் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டி ருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதன் பின்னர் முளைப்பாரியை ஆண், பெண் பக்தர்கள் தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சங்கராண்டி ஊரணியில் கரைத்தனர். விழாவையொட்டி இன்ஸ்பெக்டர் பால முரு கன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்