Thursday, May 14, 2009

பிளஸ் 2 தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள்

சென்னை, மே 14- தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், 4 மாணவர்கள் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

2 மாணவர்கள் 1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர்கள்:

தென்காசி பாரத் மாண்டீúஸôரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ரமேஷ்

கரூர் சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரவீன்

ஈரோடு பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் லிங்கேஷ்

ஊத்தங்கரை எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி சிஞ்சு

1182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள்:

ஒசூர் விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா

தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் சுகவனேஷ்

1181 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள்:

திருநெல்வேலி வி.கே.புரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெஸிமா சுலைகா,

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி,

நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் வைத்தீஸ்வரன்,

ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மீரா ரஷியா

வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்...

வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்...

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 84.4 சதவீதம் பேர் தேர்வாகி இருந்தனர். ஆனால் தற்போது இது லேசான சரிவை சந்தித்துள்ளது. இம்முறை 83 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் இம்முறையும் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 85.5 சதவீதமும், மாணவர்களில் 80.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

200க்கு 200 பெற்ற மாணவர்கள் :

இயற்பியல் - 245 மாணவர்கள் .
வேதியியல் - 467.
தாவரவியல் - 6
விலங்கியல் - 1.
உயிரியல் - 218
கணிதம் - 4060
கம்ப்யூட்டர் அறிவியல் - 276
வணிகவியல் - 285
வணிக கணிதம் - 198
கணக்கியல் - 621.

மொத்தம் 60 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர்: 3,83,762 பேர்.

மாணவர்களில் 80.3 சதவீதம் பேரும், மாணவிகளில் 85.5 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.