முதுகுளத்தூரில் பள்ளி மாணாக்கர்களுக்கு தீனிய்யாத் தேர்வு
முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கான தீனிய்யாத் தேர்வு 08.02.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இத்தேர்வுகளுக்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமும், டியூசன் சென்டரின் தாயகப் பிரதிநிதியுமான மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ தலைமைக் கண்காணிப்பாளராக இருந்து நடத்தினார்.
திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ தேர்வுகள் சிறப்புற நடைபெற உறுதுணையாய் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இஸ்லாமிய பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் செய்திருந்தார்.
இப்பணிகளுக்கு உறுதுணையாய் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அங்கத்தினர்களுக்கு நன்றி தெரிவித்து துஆ செய்யப்பட்டது.
Sunday, February 8, 2009
Subscribe to:
Posts (Atom)