மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் 28_ம் தேதி குறை தீர்ப்பு முகாம்
மதுரையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் 28_ம் தேதி பாஸ்போர்ட் குறை தீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரையிலான காலத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்து, எந்த விதத் தகவலும் கிடைக்கப் பெறாதவர்கள் இந்த முகாமில் பங்கேற்று தமது குறைகளைத் தெரிவிக்கலாம். பாஸ்போர்ட் குறை தீர்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள வரவேற்பு அரங்கில் துவங்கும் என்று மதுரை பாஸ்போர்ட் அலுவலர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment