Wednesday, July 16, 2008

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்
பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்


முதுகுளத்தூர், ஜுலை.16-

முதுகுளத்தூர் அருகே நள்ளிரவில் 240 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அரிசி கடத்தல்

கடலாடி அருகே உள்ள பொதிகுளத்தில், நள்ளிரவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த ஒரு கும்பல் 240 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை பின் னால் நின்ற லாரியில் கடத்தி கொண்டிருந்தது. இதையறிந்த கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டு போய் பார்த்தனர்.

இது பற்றி கிராம மக்கள் கேட்டதற்கு அரிசி கடத்தல் கும்பல் கூறிய பதில் அவர் களுக்கு சந்தேகத்தை ஏற்படுத் தியது. உடனே அவர்கள் ராம நாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வேல னுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தர வின் பேரில் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு நந்த குமார் மேற்பார்வையில் கட லாடி போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சிவஞா னமூர்த்தி, ஏட்டுகள் சக்திவேல் முருகன், முத்தையா, முத்துக் குமார் ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று அந்த கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர்.

கைது

விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த வேல்ச்சாமி மகன் ராஜா (வயது 28), குமாரசாமி மகன் லோகநாதன்(28), லாரி டிரைவர் சுரேஷ், கடலாடி அருகே உள்ள நரசிங்க கூட் டம் கிராமத்தை சேர்ந்த கோட் டைச்சாமி(52), அருப்புக் கோட்டை சோமசுந்தரம் மகன் பிரபாகரன்(46) ஆகியோர் என்பதும், இவர்கள் ரேஷன் அரிசியை பொள்ளாச்சிக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கட லாடி போலீசார் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு விருதுநகர் மண்டல அத்தியா வசிய உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் விரைந்து வந்து அரி சியை கைப்பற்றி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார் ஆகியவற்றை கடலாடியில் உள்ள சிவில் சப்ளை கிடங் கிற்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து கைதான 5 பேரையும் மேல் விசாரணைக்காக விருதுநகருக்கு அழைத்து சென்றார்.

No comments: