துபாய் நூலகமும், முதுகுளத்தூர் நூலகமும்
துபாயில் ஓய்வு நேரங்களில் பொது நூலகத்துக்குச் செல்வது வழக்கம். இன்று துபாயின் ரசிதியா பகுதியில் உள்ள பொது நூலகத்திற்குச் சென்ற போது நூலக அலுவலர்கள் மராமத்துப் பணிகள் நடைபெறுவதால் நூலகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது. மேலும் அதற்காக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைப் பொறுத்தருள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது எங்களது ஊரான முதுகுளத்தூர் நூலகம் தான். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் ஊரில் இருந்த போது நூலகம் எப்பொழுது திறக்கப்படும் எனபது இறைவனுக்கே வெளிச்சம். சில நேரங்களில் நாங்களே சாவியை திறந்த அனுபவமும் உண்டு.
வாசகர்களைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாத நூலகர்.
தற்பொழுது எப்படியோ ? எனினும் நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாதது பெருத்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் முதுகுளத்தூர் நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment