Thursday, August 28, 2008

இளைஞர் நற்பணிமன்ற விழா

இளைஞர் நற்பணிமன்ற விழா



கடலாடி, ஆக. 28: கடலாடியில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றமும், நேரு யுவகேந்திராவும் இணைந்து சுதந்திர தினவிழா, தேசிய விழிப்புணர்வு விழா, சாதி,மத நல்லிணக்க விழா, இளையோர் எழுச்சி விழா, நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற 12-ம் ஆண்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மன்றத் தலைவர் எல். விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ம. பாலசுப்பிரமணியன், கடலாடி மறவர் சமூக உறவின்முறை தலைவர் எம். மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி. நாகராஜன் வரவேற்றார்.

விழாவில் கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் த. ராஜசேகர், "தேசிய வலிமை' மாத இதழ் ஆசிரியர் வே. சுவாமிநாதன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் என்.கே. முனியசாமி பாண்டியன், நேதாஜி ஜெயபாரத லட்சிய இயக்கச் செயலர் வத்தலகுண்டு கவிஞர் செ. செந்தில், தாலுகா மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் வி. மயில்வாகனன், நேதாஜி தேசிய இயக்கச் செயலர் பொறியாளர் சு.க. கமல் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

கவிஞர் முகாரா "தொடக்கம்' எனும் தலைப்பில் கவிதை வாசித்தார். சிக்கனத்தை கடைப்பிடிப்பதில் சிறந்தவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி எம். சசிரேகா (10-ம் வகுப்பு), கே. அரியநாச்சி (பிளஸ் 2) ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பத்திர எழுத்தர் க. முத்துராமலிங்கம், முன்னாள் ராணுவவீரர் எம். மீனாட்சி சுந்தரம், ஊராட்சி முன்னாள் தலைவர் சி.அ.ச. அய்யம்பெருமாள் நாடார், நகர் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ஆர்.எஸ். ராமலிங்கம், காமராஜர் நர்சரி பள்ளித் தாளாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ப. பாலமுருகன் நன்றி கூறினார்.

No comments: