முதுகுளத்தூரில் போக்குவரத்து துவங்கியது
முதுகுளத்தூர், நவ. 2: முதுகுளத்தூர் பகுதியில் பதற்றம் தணிந்து, போக்குவரத்து துவங்கியது. மக்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.
முதுகுளத்தூர் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அக.29-ந் தேதி இரவு நிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து நவ.1-ந் தேதி வரையிலும் நீடித்தது. இதனால் பொதுமக்கள் வெளியூர்கள் சென்று, வர முடியாமல் அவதிப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பையடுத்து, நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல் ஓடின.
முதுகுளத்தூரில் இருந்தும், முதுகுளத்தூர் வழியாகவும் ஓடும் 41 பஸ்களில் 39 பஸ்கள் ஓடுகின்றன என்று வட்டாட்சியர் ரெங்கன் கூறினார்.
www.mudukulathur.com
Saturday, November 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment