Sunday, July 20, 2008

முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது

முஸ்லிம் மகளிர் சங்கத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது


ராமநாதபுரம், ஜுலை.20-

ராமநாதபுரம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத் திற்கு ரூ.2 லட்சத்தை நன்கொடையாளர்கள் கலெக்டரிடம் வழங்கி னர்.

சங்க கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கூட்டம் கலெக்டர் கிர் லோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணை தலை வர் மகளிர் திட்ட அலுவலர் டிïர்சியஸ், அமைப்பாளர் மாவட்ட பிற்பட்ட நல அலு வலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவு ரவ செயலாளர் முகமது ஜலீல், இணை செயலாளர்கள் டாக் டர் பாத்திமா சின்னதுரை, தொழில் அதிபர் குர்ரத் ஜமீலா, உறுப்பினர்கள் கீழக் கரை மரியம் ஹபீப், ராமநா தபுரம் டாகடர் சபீக்கா சாதிக், கீழக்கரை தாசிம்பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூது ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் கிர் லோஷ்குமார் பேசியதாவது:- சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு உதவும் பொருட்டு மாவட் டங்களில் தனி சங்கம் ஏற்ப டுத்த அரசு உத்தரவிட்டுள் ளது. நன்கொடை யாளர் கள் மூலம் பெறப்படும் நன் கொடையால் நிதி ஆதாரத் தினை இந்த சங்கம் ஏற்படுத் தும். சங்கத்திற்காக திரட்டப் படும் நிதி ஆதாரத்திற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் விதவை களுக்கு மாதாந்திர உதவி தொகை அளித்தல், கைவினை பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல், சிறுதொழில் தொடங்க உதவி, மருத்துவ உதவிகள் போன்றவை மேற் கொள்ளப்படும்.

ரூ.2 லட்சம்

18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண்கள் இந்த சங் கத்தில் உறுப்பினராக சேர லாம். பேட்ரன் உறுப்பினர் களுக்கு ரூ.5 ஆயிரம், ஆயுட் கால உறுப்பினர்களுக்கு ரூ.ஆயிரம், சாதாரண உறுப் பினர் களுக்கு ரூ.500 என்ற அளவில் கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் பேட்ரன் உறுப்பினர்களாகவும், 4 பேர் ஆயுட்கால உறுப்பினர் களா கவும் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசி னார். கூட்டத்தில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஷாஜ கான், கீழக்கரை தெற்குதெரு ஜமாத் லாகீதுகான், சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக் தாவூது ஆகி யோர் கலந்து கொண்டு பேசி னர். சீதக்காதி அறக்கட்டளை சார்பில் தொழில் அதிபர் குர் ரத் ஜமீலா, சேது என்ஜினீய ரிங் கல்லூரி தாளாளர் முக மது ஜலீல் ஆகியோர் முஸ் லிம் மகளிர் உதவும் சங்கத் திற்கு தலா ரூ.1 லட்சத்துக் கான காசோலையை கலெக் டர் கிர்லோஷ்குமாரிடம் வழங்கினர்.

No comments: