Sunday, July 20, 2008

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழா

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழா
பூக்குழி இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக் தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செல்லியம்மன் கோவில்

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்குவது செல்லியம்மன் கோவில். இந்த கோவிலின் 32வது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 10-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங் கியது. இதைத்தொடர்ந்து 300க்கும் அதிக மான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்த னர்.

10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி அம் மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

பூக்குழி

விழாவின் முக்கிய நாளான நேற்று பக் தர்கள் விநாயகர் ஆலயத்தில் இருந்து பூ தட்டுடன் ஊர்வலமாக புறப்பட்டு செல்லி யம்மன் கோவிலை வந்தடைந்தனர். ஏராள மான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தது டன் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டி ருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதன் பின்னர் முளைப்பாரியை ஆண், பெண் பக்தர்கள் தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சங்கராண்டி ஊரணியில் கரைத்தனர். விழாவையொட்டி இன்ஸ்பெக்டர் பால முரு கன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

No comments: