Thursday, July 17, 2008

முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க கூட்டம்

முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க கூட்டம்



முதுகுளத்தூரில் உள்ளாட்சித்துரை ஊழியர் சங்க அமைப்புக்கூட்டம் செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. கிராமபபுரத்தில் வேலை செய்யும் துப்புறவுத் தொழிலாளர்க்கு குறைந்த பட்ச கூலி ரூ. 3 ஆயிரம் வழங்கவேண்டும், அனைத்து துப்புரவு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சீருடை வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மாவட்ட பொறுப்பாளராக அய்யாத்துரை, தாலுகா செயலாளராக சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவராக கோவிந்தசாமி, விவசாய சங்க தாலுகா செயலாளராக பி.கே. முருகேசன், தலைவராக செபஸ்தியான், செயலாளராக செந்தில், பொருளாளராக பாண்டி, துணைத்தலைவராக பாண்டியன், துணைச் செயலாளராக சி.சிறுவன் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments: