Thursday, July 17, 2008

முதுகுளத்தூரில் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார் முருகவேல் எம்.எல்.ஏ.

முதுகுளத்தூரில் சிறிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார் முருகவேல் எம்.எல்.ஏ.


முதுகுளத்தூரில் உள்ள பெரியார் நகர், கந்தசாமிபுரம் இப்பகுதிகளில் உள்ள பாலங்கள், ரோடுகள் சேதம் அடைந்திருந்தன. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனையடுத்து முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல் எம்.எல்.ஏ. தனது தொகுதி நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பாலம் கட்ட நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டினர்.

அதேபோல் முதுகுளத்தூரில் உள்ள கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: