Sunday, August 10, 2008

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

சாலை வசதி செய்துதராத தி.மு.க. அரசை கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராமமக்கள் முடிவு செய்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு; இராமநாதபும் மாவட்டம் முதுளத்தூர் வட்டம் ஏனாதி ஊராட்சியை சேர்ந்தது பொந்தம்புளி கிராமம் இங்கு 100 குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த கிராம மக்களின் பிரதானதொழில் விவசாயம் ஆகும். இதனால் ஊர் மக்கள் கிராமத்திலேயே உள்ளனர். ஆனால் இவர்களால் எங்குமே வெளியில் செல்ல முடிவதிலை. காரணம் சாலை வசதி இல்லாததே இக்கிராம மக்களும் அனைத்து அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் சாலை வசதி கோரி மனு கொடுத்தும் பயனில்லை. ஒரு ஊரே எந்தவித வசதியும் இன்றி தீவு போல் காட்சியளிக்கின்றது. அரசும், அதிகாரிகளும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தலைவர் தங்கமுத்து தலைமையில் வருகிற ஆகஸ்ட் 15_ந் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்ற உள்ளனர்.

மேலும் தங்கள்ளது குடும்ப அட்டைகளையும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்க கிராம மக்கள் முடிவுசெய்துள்ளனர்.

No comments: