முதுகுளத்தூர் அருகே வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்தந்தை புகார்
முதுகுளத்தூர், ஆக.9-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட முத்து விசயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. அவரது மகன் மார்ட்டின் (வயது 25). திருமணமாகாத இவர் சண்டிகாரில் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ் காரராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு தனது தாயாருக்கு உடல்நிலைசரி இல்லை என்று மேல் அதிகாரியிடம் விடுமுறைக்கான கடிதம் கொடுத்து ஊருக்கு செல்வதாக கூறினார்.
நேற்று சண்டிகாரில் இருந்து அந்தோணிக்கு ஒரு தந்தி வந்தது. அதில் உங்கள் மகனை உடனே பணிக்கு அனுப்புங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது தான் மார்ட்டின் சண்டிகாரில் இல்லாத விசயம் அந்தோணிக்கு தெரியவந்தது.
ஆனால் மார்ட்டின் இதுநாள்வரை ஊருக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அந்தோணி கீழத்தூவல் போலீசில் புகார் செய்தார்.
புகார் மனுவில், மாயமான தனது மகன் மார்ட்டினை கண்டு பிடித்து தரும்படி கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டின் என்ன ஆனார்ப எங்கு சென்றார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment