Tuesday, September 23, 2008

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,

பரமக்குடி மாணவன் மர்ம சாவு:இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம்,
ஆர்ப்பாட்டம் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்


பரமக்குடி,செப்.24-

பரமக்குடி மாணவன் மர்ம சாவு சம்பவத்தையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

பரமக்குடி பள்ளி மாணவன் ராஜா மஸ்தான் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம் பவத்துக்கு கண்டனம் தெரி வித்தும், சம்பந்தப்பட்ட குற்ற வாளி மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பரமக் குடியில் ஆர்ப்பாட்டம் மற் றும் கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று இஸ்லா மிய அமைப்புகள் அறிவித்தி ருந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட ஐக்கிய ஜமாத், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழ கம், முஸ்லிம் லீக், தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை, தேசிய லீக், உலமாக்கள் சபை ஆகிய அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து ஊர் வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் தரைப்பாலம், சின்னக்கடை, கீழ பள்ளி வாசல் தெரு, சுண்ணாம்பு காரத் தெரு, பஸ் நிலையம், ஆர்ச், காந்தி சிலை, உழவர் சந்தை, ஐந்துமுனை பகுதி, இளையான்குடி ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழி யாக பரமக்குடி தாலுகா அலு வலகத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டம்

அதனை தொடர்ந்து பர மக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை 2 நாட்களுக் குள் கைது செய்வோம் என்று கூறி இது வரை நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரை கண்டிக்கிறோம். இறந்த மாணவன் ராஜா மஸ்தான் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

மேலும் அவரது குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்ப வம் குறித்து வழக்கு பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றவாளியை கைது செய்யும் வரை இறந்த மாண வனின் உடலை வாங்க மாட் டோம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் பரமக்குடி தாசில்தார் அண்ணாமலையி டம் மனு கொடுக்கப்பட்டது.

பாதுகாப்பு

ஆர்ப்பாட்டத்தில் உலமாக் கள் சபை சார்பில் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் சார்பில் தசுருதீன், த.மு.மு.க. சார்பில் சலிமுல்லாகான், பாளை ரபீக், மனித நீதி பாசறை சார்பில் ஜமீல், மாவட்ட ஐக் கிய ஜமாத் சார்பில் முகமது ஜமால், தவ் ஹீது ஜமாத் சார் பில் ஆரிப், தேசிய லீக் சார் பில் நூருல் ஆலிம், ராமநாத புரம் நகரசபை உறுப்பினர் ராஜாஉசேன், எமனேசுவரம் ஜமாத் சார்பில் ஆலம், பரமக் குடி நகரசபை கவுன்சிலர் அப்துல் மாலிக், நூருல் அமீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் துரைசாமி ஆகியோர் பரமக்குடியில் முகாமிட்டு இருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலை மையில் 13 இன்ஸ்பெக்டர் கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.

விடுமுÛ
ஆர்ப்பாட்டத்தையொட்டி பரமக்குடி நகரில் முஸ்லிம்களின் கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. மேலும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, கீழ முஸ்லிம் நர்சரி பள்ளி, மேல முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, எமனேசுவரம் ஜவ்வாது புல வர் மெட்ரிக் பள்ளி உள்பட இஸ்லாமிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந் தது.

No comments: