Tuesday, September 23, 2008

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மாணவன் இறந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை


ராமநாதபுரம்,செப்.24-

பரமக்குடி மாணவன் இறந்த சம்பவத்தில் குற்ற வா ளியை உடனே கைது செய்யக்கோரி ராமநாத புரம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அதி காரிகள் மாணவர்களி டம் சமரச பேச்சு வார்த் தையில் ஈடுபட்டனர்.

மாணவன் சாவு

பரமக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் ராஜாமஸ்தான் (வயது 15) மர்மமான முறை யில் இறந்து கிடந்தான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பலியான மாணவன் தொடர்பான வழக் கில் உண்மை குற்ற வாளிகளை கைது செய்யக்கோரி நேற்று ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவ -மாணவிகள் திடீர் ஸ்டிரைக் கில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாண விகள் அனைவரும் வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் பகுதிக்கு வந் தனர்.

மறியல்

அங்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் அனைவரும் கோஷமிட்ட னர். பின்பு சாலை மறியல் செய் வதென கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். இது பற்றி தகவலறிந்ததும் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் வரு வாய் துறை அதிகாரிகள் கல் லூரிக்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் தரப்பில் குற்றவாளிகளை உட னடியாக கைது செய்ய வேண் டும், எப்.ஐ.ஆர். நகல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது குற்ற வாளிகளை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. எப்.ஐ. ஆர், நகல் புகார் மனுதார ரிடமே வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் விளக்கி கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

No comments: