Wednesday, September 24, 2008

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி


ராமநாதபுரம், செப். 23: பரமக்குடியில் மாணவர் இறந்தது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை முஸ்லிம்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.

பரமக்குடியில் செப். 18-ம் தேதி ராஜா மஸ்தான் (15) என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இந்நிலையில், அவரைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, பரமக்குடியில் முஸ்லிம்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

பின்னர், வட்டாட்சியர் அண்ணாமலையிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், இறந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

முன்னதாக, பேரணியில் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான், பேச்சாளர் பாளை. ரபீக், மாவட்ட ஐக்கிய ஜமாஅத் செயலர் முகம்மது ஜமால், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் ஆரிப்கான், மனித நீதிப் பாசறை மாவட்டச் செயலர் ஜெமீல், உலமாக்கள் சபை மாவட்டத் தலைவர் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் பஜ்ருதீன், எமனேசுவரம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், நூருல்அமீன், வழக்கறிஞர் கமால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பேரணிக்கு மாவட்ட எஸ்.பி. கே.ஏ. செந்தில்வேலன் மேற்பார்வையில், டி.எஸ்.பி. பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பரமக்குடியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

No comments: