Thursday, February 19, 2009

ராமநாதபுரம் மாவட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது போகலூர்,முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி வட்டாரத்திலும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

மேலும் தற்போது கமுதி வட்டாரத்திலும் செயல்பட உள்ளது.கிராமப்புறங்களில் வறுமையை குறைத்து வாழ்வாதார வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் வளமையை பெருக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் வருகின்ற 21.02.09 அன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் முதுகுளத்தூர் டி.ஈ.எல்.சி. பள்ளியில்,படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பினை வழங்க பல முன்னனி நிறுவனங்களான சிசிசி லிமி டெட் சென்னை,எஸ்.பி.அப்பெரல்ஸ் லிமிடெட் கோவை,டி.வி.எஸ். சென்னை,இந்தியா பிஸ்டன்ஸ் லிமிடெட் சென்னை,சமுதாய கல்லூரி சிவகங்கை,ஐஐடி சென்னை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வேலை வாய்ப்பு முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் வட்டாரங்களான போகலூர்,முதுகுளத்தூர்,பரமக்குடி மற்றும் கமுதி ஆகிய பகுதிகளிலுள்ள ஐடிஐ மற்றும் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையும்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: