ராமநாதபுரம் தொகுதியில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் இன்று தீவிர பிரசாரம்
பெரியபட்டிணத்தில் சிங்கை பஷீர் தலைமையில் வரவேற்பு
பனைக்குளம், மார்ச்.30-
ராமநாதபுரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் செய்கிறார். அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகளை தொண்டர்கள் பெரிய அளவில் செய்துள்ளனர்.
பிரசாரம்
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், இன்று ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அவருக்கட்சியின் நிறுவனதலைவர் விஜயகாந்த் ராமநாதபுரம் தொகுதியில் இன்று பிசாரம் செய்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தே.மு.தி.க. கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். பெரியபட்டிணத்தில் பிரபல தொழில் அதிபரும்,பொதுசேவையாளருமான மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கை பசீர் தலைமையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் செய்யது இபுராகீம், மாவட்ட இளைஞர்அணி துணை செயலாளர் துரை, திருப்புல்லாணி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பெரிபட்டினம் சாகுல் உள்பட கட்சியினர் கவனித்து வருகின்றனர். இதேபோல் நதிப்பாலம், பனைக்குளம், புதுவலசை, சித்தார்கோட்டை, தேவிபட்டிணம் போன்ற பகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். அவரை வரவேற்க சாயல்குடி எல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி, மாநில மீனவரணி துணைசெயலாளர் முருகநாதன் தலைமையில் ராமநாதபுரம் நகர் செயலாளர் முத்தீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் தர்மராஜ், மண்டபம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்விமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி ராஜா முகம்மது, முன்னாள் மாவட்ட செயலாளர் ஓவியர் சரவணன் உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment