Friday, May 1, 2009

குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் டிரஸ்ட் பயணிகள் விடுதி திறப்பு விழா தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் டிரஸ்ட் பயணிகள் விடுதி திறப்பு விழா தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

http://www.muslimleaguetn.com/news.asp?id=830

குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் அமைந்துள்ள ஜாமிஆ பள்ளிவாசல் அருகில் தொழிலதிபர்கள் பி.எஸ். அப்துல் ரஹ்மான், மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் ஆகியோர் நிதி உதவியால் கட்டி முடிக்கப்பட்ட குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் டிரஸ்ட் பயணிகள் விடுதி திறப்பு விழா 24-4-09 அன்று இஸ்லாமிக் சென்டர் மானேஜிங் டிரஸ்டி கே.வி. அப்துல் கரீம் தலைமையில் நடை பெற்றது.
தொழிலதிபர்கள் திரு நெல்வேலி டி.இ.,எஸ். பத்ஹுரப்பானி அதிராம் பட்டினம் அப்துல் ரஜாக், காயல்பட்டினம் எல்.கே. எஸ். செய்யது அஹமது, தென்காசி வி.டி.எஸ். ரஹ் மான் பாட்சா, எஸ்.எம். கமால் முகைதீன், பெரியகுளம் மேத்தா ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

பயணிகள் விடுதியை கீழக்கரை அல்லாமா அப்ச லுல் உலமா டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் திறந்து வைத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தீன் காஸிமி, காயல் பட்டினம் நகராட்சி தலைவர் வாவு அப்துல் ரஹ்மான், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி காஸிம் ஆகியோர் பேசி னார்கள்.

விழாவில் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன், மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்ட செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் அ. அப்துல் வஹாப், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர் உட்பட ஏராளமான பேர் பங்கேற்றனர்.

No comments: