Thursday, August 14, 2008

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

சாயல்குடி அருகே நரிப்பையூர் பகுதியில் வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் மக்கள் நலத் திட்டப்பணிகளை ஜப்பான் தொண்டு நிறுவன அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.

முதுகுளத்தூர் வட்டார வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவன சார்பில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களில், பொது மக்களுக்காகப் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றி வருகின்றனர்.

குறிப்பாகக் குடிநீர் வசதி, ஊருணிகள் வெட்டிதல், சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து வருகின்றனர்.

சாயல்குடி மையத்தைச் சேர்ந்த நரிப்பையூரில் நடைபெற்றுள்ள மக்கள் நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட, ஜப்பான் நாட்டு தொண்டு நிறுவன அலுவலர்கள் சிகோ அகியோமா, டுமாகோ ஐடேகா ஆகியோர் தலைமையில் 20 பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜே. ஜெசுகரன் தலைமையில் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளிட பலரும் வரவேற்றனர்.

ஜப்பான் குழுவினர், நலத் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு பாராட்டினர்.

மேலும் நரிப்பையூர் ஜனசக்தி மகளிர் கூட்டமைப்பு பயிற்சி அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் ஜப்பான் குழுவினர் கண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜெசுகரன் தலைமயில், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் யோவான், இளங்கோவன், பால் முத்தையா மற்றும் திட்டப்பணியாளர்கள் பலரும் செய்திருந்தனர்.

No comments: