Thursday, August 14, 2008

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது


முதுகுளத்தூர்,ஆக.15-

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட் டம் நடத்தப்போவதாக அறிவித்த தியாகியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தியாகி மனைவி

கடலாடி தாலுகா ஆப்ப னூர் கிராமத்தை சேர்ந்தவர் நீல மேகத்தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவ ரது மனைவி ராமு அம்மா ளுக்கு அரசு சார்பில் ஆப்ப னூரில் 5 செண்டு நிலம் வழங் கப்பட்டது.

ஆனால் இந்த இடத்தை அரசு சார்பில் ஊரணி வெட் டுவதற்காக ஒதுக்கியுள்ளனர். இந்த இடத்திற்கு பதிலாக அவருக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இது வரை வேறு இடம் ஒதுக்கி வழங்கப்படவில்லையாம்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் அவர் சுதந்திர தினத்தன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தனது குடும் பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அறிவித் திருந்தார். இதுகுறித்து கட லாடி கிராம நிர் வாக அதிகாரி முத்துவேல் போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கட லாடி போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ் பெக்டர் சிவஞானமூர்த்தி மற் றும் போலீசார் தேச விரோத செயல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராமு அம் மாள், அவரது மகன் கணே சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத் தனர்.

No comments: