Thursday, August 14, 2008

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி


தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்


ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் மாவட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்கா ளர் பட்டியல் குளறுபடியாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பலர் அலைக்கழிக்க வைக்கப்படுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை ஜூலை 24 முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அந்தந்த

வாக்குச்சாவடிகளில் பெறவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி, அங்கு பொதுமக்களிடம் பூர்த்தி செய்து பெறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, மாவட்ட நிர்வாகமும், பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றால் எந்த பட்டியலும் வைக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலை பார்த்தால் மட்டுமே தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். வாக்காளர் பட்டியலை அலுவலர்கள் காட்ட மறுப்பதாக பல இடங்களில் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதனால், வாக்குச்சாவடி மையங்கள் அல்லது சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு, குடிபெயர்ப்பு மற்றும் நீக்கம் உள்பட விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. விண்ணப்பங்கள் ஸ்டாக் இல்லை. ஜெராக்ஸ் கடையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் கூறி பொதுமக்களை அனுப்பி வைக்கின்றனர். ராமநாதபுரம் சபாநடேசய்யர் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் முதல் பல வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பம் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதுபோன்ற தவறுகளை சில அரசு அலுவலர்கள் தொடர்ந்து செய்து வருவ தால் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை தெரிந்து கொள்ள முடி யாமல் மக்கள் தினமும் ஏமாற்றம் அடைகின்றனர்.

கடந்த வாரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது நிறைய குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினால் வாக்காளர் பட்டியலின் குளறுபடி வெளிச்சத்திற்கு வரும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

No comments: